இந்த வலையதளத்தில்உள்ள நல்ல செய்திகள் என்னைச் சார்ந்த பல நண்பர்களுக்குசென்றடைய வேண்டும்என்ற நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டது. இதுவரை நான்பதிவிட்டபதிவுகளும்,இனி பதிவிடப்போகும்பதிவுகளும்எனது சொந்தபடைப்புகள்அல்ல. பலபதிவர்கள்எழுதிய நல்லபதிவுகளைத்தான்இங்குதொகுத்துள்ளேன்.

வெள்ளி, 21 நவம்பர், 2014

118 பிடித்ததைப் பிடி பாகம் - 2

இன்றைய நவநாகரிக உலகில், எதிலும் வேகம், அவசரம் என்று சென்று கொண்டிருக்கும், இன்றைய தலிமுரையினரிடம் உணவை பற்றிய அக்கறை, விழிப்புணர்வு குறைவாக உள்ளது. அதிலும் இன்று பெரும்பாலும் வீடுகளில் சமையல் செய்வதை விட உணவகங்களில் தயாரிக்கும் உணவுகளையே விருப்ப உணவாக கொண்டுள்ளனர். அதையும் மீறி வீட்டில் சமைக்கலாம் எனில் நொடியில் தயாராகும் மசாலா உணவுகளைப் பற்றி விளம்பரங்களின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு அதை கொண்டு தயாரிக்கும் உணவுகள் நம் உடலை பதம் பார்க்கின்றன. அவசர கதியால் காலை வேளையில் அலுவலகம் அல்லது எதாவது ஒரு பணிக்கு எட்டு மணிக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய சூழ்நிலையில் ஏதாவது ஒரு உணவை காலை சிற்றுண்டி செய்து சாப்பிட்டு விட்டு ஓடுகிறோம்.

வீட்டில் உள்ள பெண்கள் தனக்கு என்ன உணவு பிடிக்குமோ அந்த உணவை சமைத்துவிடுகிறார்கள். அல்லது கணவன் குழந்தைகளுக்கு என்ன உணவு பிடிக்கிறதோ அதை சமைத்துவிடுகிறார்கள். ஆனால் அது உண்மையில் வீட்டில் உள்ளவர்களுக்கு பிடிக்கிறதா, இல்லையா என்று யோசிப்பதே கிடையாது. உதாரணத்திற்கு ஒரு வீட்டில் சப்பாத்தியும், குருமாவும் செய்து வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். குடும்பத்தினர் அந்த சாபாதியை எடுத்து சாப்பிட ஆரம்பிக்கின்றனர். குடும்பத்தில் உள்ள ஐந்து நபர்களில் இருவருக்கு மட்டுமே அந்த உணவு பிடிக்கிறது. மற்ற மூவருக்கும் பிடிக்கவில்லை. அந்தமூன்று பெரும் வேற வழியில்லாமல் அந்த உணவை சாப்பிடுகின்றனர். ஏனேன்றால் சாப்பதியை தவிர வேற உணவு உணவு சமைக்காமல் அதையே சாப்பிட்டு அலுவலகத்திற்கோ, பள்ளிக்கோ செல்கின்றனர்.

பிடிக்காத உணவை உட்கொள்வதால் உடல் கஷ்டபடுகிறது. எனவே பிடிக்காத உணவை சாப்பிட்டு சென்ற மூவரும் அலுவலகத்திலோ பள்ளியிலோ தங்கள் வேலையை சரிவர செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர். உணவின் மூலம் சக்தி கிடைப்பதற்கு பதிலாக அது கஷ்டத்தையே தருகிறது. இனிமேல் வீடுகளில் உணவு தயார் செய்யும் பொழுது இரண்டு மூன்று வகை உணவுகளை, சாப்பிடும் உணவு மேஜையில் தயாராக வைத்துக்கொள்ளவேண்டும். உதாரணத்திற்கு தேன், நெல்லிக்காய் வற்றல், பன், ரொட்டி, ஊறுகாய் போன்றவை. இவை எளிதில் கெட்டுப்போகாது. அதனால் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

இப்படி குறைந்தது இந்து அல்லது ஆறு வகை ரெடிமேட் உணவுகளை மேஜையில் வைத்துக்கொள்ளும் பொழுது,ஒருவேளை சமைத்த உணவு பிடிக்கவில்லை எனில் மேற்கொண்ட ரெடிமேட் உணவுகளில் புகுந்துவிடலாம்.

ஆனால் இதைக் கேட்க்கும் போது முதலில் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். "ஏங்க காலையில் இட்லியோ, தோசையோ சமைப்பது பெரிய விஷயம். இதில் ஐந்து ஆறு வகை உணவு சமைப்பது என்ன சுலபமான வேலையா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. யோசித்துப்பாருங்கள். நாம் எதற்காக வாழ்கிறோம். மகிழ்ச்சியாக நிம்மதியாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக பணம் மட்டும் நிறைய சேர்த்து பொன் நகைகள், நிலம், ஆடம்பர பங்களா, வங்கி சேமிப்பில் போடுவது என்று நிறைய செய்கிறார்கள்.

எனக்கு புரியவில்லை, எதற்காக நிறைய பணம் சேர்க்கிறார்கள் என்று. பல மனிதர்கள் பணம் சேர்த்து வைத்து விட்டு இறந்து விடுகிறார்கள். எதற்கு இந்த மானம் கெட்ட பிழைப்பு ? பணம் சம்பாதிப்பது செலவளிப்பதற்குதானே ? தனக்கு பிடித்த உணவுகளை சாப்பிடுவதற்கு கூட செலவு செய்யவில்லை என்றால் வேறு எந்த செலவு செய்ய போகிறார்கள்.

எனவே பண வசதி படைத்த மனிதர்கள் சமையலுக்காக தாராளமாக செலவு செய்யுங்கள். சமைப்பதற்காக ஆட்களை நியமிக்கலாம். நிறைய உணவு வகைகளை சமையுங்கள். பிடித்தால் சாப்பிடுங்கள் இல்லை என்றால் மற்றவர்களுக்கு கொடுங்கள். இல்லாவிட்டால் அது குப்பைக்கு கூட போகட்டும், இதனால் ஒன்றும் பாதிப்பு இல்லை.

உணவை வீணடிக்கக் கூடாது என்று பலரும் கூறுகிறார்கள். நமக்கு வேண்டாதவற்றை உடல் வீனகிப்போகும் என்று அர்த்தம். எனவே குப்பையில் போடுவதை பற்றி கவலைப்படவேண்டாம். குப்பையில் வீசவேண்டிய உணவை வயிற்றுக்குள் கொட்டினால் உடல் வீணாகிவிடும். உணவை வீணாக குப்பைத்தொட்டியில் கொட்ட வேண்டாம் என்று கூறுகிறார்கள். அப்படி வீணான உணவை குப்பைத்தொட்டியில் கொட்டுவதில் எந்த தவறும் இல்லை. அந்த உணவை நாய்களோ அல்லது பூச்சிகளோ சாப்பிடத்தான் போகிறது. மீண்டும் அது இயற்கையோடு ஒன்றிவிடும். அதனால் எந்த ஒரு பாதிப்பும் கிடையாது என்பதை புரிந்துகொண்ட உணவை விரையமாக்குங்கள்.

புரிந்து கொள்ளுங்கள் ! நான் விரையமாக்குங்கள் என்று சொல்வதன் அர்த்தம் தேவையில்லாமல் விரையமாக்குங்கள் என்ற பொருள் அல்ல. உங்களுக்கு பிடிக்காத உணவை கீழே கொட்டுவதற்கு தயங்காதீர்கள் என்பது தான்.

எனவே உணவிப் பொறுத்த வரையில் நாக்குக்குப்பிடித்தால் மட்டும் போதும். சிலர் சில விசயங்களை ஆழ்மனதில் பதிவு செய்து விடுவார்கள். அதாவது எனக்கு இனிப்பு பிடிக்காது . காரம் பிடிக்காது. இது ஒரு மாயை இது ஆழ்மனதில் பதிவு செய்யப்பட்ட ஒரு பதிவு.

உதாரணமாக இனிப்பு பிடிக்காது ஏன் என்று தெரியவில்லை, காரம், உப்பு, புளிப்பு உள்ள உணவுகள் என்றால் சாப்பிட விரும்புகிறேன். ஆனால் ஏனோ இனிப்பு பிடிக்கவில்லை. ஏற்கனவே இனிப்பின் மூலம் கிடைக்கும் சத்துக்கள் ஏன் உடலில் அதிகம் இருக்கின்றன என நம்புகிறேன். இப்போது நிகழ்ச்சியில் உரையாற்றுவதால் ஒருவேளை எனக்கு இனிப்பு பிடிக்காமல் இருக்கலாம். இதுவே நான் வேற வேலை மாற்றிசெய்ய நேரிட்டால் பிடிக்கலாம். எனக்கு இனிப்பு பிடிக்காது என்ற பதிவை நான் அளித்து விட்டேன். எனவே இனிப்பு சாப்பிடமுயற்சி செய்து பார்ப்பேன். பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுவேன். தினமும் முயற்சி செய்து கொண்டு தான் இருப்பேன்.

உதாரணமாக உங்களிடம் பத்து பேரிச்சம்பழம் கொடுத்தால் நீங்கள் பத்தையும் சாப்பிடுவீர்கள். ஆனால் நான் ஒன்று தான் சாப்பிடுவேன். அதையும் நன்றாக சுவைத்து சாப்பிடுவேன் அதன் சுவை திகட்டுகிறது. அதற்குமேல் அதில் உள்ள சுவைக்காக இரண்டாவது சாப்பிடமுடியவில்லை. நாக்கு வேண்டாம் என்ற கூறுகிறது. உடனே எனக்கு இனிப்பு பிடிக்காது என்று ஒரு பதிவை ஏற்படுத்தவில்லை ஒரு வேளை மீண்டும் நாளை பிடிக்கலாம். ஒரு சமயம் ஒரு வீட்டிற்கு சென்றிருந்த பொழுது அங்கு ஒரு இனிப்பு எனக்கு வழங்கப்பட்டது. அந்த இனிப்பு சுவை எனக்கு மிகவும் பிடித்திருந்தால் 5 முறை வாங்கி இனிப்பு சாப்பிட்டேன். ஏன் இனிப்பு மட்டுமே சாப்பிட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை, அந்த சமயம் எனக்கு இனிப்பு அவ்வளவு பிடித்தமானதாகவும் இருக்கிறது.

எனவே உணவைப் பொறுத்தவரையில் நீங்கலாக உன்கள் ஆழ்மனதில் ஏற்படுத்தி வைத்திருக்கும் பதிவுகளை அழித்துவிடுங்கள். நீங்கள் உங்களுக்கு அது பிடிக்கும் இது பிடிக்காது என்று ஒரு வரைமுறை வைத்துக்கொள்ளாதீர்கள். ஒவ்வொருமுறையும் சோதித்துப்பாருங்கள். இந்த உணவு பிடிக்கிறதா என்று, ஏனென்றால் நம் உடலில் உள்ள தன்மைகள் ஒவ்வொருமுறையும் மாறிக்கொண்டே இருக்கிறது. நமது வேலைகள் மாறுகிறது. வேறு வேறு வீடுகளில், மழைக்காலம்,வெயில்க்காலம், குளிர்க்காலம் என்று பஞ்சபூதங்களின் மாற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. எனவே நமக்கு என்ன பிடிக்கும் என்று நமக்கே தெரிவதில்லை. இந்த உண்மையை புரிந்து கொண்டு பிடித்த உணவை தாராளமாக சாப்பிடலாம்.

எனவே ஒரு விதிமுறை என்னவெனில் நமக்கு எந்த உணவு பிடிக்கிறதோ அது நமக்கு மருந்து. எந்த உணவு பிடிக்கவில்லையோ அது நமது உடல் நலத்திற்கு கேடு என்ற தத்துவத்தை மனதில் ஆழமாக பதிவு செய்து கொள்ளுங்கள்.

நல்லது கெட்டது என்பது வேறு, பிடித்தது, பிடிக்காதது என்பது வேறு. பலர் நல்லது என்பதற்காக பலப்பொருட்களை சாப்பிடுகிறார்கள். உதாரனதிர்க்காக பாகற்காய் நல்லது என்று படித்திருப்பார்கள். தினமும் பாகற்காய் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். இது கெடுதலான விஷயம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

உதாரனதிர்க்காக ஒரு 5 வகை இனிப்பு பண்டங்களை உங்களுக்கு தருகிறேன். நீங்கள் சாப்பிட்டுப்பாருங்கள். ஒரு குறிப்பிட்ட இனிப்பு வகை மட்டும் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். மீதம் உள்ள நான்கு இனிப்புகள் உங்களுக்கு பிடிக்காது. எனவே இனிப்பில் பலவகை உள்ளது.

காரத்தில் பலவகை உள்ளது, மிளகாய் காரம், மிளகு காரம், இஞ்சிக் காரம் என பலவகை காரம் உள்ளது. எனவே எந்த காரம் பிடிக்கிறதோ அந்த காரம் சாப்பிடுங்கள். ஒரு விருந்து வைக்கிறார்கள் முப்பது பேர் சாப்பிடுகிறார்கள். சாப்பாடு, குழம்பு, ரசம், மோர் என பலவகை உணவுகளை சமைத்து பரிமாறுகிறார்கள். அனைவரும் சாப்பிட்டு முடிக்கிறார்கள். அவர்களிடம் கேளுங்கள் உங்களுக்கு எந்த உணவு பிடித்திருக்கிறது என்று, அவர்களில் ஒருவர் கூட்டு என்பார் மற்றொருவர் சாம்பார் பிரமாதம் என்பார். பாயசம் சூப்பர் என்பார் மற்றொருவர். இப்படி ஒவ்வொருவரும் தனக்கு பிடித்தது என்று ஏதோ ஒன்றை குறிப்பிடுவார்கள். ஒவ்வொருவருக்கும் வேறுவேறு உணவு பிடிப்பதாக சொல்வார்கள். எனவே ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், ஒரு உணவை குறிப்பிட்டு இது நன்றாக இருந்தது. அது நன்றாக இருந்தது என்று சொன்னால கவலைபடாதீர்கள். தன்னுடைய நாக்குக் பிடிக்கவில்லை என்றால் நன்றாக இல்லை என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக நான் சாப்பிட்டு முடித்தவுடன் கேரட் பொரியல் நன்றாக இருந்தது, பீட்ரூட் பொரியல் நன்றாக இல்லை, பிடிக்கவில்லை என்று சொன்னால் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் எனது நாக்குக்கு பீட்ரூட் பொரியல் பிடிக்கவில்லை அவ்வளவுதான்.

எனவே எந்த ஒரு இடத்தில் சாப்பிட்டாலும் இது நன்றாக இருந்தது. இது நன்றாக இல்லை என்ற வார்த்தையை யாரும் பயன்படுத்தாதீர்கள். இது மிகவும் நன்றாக இருக்கிறது. ஆனால் எனக்குப் பிடிக்கவில்லை என்று கூறினால் அதில் அர்த்தம் உள்ளது.

உலகில் உள்ள அனைத்துமே அதனதன் நிதியப்படி ஒழுங்காகத்தான் இருக்கிறது. எல்லாமே நன்றாகத்தான் இருக்கிறது. அவரவர் பார்க்கும் பார்வையைப் பொறுத்து தான் அதிஸ் மாறுபாடு தெரிகிறது.

எனவே இனிமேல் ஒரு உணவை எனக்குப்பிடித்திருக்கிறது அல்லது பிடிக்கவில்லை என்ற அடிப்படையிலேயே பாருங்கள். இது நல்லது, கெட்டது என்ற பார்வையில் பார்க்காதீர்கள்.

எனவே நாம் பிடித்த உணவை மட்டுமே உண்ண வேண்டும். பிடிக்காத உணவுகளைப் பற்றி யோசிக்கவேண்டியதில்லை. அவற்ற்றை விட்டு விடலாம். இதப் பற்றி இன்னும் விரிவாக கூற எத்தனை உதாரணங்கள் வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டே போகலாம். இருப்பினும் இதுவே நமக்கு நன்றாக புரிந்திருக்கும் என்பதால், இனிமேல் நிம்மதியாக சாப்பிடுங்கள், சாப்பிடவே நாம் பிறந்த்திருக்கிறோம். எனவே உணவைப் பார்த்து நாம் பயப்பட வேண்டியதில்லை. முட்டாள்களைப் பார்த்து பயப்படுங்கள்.

பலர் தனக்கும் தெரியாமல், தானே தவரானவற்றைத் தெரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் தவறாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இது அவர்களின் தவறல்ல, நாம் நல்லது என்று நினைத்து தான் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம். ஆனால் நாம் கட்ட்ருகொண்டதே நல்லவை அல்ல என்பதே பலருக்குத் தெரிவதில்லை.

எனவே அவர்களை நாம் மன்னிப்போம். நாம் அனைவரும் புரியாமல் இருக்கிறோம். எந்தாலவுக்கு, எவ்வளவு விசயங்களைப் புரிந்துகொள்கிறோமோ அந்த அளவிற்கு நிம்மதியாக அமைதியாக, மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக வாழ முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக