இந்த வலையதளத்தில்உள்ள நல்ல செய்திகள் என்னைச் சார்ந்த பல நண்பர்களுக்குசென்றடைய வேண்டும்என்ற நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டது. இதுவரை நான்பதிவிட்டபதிவுகளும்,இனி பதிவிடப்போகும்பதிவுகளும்எனது சொந்தபடைப்புகள்அல்ல. பலபதிவர்கள்எழுதிய நல்லபதிவுகளைத்தான்இங்குதொகுத்துள்ளேன்.

வெள்ளி, 21 நவம்பர், 2014

114 நீர் பிராணன் - பகுதி - 1

பிராணன் என்றல் என்ன ?
பிராணன் என்பது ஒரு சக்தி. ஆற்றல், இந்த சக்தியின் மூலமாக இந்த பிரபஞ்சம் இயங்கி வருகிறது. இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும், அனைத்து விதமான பொருட்களுக்கும் இயக்க சக்தி இந்த பிராணன் ஆகும். பிராணன் என்பதை வீட்டிலுள்ள நாம் அன்றடா பயன்படுத்தும் மின்சாரத்தை போன்றது. நமது வீட்டில் மின்சாரம் உள்ளது. அது மின் கம்பியின் மூலமாக வீட்டில் அனைத்து இடங்களுக்கும் செல்கிறது. இந்த மின்சாரம் மின்விசிறியில் நுழையும்போது அது சுற்றுகிறது. அதே மின்சாரம் ஒரு ரேடியோ பெட்டிக்குள் செல்லும்போது அது பாடுகிறது. அதுவே மாவு அரைக்கும் இயந்திரத்திற்குள் செல்லும்போது சுற்றுகிறது. இஸ்திரிப்பெட்டிக்குள் செல்லும்போது சூடாகிறது. 

ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு உயிரும், பிராணனை தனது இயக்க சக்திக்காக, தான் செய்யவேண்டிய செயலுக்காக எரிபொருளாக பயன்பபடுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு உயிரும் பிராண சக்தியை உற்பத்தி விதமும் அதற்கு தேவையான மூலப்பொருளும் வேறுவேறு. உதாரணமாக மனிதன் ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு அதன்மூலமாக பிராணனை உற்பத்தி செய்ய பயன்பட்ட ஆக்ஸிஜன் கார்பன்-டை-ஆக்ஸைடாக அதாவது கரியமில வாயுவாக மாறுகிறது. இந்த கார்பன்-டை-ஆக்ஸைடு தாவரத்திற்குள் செல்லும்போது பிராணசக்தியாக மாறுகிறது. 


ஒரு பொருளின், ஒரு உயிரின் கழிவு இன்னொரு பொருளுக்கு, உயிருக்கு மூலப்பொருளாக, சாப்பிடும் உணவாக இருக்கிறது. இதுதான் உலக நியதி. இதை புரிந்துகொண்டால் பல விஷியங்களைப் புரிந்துகொள்ளலாம்.


உதாரணமாக நாம் மலம் கழிக்கிறோம். அந்த மலத்தை ஒரு நாய் சாப்பிடுகிறது. நமது கழிவுப்பொருள் ஒரு நாய்க்கு உணவாக இருக்கிறது. நாம் அசிங்கமாக அருவெறுப்பாக நினைக்கும் நமது மலம் அந்த நாய்க்கு அமிர்தமாக இருக்கிறது. இதேபோல் ஒரு மரத்தில் ஒரு மாங்காய் இருக்கிறது. அது நாள்பட நாள்பட கனிந்து மரத்திலிருந்து கீழே விழுகிறது. அந்த மரம் எப்பொழுது அந்த மாம்பழம் அழுகிப்போகிறதோ அது வேண்டாம் என்று கீழே வீசுகிறது. நாம் கீழே கிடக்கும் மாம்பழத்தை ஆசையாக எடுத்து முக்கனிகளில் ஒன்றாக கருதி அதை ஆசையாக வாயில் வைத்து சுவைத்து சாப்பிடுகிறோம். ஒருவேளை அந்த மரம் நினைக்கலாம், நம் மலத்தை இந்த மனிதன் ஓடிவந்து சாப்பிடுகிறானோ என்று, எப்படி இவனால் சாப்பிட முடிகிறது என்று அந்த மரம் யோசிக்க வாய்ப்பு உள்ளது. மரத்தின் மலம் மனிதனின் உணவு, மனிதனின் மலம் நாய்க்கு உணவு. இதுதான் உலக நியதி. இது ஒரு சுழற்சி(வட்டம்). இந்த சுழற்சியின் மூலமாகத்தான் இந்த உலகம் இயங்கி வருகிறது. அதனால் பிராணன் என்பது ஒருவிதமான சக்தி. இந்த பிராணன் மூலம்தான் அனைத்தும் இயங்குகிறது. 


ஒவொரு மனிதனுடைய உடலிலும் பிராணனமயகோசம் என்று கண்ணுக்கு புலலப்படாத சக்தி (அ) ஆற்றல் உள்ளது. நமது உடலிலுள்ள அனைத்து செல்களும் உறுப்புகளும் பிராண சக்தியின் மூலமாகத்தான் இயங்கி கொண்டிருக்கிறது. எப்பொழுதெல்லாம் நமக்கு அதிக சக்தி கிடைக்கிறதோ அதை நமது உடல் பிராணனாக மாற்றி சேமித்து வைத்து கொள்ளும். நாம் மின்சாரத்தை சேமித்து வைத்துக்கொள்ள சப்ஸ்டேசன் என்று மின்சாரத்தை சேமித்து வைக்கும் ஒரு அமைப்பை பயன்படுத்துவதுப்போல நமது உடல் பிராண சக்தியை சேமித்து வைத்துக்கொள்கிறது. ஒருசில மனிதர்கள் ஒரு மணிநேரம் பேசியவுடன் களைப்படைந்து விடுகிறார்கள். ஒருசிலர் எவ்வளவு நேரம் பேசினாலும் களைப்படைவதே இல்லை.அவர்கள் பிராண சக்தியை சேமித்து வைத்து பயன்படுத்துவார்கள். மனிதனின் உயிர் அவன் சேர்த்து வைத்துதிருக்கும் பிராண சக்தியைப் பொறுத்து வீரியமாக இருக்கும். மொத்த பிராணன் இழந்தவுடன் நமது உயிர் நம்மை விட்டுப்பிரிகிறது. எனவே ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொள்ளவேண்டிய அத்தியாவசியமான விஷயம் பிராணன்.
பிராணன் எப்படி பரிமாற்றப்படுகிறது ?


உதாரணமாக இரண்டு பாத்திரத்தில் நீர் இருக்கிறது. ஒரு பாத்திரத்தில் 1௦௦ டிகிரி கொதிக்கும் தண்ணீரையும், இன்னொரு பாத்திரத்தில் 2௦ டிகிரி கொதிநிலை உள்ள தண்ணீரையும் ஒன்று சேர்த்தால் என்ன ஆகும். இப்பொழுது மொத்த தண்ணீரும் 4௦ அல்லது 50 டிகிரிக்கும் வந்துவிடும். அதிக சூடும் அதிக குளிர்ச்சியும் ஒன்று சேரும்போது தண்ணீர் இயல்பான நிலைக்கு வந்துவிடுகிறது. ஒரு பொருள் 1000 மதிப்பிற்கு பிராணன் இருக்கும்பொழுது, இன்னொரு பொருளில் 500 மதிப்பிற்கு பிராணன் இருந்தால், இரண்டும் சேர்த்து 1500 மதிப்புள்ள பிராணனாக மாறி, இரண்டு பொருளும் பிராணனை 750, 750 என்று சரிபாதியாக பிரித்துக்கொள்கிறது. இதுதான் பிராணன் பரிமாற்றப்படும் உண்மை. 


உதாரணமாக சில சாமியார்களை தொடக்கூடாது என்று கூறுவார்கள். ஏனென்றால் அவர்கள் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு பலவிதமான பயிற்சிகள் செய்து பிராணசக்தியை சேமித்து வைத்திருப்பார்கள். சாதாரண மனிதர்களும், நோயாளிகளும், உடலில் பிராணன் பற்றாக்குறையுள்ள மனிதர்களும் அவரைத் தொடும்பொழுது பிராணன் நோயாளியின் உடலுக்கு பாய ஆரம்பிக்கிறது. எனவேதான் பலர் தங்களைத் தொடக்கூடாது, தூரமாக நின்று பேசவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.


அக்குபஞ்சர், அக்குபிரசர், டச் ஹீலிங் சிகிச்சை,பிராண சிகிச்சை இதுதெல்லாம் இது சம்பந்தப்பட்டதுதான். நோயாளியை டச் தெரபி (அ) தொடு சிகிச்சை என்ற முறையில் ஒரு சிகிச்சையாளர் தொடும்பொழுது நோயாளியின் உடலில் பிராணனை அனுப்பி நோயையை குணப்படுத்த செய்கிறார்கள். மனத உடலில் வரும் அனைத்து நோய்களுக்கும் ஒரே மருந்து பிராணன். உங்களுக்கு என்ன நோய் உள்ளது என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சிகிச்சையாளர் தன் உடலில் உள்ள பிராணனை நோயாளிக்கு செலுத்துவதன் மூலமாக இந்தப் பிராணன் நோயாளியின் உடலில் சென்று, எந்த இடத்தில், எந்த உறுப்பில், எந்த மூலையில் நோய் இருக்கிறதோ அதை குணப்படுத்தும்.


எனவே தண்ணீர் எப்படி பள்ளத்தை நோக்கி ஓட்டுகிறதோ, பிராணன் பற்றாக்குறை உள்ள இடத்தை நோக்கி ஓட ஆரம்பிக்கும்.


சில நேரங்களில் நமது வீடுகளில் இரண்டு குழந்தை இருக்கும்போது ஒரு குழந்தைக்கு காய்ச்சல் வந்து படுத்திருக்கும். மற்றொரு குழந்தை ஆரோக்கியமாக விளையாடிக்கொண்டிருக்கும். இந்த ஆரோக்கியமான குழந்தை காய்ச்சல் வந்த குழந்தை பக்கத்தில் போய் தொட்டு விளையாடும்போது, ஆரோக்கியமான குழந்தையின் பிராண சக்தி, காய்ச்சல் வந்த குழந்தையின் உடலில் பாய்ந்து காய்ச்சல் குணமாகிவிடும். இப்பொழுது காய்ச்சல் வந்த குழந்தை குணமாகி பள்ளிக்கு சென்றுவிடும். ஆனால் ஆரோக்கியமான குழந்தை காய்ச்சல் வந்து வீட்டில் படுத்துவிடும். அதனால்தான், பலரும் சகுனம் பார்க்கிறார்கள். உதாரமாக விதவைகள், நோயாளிகள் குறுக்கே சென்றால் நாம் போகிற காரியம் விளங்காது என்று. அது அப்படி கிடையாது. அவர்கள் மனதால் வருத்தத்துடன் இருக்கும் போது பிராணன் குறைவாக இருக்கும். இப்படி நோயாளிகள், மனதால் வருந்தி அவஸ்தை படுபவர்கள் பிராணன் குறைவாக இருக்கும்போது அவர்களை தாண்டிச்செல்லும்பொழுதோ, அவர்களை தொடும்பொழுதோ, அவர்கள் அருகில் இருக்கும் பொழுதோ நமது பிராணன் உறியப்படுகிறது. இதனால் நாம் சக்தி இழக்கிறோம். எனவே தான் இதைப்போன்ற சகுனங்களை நம் முன்னோர்கள் பார்த்துகொண்டிருக்கிறார்கள். அனால் வேடிக்கை என்னவென்றால், அந்த விதவைப்பேன் மனதில் சந்தோசமாக யோகா செய்துகொண்டு, ஒழுங்காக சாப்பிட்டுக்கொண்டு பிராணன் அதிகமாக சேமித்து வைத்துக்கொண்டிருந்தால் நாம் செல்லும்போது அவர்களை தொடும்பொழுது நமக்கு பிராணன் கிடைக்கும் என்பதுதான் உண்மை. இதில் யார் என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. யாரிடம் பிராணன் இருக்கிறது என்று மட்டுமே பார்க்க வேண்டும். இப்பொழுதெல்லாம் குடும்பத்தில் உள்ளவர்கள்தான் பிராணன் இன்றி தவிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. 


ஒருவர் நோயாளியாக படுத்திருக்கும்போது ஏன் சொந்தக்காரர்கள் அவரைப் பார்க்க வருகிறார்கள் என்றால், ஆரோக்கியமாக உள்ள அனைத்து நண்பர்கள், உறவினர்கள் அவரைப் பார்த்து அருகில் அமர்ந்து, கவலைப்படாதே நான் இருக்கிறேன், தைரியமாக இரு என்று சொல்லும்போது பிராணன் பரிமாற்றப்படுகிறது. அப்பொழுது நோயாளிகள் குனமாவதற்கு மருந்து கிடைக்கிறது. எனவே நமது உறவினர் யாராவது உடல்நிலை சரியில்லாதபோது எல்லோரும் கிளம்பிப்போய் பார்க்கிறோம். அப்படி பார்க்கக்கூடாது. யார் ஆரோக்கியமாக இருக்கிறார்களோ நீங்கள் மட்டும்தான் போய்ப்பார்க்க வேண்டும். ஏற்கனவே நோயாளியாக இருக்கும் நபர்கள், பிராண சக்தி இல்லாத நபர்கள் பல நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்கள், மனதில் குழம்பிப்போய் இருக்கும் நபர்கள் நிம்மதியாக தூக்கம் இல்லாத நபர்கள் நோயாளியை பார்க்கச் செல்லக்கூடாது. அப்படி செல்லும்போது மேலும் அவரை நோயாளியாக ஆக்குகிறோம் என்பதுதான் உண்மை.
நானும் தொடுசிகிச்சை, அக்குபஞ்சர்,அக்குபிரஷர்,பிராண சிகிச்சை கற்றுக்கொண்டு, சில ஆண்டுகள் சிகிச்சை அளித்து வந்தேன். நான் தூக்கம் இல்லாதபோதோ, அல்லது மனதில் குழப்பம் இருக்கும்போதோ நான் யாருக்கும் சிகிச்சை அளிக்கமாட்டேன். எனவே நானே ஆரோக்கியம் இல்லாமல் இருக்கும்போது நோயாளியின் பிராணன் எனக்கு வர வாய்ப்பு உள்ளது. எனவே நாம் இந்த பிரபஞ்சத்தில் இருந்து பலவழிகளில் பிராணனை சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம்.


பிராணன் எந்தெந்த வழிகளில் நமக்கு கிடைக்கும் ?
1. உண்ணும் உணவின் மூலம் பிராணன் கிடைக்கிறது.
2. குடிக்கும் தண்ணீர் மூலம் பிராணன் கிடைக்கிறது.
3. மூச்சுக்காற்றின் வழியாக பிராணன் கிடைக்கிறது.
4. தூங்கும்போது பிராணன் கிடைக்கிறது.
5. குளிக்கும்போது அந்த நீர் மூலமாக உடலுக்கு பிராணன் போகிறது.
6. நமது எண்ணங்கள் அமைதியாக, நிம்மதியாக இருக்கும்போது சக்கரங்கள் மூலமாக நமது உடலுக்கு பிராணன் செல்கிறது. 


இப்படி பல வழிகளில் நாம் பிராணனை சம்பாதித்து கொண்டிருக்கிறோம். பல வழிகளில் பிராணனை செலவு செய்துகொண்டும் இருக்கிறோம். கண் பார்ப்பதற்கு பிராணன் தேவைப்படுகிறது. படிப்பதற்கு, நடப்பதற்கு பிராணன் தேவைப்படுகிறது. உடல், மனம், புத்திக்குள் வேலை கொடுக்கும்பொழுது நமது பிராணன் செலவாகிறது.

எவ்வகை தண்ணீரில் குளிக்கலாம் ?
கொதிக்க வைத்த தண்ணீரில் குளிக்கக்கூடாது. ஏனென்றல் தண்ணீரை கொதிக்க வைக்கும்பொழுது தண்ணீரில் உள்ள பிராணன், ஆற்றல்(சக்தி) தண்ணீரைவிட்டு வெளியே சென்றுவிடுகிறது. தண்ணீரில் உள்ள உயிர்சத்துப்பொருட்கள், ஆர்கானிக் பொருட்கள் கொதிநிலையில் அனைத்தும் ஆவியாகிவிடும். இந்த கொதிக்கவைத்த தண்ணீரில் நாம் குளிக்கும்போது நாம் ஏற்கனவே பார்த்ததுபோல பிராணன் இல்லாத பொருளுக்கு, பிராணன் உள்ள பொருளிலிருந்து பிராணன் பரிமாற்றப்படும் என்ற நியதிப்படி கொதிக்கவைத்த தண்ணீரில் குளிக்கும்போது அந்த பிராணன் இல்லாத தண்ணீர் நமது உடல் வழியாக கடக்கும்பொழுது, உடலில் உள்ள அனைத்து பிராணனையும் எடுத்துவிட்டு பாத்ரூம் வழியாக வெளியேறிச் செல்கிறது. 


கொதிக்கவைத்த தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ஆபத்து. எனவே இனி வாழ்நாளில் கொதிக்கவைத்த தண்ணீரில் குளிக்க வேண்டாம்.
குளிர்ச்சியான நீரில் குளிக்கலாமா ? 


குளிர்ச்சியான நீரிலும் குளிக்கக்கூடாது. நமது உடலின் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் இருந்தால் அதுதான் ஆரோக்கியம். குளிர்ந்த நீரில் குளிக்கும்போது நமது தோளில் உள்ள அனைத்து செல்களும் அந்த குளிர்ந்த நீரை 37 டிகிரி செல்சியஸ் ஆக மாற்றுவதற்கு அதிக வேலை செய்யவேண்டியிருக்கிறது. அதனால் இந்த மாற்றத்திற்கு அதிக சக்தி(ஆற்றல்) செலவாகிறது. எனவே குளிர்ந்த நீரிலும் குளிக்கக்கூடாது.

எந்த தண்ணீரில் குளிக்கலாம் எவ்வளவு சூடாக குளிக்கலாம் ?
தண்ணீரை கொதிக்கவைத்து குளிக்கக்கூடாது. குளிர்ந்த நீரிலும் குளிக்கக்கூடாது. ஆனால் நீரை விலாவி குளிக்கலாம். அது என்ன விலாவி குளிக்கலாம்? கிராமங்களில் வழக்கமாக நாம் கேள்விப்படும் வார்த்தை, “தண்ணீர் விலாவி வைத்திருக்கிறேன், போய் குளிங்க” என்பது. அதாவது நாம் ஒரு வாளி தண்ணீரில் குளிக்கிறோம் என்றால், பாதி வாளி தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்து சூடுசெய்து, பாதி வாளி தண்ணீரை கொதிக்க வைக்காமல் பிராணன் இருக்கும் தண்ணீரை கொதிக்கவைத்த பிராணன் இல்லாத தண்ணீருடன் சேர்த்து குளிக்கும்போது அந்த தண்ணீரில் சூடும் இருக்கும், பிராணனும் கிடைக்கும். இது உடலுக்கு ஆரோக்கியமான குளியல். எனவே இனி நம் வாழ்நாளில் முழுவதும் கொதிக்கவைத்த தண்ணீரில் குளிக்கவேண்டாம். 


குளிர் பிரதேசங்களில் நாம் வெந்நீரில் தான் குளிக்கவேண்டும். அதிக உஷ்ணம் உள்ள நாடுகளில் குளிர்ந்த நீரில் தான் குளிக்கவேண்டும். குளிரும் இல்லாத, உஷ்ணமும் இல்லாத மிதவெப்ப நாடுகளில் சாதாரண(Room temperature) வெப்பநிலையில் உள்ள தண்ணீரில் குளிக்கலாம். எனவே நாம் குளிக்கும் தண்ணீரின் வெப்பநிலை நாட்டுக்கு நாடு மாறுபடும். ஒவ்வொரு தட்பவெப்ப நிலைக்கும் மாறும். ஆனால் நமது உடலின் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்குமாறு குளிக்கவேண்டும். அதற்கு பாதகம் வருமாறு நாம் குளிக்கக்கூடாது.


பாஸ்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக