இந்த வலையதளத்தில்உள்ள நல்ல செய்திகள் என்னைச் சார்ந்த பல நண்பர்களுக்குசென்றடைய வேண்டும்என்ற நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டது. இதுவரை நான்பதிவிட்டபதிவுகளும்,இனி பதிவிடப்போகும்பதிவுகளும்எனது சொந்தபடைப்புகள்அல்ல. பலபதிவர்கள்எழுதிய நல்லபதிவுகளைத்தான்இங்குதொகுத்துள்ளேன்.

வெள்ளி, 21 நவம்பர், 2014

124 நிம்மதி வந்தால் காய்ச்சல் வரும்

ஒரு மனிதனுக்கு காய்ச்சல் வருவதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன என்று நாம் அறிந்ததே. அவை.

1. உடலுக்குள் கிருமிகள் வந்தால் அதை அளிப்பதற்கு காய்ச்சல் வரும்.
2. உடலில் உள்ள கழிவுகள் அதிகரிக்கும் பொழுது அதை குணப்படுத்துவதற்கு காய்ச்சல் வரும்.
3. உடலில் நோய்கள் வரும்பொழுது அதைக் குணப்படுத்துவதற்கு காய்ச்சல் வரும்.

மேற்கொண்ட மூன்று காரணங்களுக்காக மட்டும் இல்லாமல் புதியதாக இன்னொரு காரணத்தையும் இந்த பட்டியலில் சேர்த்து இருக்கிறோம். அந்த நான்காவது காரணம் நிம்மதி வந்தால் காய்ச்சல் வரும்.

பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கும். நிம்மதி வந்தால் எப்படி காய்ச்சல் வரும் ? இந்தக் கேள்வி மனதில் உருவாவதை உங்களால் தவிர்க்க முடியாது. அது எப்படி என்பதற்கு விடை அறிவோம்.

எப்பொழுது நாம் ஒரு விசயத்திற்காக அல்லது இலட்சியத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கிரோமோ அப்பொழுது காய்ச்சல் வராது. உதாரணமாக உங்கள் மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய முயற்சியில் இருக்கும் பொழுது அல்லது கடன் பிரச்சனையை தீர்ப்பதற்காக உளைத்துக்கொண்டிருக்கும்போளுது அல்லது காதலன் தன் காதலியுடன் ஐ லவ் யூ என்று தன் காதலை வெளிப்படுத்துவதற்காக அவள் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கும் பொழுது, அல்லது எதிரியை பழிவாங்கவேண்டும் என்று துரத்திக்கொண்டிருக்கும் பொழுது காய்ச்சல் வராது அதாவது ஒவ்வொருவர் மனதிலும் இது நடந்தால் நிம்மதி அது நடந்தால் நிம்மதி என்று பலவிசயங்களை பதிவு செய்து வைத்திருக்கிறோம். அந்த விஷயங்கள் எப்பொழுது நடக்கிறதோ அப்பொழுது முதல் அடுத்த வினாடியில் இருந்து நமது உடல் நோய்களை குணப்படுத்த ஆரம்பிக்கிறது. கழிவுகளை உடலை விட்டு வெளியேற்ற ஆரம்பிக்கிறது. கிருமிகளை கொலை செய்ய ஆரம்பித்துவிடும். அதுவரை அதாவது காய்ச்சல் வருவதற்கு முன்பு வரி நமது இலட்சியம், ஆசை நிறைவேருவதர்க்காக உடலில் உள்ள உறுப்புகளும், உடலுக்கும், மனதுக்கும், மூளைக்கும் தேவையான சக்தியை கொடுத்துக் கொண்டிருக்கும் எனவே தான் கழிவுகளை நீக்கி உடலை ஆரோக்கியபடுத்துவதர்க்கான செயலை செய்வதில்லை. நிம்மதி வந்தவுடன் காய்ச்சல் வருகிறது.

சில உதாரணங்களை பார்ப்போம் அதிலிருந்து நாம் நிம்மதி வந்தால் காய்ச்சல் வருவதைப் புரிந்துக் கொள்வோம்.

1. பெரும்பாலும் பெற்றோர்கள் தங்கள் மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் நடந்தால் தான் நான் நிம்மதியாக வாழ்வேன் என்று மனதில் எண்ணப் பதிவை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அவ்வாறே திருமணம் முடிந்தவுடன் அவர்களின் உடல் நோய்களை நீக்கும் வேலையை ஆரம்பிக்கும் பொழுது அவர்களுக்கு காய்ச்சல் வருகிறது. எனவே அதைப்பார்த்து நாம் பயப்பட வேண்டாம். தைரியமாக நிம்மதியாக இருக்கலாம்.

2. காதலனோ, காதலியோ தங்கள் காதலை மனதுக்குள் வைத்துக் கொண்டு ஒருவர் மற்றவரிடம் வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை எதிர் பார்த்து கொண்டிருப்பார். அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களை பின் தொடர்வது அவர்களையே நினைத்துக் கொண்டிருப்பது என்று இருக்கும் பொழுது அவர்கள் உடலின் மொத்த சக்தியும் தங்களின் காதலை வெளிப்படுத்தி காதலனுடனோ, காதலியுடனோ சம்மதம் பெறுவதற்கான முயற்சிக்கே செலவழிந்து கொண்டிருக்கும், உடலை பராமரிக்கவும், நோய்களை எதிர்த்துப்போரிடவும் சக்தி இருக்காது. காதலன் அல்லது காதலி தங்களது சம்மதத்தை ஐ லவ் யூ என்று என்றைக்கு வெளிப்படுத்துகிறதோ அதை கேட்ட நொடியில் இருந்து காய்ச்சல் தொடங்குகிறது. அதுவரை வாழ்வின் இலட்சியத்திற்கு தேடலுக்கு என்று உடலின் சக்தி முழுவதும் செலவழிக்கப்பட்டது. அது நிறைவேறி உடல் தன்னை ஆரோக்கிய படுத்திக் கொள்ள காய்ச்சல் வருகிறது. காய்ச்சல் என்பது நல்லது என்று நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

3. காணாமல் போன குழந்தை கிடைத்தவுடன் அந்தப் பெற்றோருக்கு நிம்மதிப் பெருமூச்சு வரும். மனம் மகிழ்ச்சி அடைந்து நிம்மதியான பெருமூச்சை சுவாசிக்கும் போலுற்ற்ஹு அநதப் பெற்றோருக்கு காய்ச்சல் வர வாய்ப்பிருக்கிறது.
4. பெரும் கடன் சுமையில் சிக்கி தத்தளிப்பார்கள் மனதில் சஞ்சலம் ஏற்ப்படும். அந்த நிலையில் உள்ளவர்கள் ஊரைவிட்டு எங்காவது சென்று விடலாமா? தற்கொலை செய்து கொள்ளலாமா/ என்று பலவிதமான எண்ணங்கள் மனதில் தோன்றும் பொழுது திடீரென்று ஏதாவது ஒன்றில் அவர்கள் கடன் முழுவதும் அடைக்கப்ப்படுமானால் அதனால் ஏற்ப்படும் நிம்மதியில் அவர்களுக்கு காய்ச்சல் வர வாய்ப்புண்டு.

5. நமது எதிரி தோற்றுவிட்டாலோ, இறந்துவிட்டாலோ, கொல்லப்பட்டுவிட்டாலோ நம் எதிரியை ஜெயிதுவிட்டாலோ அல்லது எதிரிக்கு ஏதாவது துன்பம் வரும் பொழுது அப்பாடா எதிரி அழிந்து விட்டான் என்று நம்முடைய ஆழ்மனதில் ஏற்ப்பட்டிருக்கும் பழிவாங்கும் பதிவு அழிந்தவுடன் மனம் நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைகிறது. இந்த சந்தர்ப்பத்தில் காய்ச்சல் வர வாய்ப்புள்ளது.

6. நீண்டநாள் சந்தேகங்கள் தெளிவடியும் பொழுது காய்ச்சல் வர வாய்ப்புள்ளது. பல காலமாக மனதை அரித்துக் கொண்டிருந்த சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும். பல வருடங்களாக புரியாத புதிராக இப்ருந்த கேள்விகளுக்கு விடை கிடைக்கும் பொது காய்ச்சல் வரும்.

7. நமது வாழ்க்கை இலட்சியம் நிறைவேறும் பொழுது காய்ச்சல் வரும், உதாரணமாக நமது சொந்த ஊரில் சொந்த வீடு கட்டினால் நிம்மதி அல்லது வெளிநாட்டில் வேலை கிடைத்தால் நிம்மதி வெளிநாட்டிலிருந்து நம் தாய் நாட்டிருக்கு திரும்பினால் நிம்மதி என்று வாழ்கையின் இலட்சியம் வைத்திருப்பவர்களுக்கு அது எபொழுது நிறைவேறுகிறதோ அப்பொழுது அவர்களுக்கு காய்ச்சல் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

8. மாணவர்களுக்கு தாங்கள் தேர்ச்சி பெற்றுவிட்டோம் என்று அறியும் பொழுதோ அல்லதி பள்ளியிலோ, கல்லூரியிலோ மாநிலத்திலோ முதல் மாணவனாக வரும் பொழுதோ அந்த சந்தோசத்தில் நிம்மதி காய்ச்சல் வர வாய்ப்புள்ளது.

9. நீதிமன்றத்தில் உங்கள் வழக்கில் நமக்கு சாதகமாக தீர்ப்பு வரும்பொழுது பத்தாண்டுகளுக்கு மேலாக இருந்த மன உளைச்சல் நீங்குகிறது. மன நிம்மதி அடைந்து மனிதன் சக்தி, உடலின் சக்தியை இரண்டும் உடலில் உள்ள நோயை குணப்படுத்துவதர்க்காகவும், கிருமிகளைக் கொள்வதற்காகவும் காய்ச்சல் வர வாய்ப்புள்ளது.

10. மனதுக்குப் பிடிதவாப்று நல்ல வேலை கிடைக்கும் பொழுது பிடிக்காத வேளையில் இருந்து வெளியேறும் பொழுது நல்ல கணிசமான சம்பளம் கிடைக்கும்பொழுது எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும்பொழுது என்ற இப்படி வேலை சம்பதப்பட்டவை நம்மனதில் பிடித்தவாறு நடக்கும் பொழுது காய்ச்சல் வருவதற்கு வாய்ப்புள்ளது.

எனவே அளவுக்கு அதிகமான நிம்மதியும், சந்தேகமும் கூட காய்ச்சலை உண்டுபண்ணும் என்பதைப் புரிந்துகொண்டால் திடீரென்று வரும் காய்ச்சலுக்கு நாம் பயப்படவேண்டியதில்லை. அப்பொழுது தெளிவாக இருக்கலாம். மனதுக்குப் பிடித்தவாறு மனைவி அமைந்தால் கூட காய்ச்சல் வரும். எனவே தயவு செய்து காய்ச்சல் என்றால் என்ன அது வரும் பொழுது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அனாடமிக் செவிவழி தொடு சிகிச்சை என்ற புத்தகத்தை முழுவதுமாக படித்து புரிந்தது கொண்டு அதில் கூறியுள்ள முறைப்படி மருந்து மாத்திரையின்றி நம்முடைய நோயை நாம் குணப்படுத்தி கொண்டால் நாம் ஆரோக்கியம்மாக வாழலாம். எனவே திடீரென்று வரும் காய்ச்சலுக்கு நிம்மதி கூட காரணமாக இருக்கலாம் என்பதைப் புரிந்து கொண்டு இனிமேல் பயப்படுவதையும், கவலைப்படுவதையும் தவிர்ப்போம்.
நாம் எப்பொழுது நிம்மதியாக வாழ்கிறோமோ அப்பொழுது நமது உடலில் தன்னைத்தானே குணப்படுத்தி கொள்கிறது. நாம் எப்பொழுது நிம்மதி இல்லாமல் வாழ்கிறோமோ உடல் தன்னைத்தானே வருத்திக்கொல்கிறது. மனதுக்கும் உடலுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவே இனிமேல் நிம்மதியாக வாழ்வதற்காக நேரங்களை ஒதுக்குவோம். பணம் செலவழிப்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் நிம்மதிதான் முக்கியமானது பலர் பணத்திற்காக புகழுக்காக, பதவிக்காக, கெளரவத்திர்க்காக என்று பல காரணங்களுக்காக நிம்மதியை இழக்கிறார்கள். ஆனால் நிம்மதிக்காக பணம், புகழ், அந்தஸ்து என்று எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஏனென்றால் நம்முடைய ஆரோக்கியம், நிம்மதி இதைவிடப் பெரிதல்லவா?

நிம்மதியாக வாழ்வது இப்படி என்பதை நம்முடைய மனதின் மணம் புத்தகத்தை படித்துப் புரிந்துகொள்ளுங்கள். எனவே நிம்மதி வந்தால் காய்ச்சல் வரும் என்பதைப் புரிந்துக்கொண்டு நிம்மதியாக வாழ்ந்து காய்ச்சல் வந்து உடலை ஆரோகியப்படுத்தி ஆனந்த வாழ்வு பெறுவோம்.

நிம்மதியாக வாழ்வோம் ! ஆரோக்கியமாக வாழ்வோம் !

மேலும் விவரங்களுக்கு : +91 8883805456

123 சிறுநீர் கழித்தவுடன் நீர் குடிக்க வேண்டும்


எப்பொழுதெல்லாம் நாம் சிறுநீர் கழிக்கிறோமோ உடனே நமக்கு தண்ணீர் தேவைபடுகிறது என்று பொருள். எனவே சிறுநீர் களித்தவுடனேயே குறைந்த அளவாவது நீரை சாப்பிடுவதால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே வாய்பிருந்தால், முடிந்தால் சிறுநீர் கழித்தவுடன் தண்ணீர் சிறிதளவு சாப்பிடுவோம். 

122 தண்ணீரை குடிக்கக்கூடாது

தண்ணீரை குடிக்கக்கூடாது, சப்பி சப்பி சாப்பிட வேண்டும்.

தண்ணீரை சாப்பிட வேண்டும். உணவை குடிக்க வேண்டும் என்று ஒரு பழமொழி உள்ளது. உணவை வாயில் வைத்து நன்றாக மென்று கூழ் போல’ செய்து நிராகாரமாக மாற்றி குடிக்க வேண்டும் என்பதே அதன் பொருள். தண்ணீரை மெதுவாக உணவு சாப்பிடுவதைப் போல சப்பி சப்பி சாப்பிட வேண்டும் என்பதே அதன் பொருள். தண்ணீரில் ஆறு சுவைகள் உள்ளது தண்ணீரை மெதுவாக சப்பி சப்பி குடிப்பது மூலமாக நம் உடலுக்கு தேவையான ஆறு சுவைக்களை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் தண்ணீரில் உமிழ் நீர் கலந்து வாயில் உள்ள நொதிகள் கலந்து உள்ளே செல்வதால் நம் உடலுக்கு பல விதமான நம்மைகள் ஏற்படுகிறது. மேலும் தண்ணீரில் உள்ள அனைத்து கிருமிகளையும் மற்றும் தண்ணீரை நமது உடல் வெப்ப நிலைக்கு மாற்றுவதற்கும் டான்சில் எனப்படும் உறுப்பு உதவி செய்கிறது. வேகமாக அன்னாந்து கடகடவென தண்ணீர் குடிப்பவர்களுக்கு இந்த தண்ணீர் டான்சில் எனப்படும் உறுப்பில் நோய்கள் வர வாய்ப்புள்ளது. ஏனென்றால் தண்ணீர் வேகமாக டான்சில் வழியாக கடக்கும்போது டான்சில் வேகமாக வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுகிறது. எனவே அதில் நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. தண்ணீரை எவ்வளவு மெதுவாக குடிக்கிறோமோ அவ்வளவு தூரம் நம் உடலுக்கு ஆரோக்கியமும் சக்தியும் கிடைக்கும். டான்சில், வீசிங், நெஞ்சு சளி போன்ற நுரையீரல் சம்மந்தப்பட்ட மூக்கு சம்மந்தப்பட்ட சைனஸ் போன்ற எந்த வியாதிகயும் நமக்கு வராது. வந்தால் அது உடனே குணமாகிவிடும். எனவே தண்ணீரை மெதுவாக சப்பி சப்பி சுவையை ரசித்து குடிக்கலாம்.

121 நிம்மதியாக வாழ வேண்டுமா?

உலகில் உள்ள அனைவருக்கும் நிமதியாக வாழவேண்டும் என்று ஆசை. ஆனால் நிம்மதி என்றால் என்ன? நிம்மதியாக வாழ்வது எப்படி பலருக்கும் புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது. நமக்கு என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காது? என்று தெரியாத நம்மால் மற்றவர்களுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பதை தெரிந்துக்கொள்வது சிரமமான விஷயம் தான். நாம் நிம்மதியாக வாழ வழித் தெரியாமல் பிறரை நிம்மதியாக வாழவைக்க முடியும் என்பதும் கடினமான விஷயம். எனவே முதலில் நாம் நிமதியாக வாழ்கிறோமா? அமைதியாக வாழ்கிறோமா? ஆனந்தமாக வாழ்கிறோமா? என்பதை தெரிந்துக் கொண்டு அதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து வாழ வேண்டும். நாம் நிம்மதியாக வாழ்ந்தால் மற்றவர்களையும் நிமாதியாக வாழ வைப்பது சுலபம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று விஷயங்கள் உள்ளன? 1. உடல் 2.மனம், 3. புத்தி. உடல் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் மனம் மற்றும் புத்திக்கும் உள்ள வித்தியாசம் பலருக்கும் தெரிவதில்லை. மனதுக்கும் புத்திக்கும் உள்ள வித்தியாசம், அது செயல்படும் முறை ஆகியவற்றை நாம் தெரிந்து கொள்வதன் மூலமாக மட்டுமே நிம்மதியாக வாழ முடியும்.

முதலில் மனம் என்றால் என்பது என்ன என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம். மனதின் வேலை பிடித்தது, பிடிக்காதது என்று ஆராய்ந்து யோசிக்கும் நிலைக்கு பெயர் மனது.


மனதின் தன்மை எனக்கு இது பிடிக்காது, எனக்கு இது பிடிக்கவில்லை, எனக்கு இது கொஞ்சம் பிடிக்கிறது, இது அதிகமாக பிடிக்கிறது. அது எனக்கு பிக்கவில்லை. அது எனக்கு ரொம்பவே பிடிக்கவில்லை என்று ஒரு அளவை நிர்ணயித்து முடிவெடுக்கும் ஒரு சக்திக்கு பெயர் மனது.

புத்தி என்றால் என்ன?
புத்தி என்பது நல்லது, கெட்டது என்று ஆராய்ச்சி செய்யும் நிலைக்கு புத்தி என்று பெயர். இது நல்லது, இது கெட்டது, இது ரொம்ப நல்லது, இது ரொம்ப ரொம்ப கெட்டது என்று இருநிலைகளில் ஆராய்ச்சி செய்து முடிவெடுக்கும் தன்மைக்கு பெயர் புத்தி. மனதின் வேலை வேறு, புத்தியின் வேலை வேறு. இதை புரிந்துக் கொள்வதன் மூலமாக நாம் 

நிம்மதியாக வாழ முடியும்.

உதாரணமாக நாம் ஒரு காரை வாங்கவேண்டும் என்று கார் விற்பனை செயும் கடைக்கு செல்கிறோம். அங்கே 15 வித மாடல்களில் கார்கள் நிறுத்திவைக்கப் பட்டிருக்கிறது. அந்த 15 கார்களையும் ஒரு 5 நிமிடம் நம் கண்கள் பார்கும்போது நம் மனது நமைக் கேட்காமலே அதன் வேலையை ஆரம்பித்து விடுகிறது. ஒவ்வொரு காரையும் பார்த்து இது எனக்கு பிடித்திருக்கிறது, 100 மதிப்பெண், இது எனக்கு பிடிக்கவில்லை மைனஸ் ௧௦௦ மதிப்பெண், இது எனக்கு பிடித்திருக்கிறது 500 மதிப்பெண்கள், இது எனக்கு மிக மிகப் பிடித்திருக்கிறது ஒரு லட்சம் மதிப்பெண்கள் என்று 15 கைகளுக்கும் மதிப்பீடு செய்து 15 கார்களுக்கும் அவற்றின் பெயருடன் பட்டியலிட்டு அதற்கு பதிப்பெங்கள் இட்டு எந்தக்கார் இந்த கார் சுமார் என்று 5 அல்லது 10 நிமடங்களில் அந்தகக் கார்களை மதிப்பீடு செய்து ஒரு அட்டவணை தயார் செய்கிறது. நீங்கள் ஒரு வேலை இந்தக் 15 கார்களையும் பார்த்து முடித்தபின் உங்களிடம் வந்து நான் கேட்கிறேன். எந்த கார் உங்களுக்கு பிடித்துருக்கிறது என்று. இந்த கார் எனக்கு பிடித்திருக்கிறது என்று உடனடியாக தெளிவாக ஒரு காரை சுட்டிக் காட்டுவீர்கள். எந்த காரை பிடிக்கவில்லை என்றாலும் அதேபோல் ஒரு காரை காட்டுவீர்கள். இந்த வேலை எப்பொழுது நடந்தது?

நாம் கேட்டாலும் கேட்காவிட்டாலும், நினைத்தாலும், நினைக்காவிட்டாலும், நமது மனது இந்த பட்டியலை தயார் செய்துக்கொண்டே இருக்கும். இதுதான் மனிதனின் குணம். ஆனால் புத்தி என்பது அவ்வளவு சீக்கிரமாக இப்படி பணிகளைச் செய்வதில்லை. ஏனென்றால் அதற்கு ஆராய்ச்சி தேவைப்படுகிறது. புத்தி உடனடியாக முடியு எடுப்பதில்லை. நம் மனதிற்கு பிடித்த காரை வாங்க முடியாது. ஏனென்றால் புத்தி என்று ஒன்று உள்ளது. அது “கொஞ்சம் பொறுப்பா நல்ல கார், கேட்ட கார் என்று ஆராய்ச்சி செய்து கண்டுப்பிடிக்கணும்”. அதுக்கு அப்புறம் தான் அந்தக் காரை வாங்க வேண்டும்” என்று அது சொல்கிறது. புத்தி ஆராய்ச்சி சயா ஆரம்பிக்கிறது. அந்தக் கார் கடையிலுள்ள மேலாளரைக் கூப்பிட்டு அந்தக் காரில் என்ன செளகரியம் இருக்கிறது, ஒவ்வொரு காரின் விலை என்ன? நம்மிடம் பணம் எவ்வளவு உள்ளது. லோன் கிடைக்குமா? கிடைக்காத?ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு எவ்வளவு மைலேஜ் கிடைக்கும். இது பெற்றோலா? டீசலா? எத்தனை பேர் அமர்ந்து பயணம் செய்ய முடியும்? என்று பல விஷயங்களை ஆராய்ந்து, வீட்டில் கார் நிறுத்தும் இடம் உள்ளதா? நம் வீட்டில் நிறுத்த முடியுமா? நம் கும்பத்திற்கு இது ஒத்துவருமா? நம் அலுவலகத்திற்கு இது ஒத்து வருமா? என்று ஆரைவ்ஹி செய்து 1 முதல் 15 வரை கார்களை அட்டவணைப்படுத்தி அந்த காரின் பெயரை எழுதி அதற்கு மதிப்பெண் இடுகிறது. இப்படி மனது முதலில் வேலையை முடிக்கிறது. பறகு சில தகவல்களைத் தெரிந்துக்கொண்டு பின் புத்தி தன வேலையை முடிக்கிறது. இபூளுதுதான் நாம் முடிவெடுக்க ஆரம்பிக்கிறோம். அப்பொழுது கார் நிறுவன அதிகாரி நம்மிடம் வந்து சேர்கிறார்.”சார் எந்தக் காரை தேர்வு செய்திகுரிகீர்கள்?” என்று கேட்பார், நாம் சொல்வோம். “ஒரே குழப்பமாக இருக்கிறது, சற்று பொறுங்கள் முடிவு எடுத்துவிட்டு பிறகு சொல்கிறேன்” என்று.

நன்றாக யோசித்து பாருங்கள். எப்பொழுதுமே 15 விஷயத்தில் நாம் குழம்பியதே கிடையாது. குழப்பம் என்பது எப்பொழுதுமே இரு விஷயத்தில் மட்டுமே வரும். நீங்கள் ஏன் குழம்பிக்கொண்டு இருக்கிறீர்கள். என்றால் மனதுக்குப் பிடித்த முதல் மதிப்பெண் எடுத்த காரை வாங்குவதா? அல்லது புத்தி கணக்கிட்டு முதல் மதிப்பெண் அளித்த காரை வாங்குவதா?என்று.ஏனெனில் இரண்டு வேறு வேறு காராக இருக்கிறது.ஆனால் மற்ற 13 கார்களைப் நமக்கு கவலையே இல்லை. ஏனென்றால் எப்பொழுது மனிதன் மனதில் குழப்பம் என்றால் புத்திக்கும் மனதுக்கும் உள்ள சண்டை அல்லது முரண்பாடு. அதாவது பிடித்த விஷயத்தைச் செய்வத? நல்ல விஷயத்தை செய்வதா? என்பது தான் அனைத்து மனிதர்களுக்கும் ஏற்படும் குழப்பத்திற்கு அடிப்படை காரணம்.

ஒருவேளை மனதிற்குப் பிடித்த காரும், புத்திக்கு நல்லது என்று தீர்மானிக்கப்பட்ட காரும் ஒன்றே என்றால் என்ன செய்வீர்கள்? மனதில் குழப்பமே இருக்காது. அந்தக் காரை உடனடியாக வாங்கிவிட்டு நம் வீட்டிற்க்கு சென்றுவிடுவோம். அந்தக் கார் நம் வாழ்வில் நிமதியை, அமைதியை, சந்தோஷத்தை மட்டுமே கொடுக்கும். நன்றாக யோசித்து பார்த்தல், ஒரு மனிதனை வாழ்வில் நிம்மதி சந்தோசம் ஏற்படுகிறது என்றால் மனதிற்கு முதல் மதிப்பெண் எடுத்த, புத்திக்கு முதல் மதிப்பெண் எடுத்த(பிடித்த) விஷயமாக மட்டுமே இருக்கும்.

இப்படி மனதிற்கும், புத்திக்கும் குழப்பம் உள்ள நேரத்தில் நாம் ஏதாவது ஒருபக்கம் சாய வேண்டயுள்ளது. ஒருவேளை மனதிற்குப் படித்த காரை வாங்கிக் கொண்டு வீட்டிற்க்கு செல்வீர்கள் என்றால் உங்கள் மனைவி உங்களுடன் சண்டையிடுவார், இந்தக் காரை என் வாங்கினீர்கள்? என்று கேட்பார். நீங்கள் சொல்வீர்கள், “என் மனதிற்கு பிடித்துருந்தது வாங்கிவிட்டேன்” என்பீர்கள். “ இந்தக் காரை விடவும் நல்ல கார்கள் எவ்வளவோ உள்ளன. அதைவிட்டுவிட்டு இந்தக் காரை வாங்கி வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை. என்று மனைவியிடம் திட்டு வாங்க வேண்டியதிருக்கும்.

அலுவலகத்திலும் உங்கள் நம்பர்கள் இந்தக் காரை என் வாங்கினாய் என்று கேட்பசர்கள். ஏனென்றால் உங்கள் மனதுக்கு அந்தக் கார் பிடித்துருக்கிறது. ஆனால் உலகத்திற்கு அது பிடிக்காது. இப்பொழுது உங்கள் வாழ்கையில் குழப்பம் வருகிறது. ஒருவேளை புத்திக்குப் பிடித்த ஒரு காரை வாங்கி சென்றால் உங்கள் மனைவி சந்தோஷப்படுவார். உங்கள் நண்பர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். ஆனால் உங்கள் மனது கவலையுடன் இருக்கும். தனக்குப் பிடித்த காரை வாங்கவில்லையே என்று, ஒருவேளை உங்கள் மனதிற்கு காரை ரூட்டில் எங்காவது பார்த்தல், ஒரு நாள் நம் அந்த காரை வாங்க வேண்டும் என்று மணம் எங்கும்.

நன்றாக யோசித்துப் பாருங்கள் ! ஒரு மனிதன் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் மனதிற்கு பிடித்த, புத்தி நல்லது என்று சொன்ன விஷயத்தை மட்டுமே காலை முதல் மாலை வரை செய்து வரவேண்டும். எப்போது மனதிற்குப் பிடிக்காத விஷயத்தையோ நாம் வாழ்வின் நிம்மதியைக் கெடுக்கிறது. இதுதான் முக்கியமான பாடம். இதை எப்படி நாம் ஒழுங்குபடுத்துவது. நாம் எப்படி நிம்மதியாக வாழ்வது என்பதை இப்பொழுது தெளிவாகப் பார்க்க இருக்கிறோம்.

நான் மனதை, புத்தியை புரிந்தது கொள்வதற்கு கார் என்ற உதாரணத்தை வைத்து கூறினேன். ஆனால் இவை மற்ற விஷயங்களில் கணவன்- மனைவி, குழந்தைகள், அலுவலகம், நாம் உண்ணும் உணவு இதுபோன்ற விஷயங்களில் கணவன்- மனைவி, குழந்தைகள், அலுவலகம், நாம் உண்ணும் உணவு இதுபோன்ற விஷயங்களில் எல்லாம் யோசித்துப் பாருங்கள். எல்லா இடங்களிலும் இதே மனம், புத்தி- சூத்திரம் தான் நமக்குத் தேவைப்படுகிறது. எனவே நாம் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் மனதிற்கும் பிடித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி வாழ்வது சாத்தியமா? முடியுமா? அது சாதாரணமான விஷயமா? கடினமான விஷயமா? எப்படி வாழ்வது? என்பதை நாம் தெளிவாக பார்க்க இருக்கிறோம்.

நாம் நம் மனதுக்குப் பிடித்த மாதிரி வாழ முயலும்பொழுது நம்முடன் இருப்பவர்களைக் கஷ்டப்படுத்துகிறோம். நாம் புத்திசாலியாக நல்ல விஷயங்களை செயல்படுத்தும்பொழுது நம்மை நாமே கஷ்டப்படுத்திக் கொள்கிறோம். யார் ஒருவர் தன் மனதிற்குப் பிடித்த மாதிரி வாழ்ந்து கொண்டிருக்கிறாரோ அவர் எல்லா விஷயத்திலும் தன் மனதிருக்கு எது பிடித்திருக்கிறதோ அதை மட்டும் செய்து கொண்டு, தன்னுடைய புத்தியைப் பயன்படுத்தாமல் வாழ்கிறார் என்று அர்த்தம். அவர் நிம்மதியாக வாழ்வார். ஆனால் அவருடன் வாழும் குடும்பத்தினர், நண்பர்கள், அலுவலகத்தினர் என யாரும் நிம்மதியாக மனதிற்குப் பிடித்த மாதிரி வாழவேண்டும் என்றல் கூட இருப்பவர்கள் கஷ்டப்பட்டுத் தான் ஆகவேண்டும். அதே சமயம் ஒரு மனிதன் நல்ல விஷயங்களை மட்டும் முடிவெடுத்து தன் மனதிற்கு பிடிக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது அருகில் உள்ள நண்பர்கள், குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் நிம்மதியாக வாழ்வார்கள். ஆனால் அவர் நிம்மதியாக வாழமாட்டார். எனவே அவருக்கு நோய்கள் வருகிறது. அவர் குழப்பமடைகிறார். அவர் வருத்தமடைகிறார். அவர் தன்னை மெழுகுவர்த்தி போல் எண்ணிக் கொள்கிறார்.

பல வீடுகளில் பெற்றோர்கள் தன் குழந்தைகளுக்காக தான் மனதுக்கு பிடிக்காமல் 
வாழ்ந்து புத்திசாலித்தனமாக குழந்தை வளர்ப்பதற்காகத் தன் வாழ்க்கையை வாழாமல் இறந்து கொண்டிருக்கிறார்கள். நடைபிணமாக வாழ்கிறார்கள். இந்த வார்த்தையை அதாவது இறந்து கொண்டு இருக்கிறார்கள். நடைபிணமாக வாழ்கிறார்கள். இந்த வார்த்தையை அதாவது இறந்து கொண்டு இருக்கிறார்கள் என்ற வார்த்தையை நான் ஏன் பயன்படுத்திருக்கிறேன் என்றால் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதற்காக, ஏனென்றால் மனதுக்குப் பிடிக்காமல் வாழும் ஒவ்வொரு நிமிடமும் நாம் இறக்கிறோம். மனதுக்குப் பிடித்த மாதிரி வாழும் ஒவ்வொரு கணமும் நாம் வாழ்கிறோம். அதே போல பல குழந்தைகள் பெற்றோருக்காக மனதிற்குப் பிடித்த விஷயத்தை விட்டுவிட்டு புத்திசாலித்தனமாக வாழும் பொழுது பெற்றோர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். ஆனால் அக்குழந்தை இறந்து கொண்டிருக்கிறது. இது பெற்றோர்க்கும் குழந்தைக்கும் இடையே மட்டும் இவ்வாறு நடப்பதில்லை. பல மனைவிமார்கள் தங்கள் கணவனின் அன்புக்காக தங்கள் மனதுக்குப் பிடிக்காமல் வாழ்ந்து இறந்து கொண்டிருக்கிறார்கள். பல கணவன்மார்கள் தன் மனைவிக்குக் பிடித்த விஷயத்தை செய்ய வேண்டும் என்று தனக்குப் பிடிக்காவிட்டாலும் விட்டுக் கொடுத்து வாழ்வில் இறந்து கொண்டிருக்கிறார்கள். தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். இது கணவன் மனைவிக்கு மட்டுமல்ல, அலுவலகம், தொழிலாளி- முதலாளி, நண்பர்கள் மற்றும் அனைத்து இடங்களிலும் இந்த விதியைப் பயன்படுத்திப் பார்க்கலாம். எப்பொழுது நம் மனதிற்குப் பிடித்த விஷயத்தை மட்டும் நாம் செய்துகொண்டு இருக்கிறோமோ, அப்பொழுது நம்மைச் சுற்றியுள்ள அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். எப்பொழுது புத்திசாலித்தனமாக நல்ல விஷயங்களை மட்டுமே செய்துகொண்டு இருக்கிறோமோ, நாம் பாதிக்கப்படுகிறோம். நிம்மதியற்ற வாழ்வு வாழ்வோம். இதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.

இதை நாம் புரிந்துகொண்டு நாமும் நிம்மதியாக வாழவேண்டும், நம்முடன் இருப்பவர்களும் நிம்மதியாக வாழவேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு நம் வாழ்வின் சில விஷயங்களை மாற்றி அமைக்கும்பொழுது மட்டுமே நாமும் நிம்மதியாக வாழ முடியும். நம்முடன் வாழும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் என அனைவரும் நிம்மதியாக வாழமுடியும். இது புரியாதவரையில் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு மற்றவர்களையும் கஷ்டப்படுத்தி வாழ்ந்து கொண்டு தான் இருப்போம்.
சந்தோஷ் சுப்பிரமணியம் என்று ஒரு தமிழ் திரைப்படம் உள்ளது. தயவு செய்து நிம்மதியாக வாழவேண்டும் என்றல் இந்தப் படத்தை அமைதியாக, ஒருமுறை உங்களுக்கு எடுத்து கொள்ளும் சிகிச்சையாக நினைத்து, இப்படத்தை முழுவதுமாக பாருங்கள். இந்தப் படத்தில் அப்பாவாக நடிக்கும் கதாபாத்திரம் நல்ல விஷயம். கேட்ட விஷயம் என்பதை மட்டும் பார்த்துக்கொண்டு தன் மகனை வழிநடத்தும். அதனால் தன்னுடைய மகன் எவ்வளவு கஷ்டப்படுகிறான் என்பதை அந்தப் படத்தில் தந்தை, மகன் கதாபாத்திரங்கள் வழியாக நன்றாக புரிய வைக்கப்பட்டிருக்கும்.

உடனே திரைப்படத்தில் வரும் மகன் கதாபாத்திரத்தை ஆதரித்தும் தந்தை கதாபாத்திரத்தை எதிர்த்தும் என்னுடைய கருத்துகளைச் சொல்வதாக யாரும் எண்ணிவிட வேண்டாம். இப்படத்தை பார்த்து முடித்தவுடன் இதில் உள்ள தந்தைக்கும் மகனுக்கும் இடையே நிலவும் பிரச்சனையைபோல நண்பர்கள், கணவன், மனைவி என்று மாற்றி மாற்றி யோசித்துப் பார்க்க வேண்டும். அப்பொழுது எல்லாம் புரிந்துவிடும். இந்தப் படத்தில் தந்தை கதாபத்திரம் தன் மகனுக்கு எந்த மாதிரி ஆடை அணிந்தால் நன்றாக இருக்கும். என்ன படித்தல் நன்றாக இருக்கும். எப்படி நடந்தால், எப்படி உட்கார்ந்தால் நன்றாக இருக்கும் என்றும், எப்படி பேசவேண்டும், எப்படி தலைமுடியை வைத்துக்கொள்ளவேண்டும் என்று தனக்கு பிடித்தமாதிரி மட்டுமே யோசித்து அந்த மகனுக்கு பிடிக்கிறதா? இல்லையா? என்று ஆராய்ச்சி செய்யாமல் தன் விருப்பப்படியே மகனை வளர்ப்பார். ஆனால் மகன், தன அப்பாவுக்கு எதிராகப் பேச தெரியாமல் அப்பாவை பாவம் என்று நினைத்து புத்திசாலித்தனமாக எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு தன் மனதிற்கு விருப்பமில்லாமல் சிறுவயதிலிருந்தே வாழ்ந்து வருவான். எனக்கு அந்தப் படத்தைப் குறித்து எதுவும் அதிகம் கூறுவதற்கு விருப்பமில்லை. ஏனென்றால் இந்தக் கட்டுரையைப் படித்துக்கொண்டு இருக்கும்பொழுதே இதை நிறுத்திவிட்டு அப்படத்தைப் பார்த்துவிட்டு பின் தொடரலாம். கண்டிப்பாக உலகில் உள்ள அனைத்து மக்களும் ஒருமுறையாவது இப்படத்தைப் பார்க்கவேண்டும். இப்படத்தைப் பார்த்து புரிந்துகொண்டால் மட்டுமே நமது வாழ்க்கையை நிம்மதியாக வாழமுடியும். ஏனென்றால் அந்தப் படத்தில் வரும் மகன் கதாபாத்திரத்தை நானாகவும், தந்தை கதாபாத்திரத்தை என் அப்பாவாகவும் நான் நினைத்தால் அது உண்மையாக இருக்கிறது.

சிறுவயது முதலே நான் ஒரு புத்திசாலிக் குழந்தை, என் அப்பா அவருக்குப் பிடித்தமாதிரி, அவர் மனதுக்குப் பிடித்தமாதிரி நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார். உதாரணமாக நான் வீட்டிற்கு வந்தவுடன் ஒரு அரைமணிநேரம் ஓய்வு எடுக்கவேண்டும் என்று விரும்புவேன். ஆனால் அவர் வீட்டுக்கு வந்தவுடன், என்னை உடனே கை, கால், முகம் கழுவு என்று கூறுவார். நான் பிறகு கழுவிக் கொள்கிறேன் என்று கூறுவேன். அதற்கு எனக்கு அறிவுரை கூறுவார். அரை மணிநேரம் தொடர்ந்து பேசுவர். அவர் பேசுவதைக் கேட்பதற்கு பதிலாக அவர் சொல்வதை செய்து விடலாம் என்று கை, கால், முகம் கழுவச் சென்று விடுகிறேன். ஆனால் என் மனதுக்கு விருப்பமின்றி கஷ்டப்பட்டு கழுவிக்கொண்டு இருப்பேன். இறந்துகொண்டிருந்தேன். என் அப்பாவின் விருப்பத்திற்கு நாம் வாழும் பொழுது எனக்கு நிம்மதி இல்லாத வாழ்வாக இருந்தது. அதைப்போல எனக்கு பசி எடுத்தபின் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். ஆனால் அவருக்காகச் சாப்பிடுவேன். அப்பொழுது அந்தச் சாப்பாடு சுவையாக இராது. அதைவிட கொடுமையான விஷயம் என்னவென்றால், நான் ரசம் பிடிக்கவில்லை என்று சாப்பிடாமல் இருந்தால் ரசம் உனக்காகத்தான் வைத்தது. சுவையாக இருக்கும். நீ கண்டிப்பாக ரசம் சேர்த்துச் சாப்பிடவேண்டும் என்று வற்புறுத்துவார். அவருக்கு ரசம் பிடித்திருக்கிறது. ஆனால் எனக்குப் பிடிக்கவில்லை என்பதை அவருக்கு புரியவைக்கும் பக்குவம் அந்த வயதில் என்னிடம் இல்லை.

நான் இரவு 8 மணிக்கு எல்லாம் படுத்து உறங்கி விடுவேன். என் தந்தை அலுவலகத்தில் இருந்து வீடுதிரும்பும்பொழுது இரவு மணி பதினொன்று ஆகிவிடும். வரும்பொழுது தன் ஆசை மகனுக்காக வடை, போண்டா வாங்கி வருவார். நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கும் என்னை பதினொரு மணிக்கு எழுப்புவார். எனக்கு எழுந்திருக்கப் பிடிக்காது. அனால் என்னை வலுக்கட்டாயமாக எழுப்பி, உனக்காகத் தான். வடை, போண்டா வாங்கி வந்திருக்கிறேன் என்று என்னை எழுப்புவார். வேண்டாம் என்று சொன்னால் இதுதான் நல்லது சாப்பிடு என்று அடம்பிடிப்பார். என் அப்பாவிற்காக அந்த வடை, போண்டாவை நான் கஷ்டப்பட்டு சாப்பிடுவேன். எனக்கு வடை, போண்டா பிடிக்கும், ஆனால் பகல் பொழுதில் ஆசைப்படும் பொழுதோ, அல்லது பசிக்கும்பொழுது தான் பிடிக்குமே ஒழிய தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது சாப்பிட பிடிக்காது.இதை என் அப்பா புரிந்துகொள்ளவில்லை. அதிலும் அவர் 5 வடை வாங்கி வந்தால் 5 வடையும் சாப்பிடவேண்டும் என்று அடம்பிடிப்பார். என் அப்பாவிற்காக என் மனதிற்குப் பிடிக்காமல் அந்த வடைகளைச் சாப்பிடும்பொழுது நான் கஷ்டப்பட்டேன் என்பது அவருக்குத் தெரியாது. உடனே என் அம்மாவோ டீ வைதுக்கொண்டுவரச் சென்றுவிடுவார். ஏனென்றால் வடையும், போண்டாவும் சாப்பிடும்பொழுது டீ சாப்பிட்டால் நல்லது என்று என் தாயார் நினைத்துக்கொண்டிருந்தார். வடை, போண்டா சாப்பிடும்பொழுது டீ சாப்பிடுவது அவருக்குப் பிடிக்கும். அது எனக்குப் பிடிக்காது. என் தாயாரோ நான் வேண்டாம் என்றாலும் விடமாட்டார். “வடை சாப்பிட்டால், டீ சாப்பிட்டால்தான் ஜீரணமாகும். உனக்குத் தெரியாது என்று டீ சாப்பிடச்சொல்லி எனக்குத் தருவார். நான் மனதுக்குப் பிடிக்காத அந்த டீயை சாப்பிட்டு முடித்தவுடன் என் அப்பாவும் அம்மாவும் நிம்மதியாக “ அப்பாடா என் மகனுக்கு பிடித்த மாதிரி பணிவிடை செய்து அவனுக்குப் பிடித்த மாதிரி சாப்பிடச் செய்துவிட்டோம், இனி தூங்கச் செல்லலாம்” என்று அவர்கள் தூங்கச் சென்றுவிடுவார்கள். நான் இரவு முழுவதும் பேய்போல விழித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன். என்னால் தூங்க முடியாது. தூக்கம் வராது. இதை போல் நிறைய உதாரணங்கள் சொல்லலாம். இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

எனது வாழ்க்கையை மற்றவர்கள் வாழும் பொழுது என் மனது கஷ்டப்படுகிறது. அதைபோல் மற்றவர்களின் வாழ்க்கையை நான் வாழும் பொழுது அவர்கள் கஷ்டப்படுகிறார்கள். இதுதான் உண்மை. என் விஷயத்தில் என் அப்பா என்னை கஷ்டப்படுதினார். ஆனால் சில வீடுகளில் சில அப்பாக்கள் தங்கள் குழந்தைகளுக்காக விட்டுக்கொடுத்து குழந்தைகளின் சந்தோஷத்திற்காக தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி அவர்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள், நான் அப்பாக்கள், குழந்தைகள் கஷ்டப்படுகிறார்கள் என்று மட்டும் கூற வரவில்லை. சில வீடுகளில், சில இடங்களில் மாற்றங்கள் இருக்கலாம். மனைவியால் கணவன் கஷ்டப்படலாம், கணவனால் மனைவி கஷ்டப்படலாம். நண்பர்களால், சிலரால் சிலருக்கு கஷ்டம் ஏற்படுகிறது. முதலாளியல் தொழிலாளிகளுக்கும், தொளிலலியல் முதலாளிக்கும் கஷ்டங்கள் ஏற்படுகிறது. இதற்கு அடிப்படை காரணம் என்னவென்றால் ஒன்றைப் புரிந்துகொண்டால் நம்மால் உணரமுடியும்.

பல முதலாளிகள் தனக்குப் பிடித்தமாதிரி நிறுவனம் ( கம்பெனி) இருக்க வேண்டும் என்பதற்காக தொழிலாளிகளைக் கஷ்டப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். தொழிலாளிக்கு என்ன பிடிக்கும் என்பதை அவர்கள் யோசிப்பதில்லை. பல முதலாளிகள் புத்திசாலித்தனமாக தொழிலாளிக்குப் பிடித்த மாதிரி நடந்துகொண்டு தன்னை வருத்திக்கொண்டு இருக்கிறார்கள். எனவே ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். ஒரு மனிதன் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் தன் மனதிற்குப் பிடித்தமாதிரி வாழவேண்டும். ஆனால் மனதிற்குப் பிடித்தமாதிரி வாழவேண்டும் என்று கூறும்பொழுது மனது கண்டபடி எல்லாவற்றையும் ஆசைப்படும். ஆசைப்படும் எல்லாவற்றையும் நிறைவேற்றிட முடியாது. எனவே ஒரு மனிதன் மனதுக்குப் பிடித்தவாறு வாழவேண்டும். அதே சமயத்தில் மற்றவர்களுக்கும் கஷ்டத்தைக் கொடுக்கக் கூடாது. நாம் மனதுக்குப் பிடித்தவாறு வாழ்வதற்காக மற்றவர்களின் உடலை, உயிரை, மனதை நாம் கஷ்டப்படுத்தக்கூடாது என்பதை மட்டும் நாம் நினைவில் வைத்துக் கொண்டு வாழ்ந்தால் நாமும் நிம்மதியாக வாழலாம். மற்றவர்களையும் நிம்மதியாக வாழவைக்கலாம். 

சமீபகாலத்தில் எனக்குத் தெரிந்த நண்பனின் மனைவி புற்றுநோயால்( CANCER) இறந்துவிட்டார். ஒரே ஆச்சர்யமான விஷயம் என்னவென்றல் அக்குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் மிகவும் நல்லவர்கள். அந்தப் பெண்மணியும் மிகவும் நல்லவர். அவருக்கு எப்படி புற்று நோய் வந்தது என்று அனைவரும் ஆச்சர்யத்தில் பேசிக்கொண்டு இருந்தார்கள். அவர் புற்று நோயால் இறப்பதற்கு முன்பாக அவருடன் நான் பேசும் பொழுதுதான் சில விஷயங்கள் எனக்குப் புரிந்தது. அவர் திருமணத்திற்கு முன்புதன் மனதுக்குப் பிடித்தவாறு வாழ்ந்துகொண்டு இருந்தவர். திருமணம் ஆனவுடன் கடந்த 15 வருடங்களாக ஒரு நிமிடம் கூட அவர் தன் மனதிற்குப் பிடித்தவாறு வாழாமல் தன் கணவரின் மேல் உள்ள அன்பால் குழந்தைகள் மேல் உள்ள அக்கறையாலும் 24 மணி நேரமும் தன் மனதுக்குப் பிடிக்காமல் கணவருக்கும், குழந்தைகளுக்கும் பணிவிடை செய்து அவர்களுக்குப் பிடித்தவாறு வாழ்ந்து வாழ்ந்து, அவர்களை அரவணைத்து நல்லபடியாக வாழவைத்து தன் மனதுக்குப் பிடிக்காமல் வாழ்ந்து புற்றுநோய் வந்து இறந்துவிட்டார். இதுதான் உண்மை. இதை நம்பித்தான் ஆகவேண்டும். நல்லவர்களுக்கு ஏன் கஷ்டம் வருகிறது என்றால் நல்லவர்கள் தன் மனதிற்குப் பிடித்தவாறு வாழ்வதே கிடையாது.


பல ஞானிகள், பாரதியார், விவேகனந்தர் போன்றோர் ஏன் இளவயதிலேயே இறந்து விட்டார்கள் என்றால் புத்திசாலித்தனம

120 டுவா தூக்கம்

டுவா என்றால் மலாய் மொழியில் (மலேசியாவில் உள்ள வழக்கு மொழியில்)இரண்டு என்று அர்த்தம். சாதாரணமாக நாம் ஒரு தூக்கம் மட்டுமே தூங்குகிறோம். இது இரட்டை தூக்கம்(Double Sleep). இது ஆழ்ந்த தூக்கத்தை குறிக்கும். இந்த ஆழ்ந்த தூக்கத்தின் மூலமாக நமது உடலில் அனைத்து நோய்களையும் குணப்படுத்தலாம். இதை வெறும் தூக்கம் என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள். இது ஒரு வகையான சிகிச்சை.
நமது உடலில் மூன்று விஷயங்கள் உள்ளன. உடல், மனம், புத்தி, உடல் பற்றி நமக்கு நமக்கு ஏற்கனவே தெரியும். மனம் என்பது கோபம், டென்ஷன், பயம், பிடித்திருகிறது, பிடிக்கவில்லை போன்ற விஷயங்களை ஆராய்ச்சி செய்வது. புத்தி என்பது நல்லது, கெட்டது, சரி, தவறு என்று முடிவெடுத்து அந்த விஷயங்களை யோசிப்பதற்கு புத்தி என்று பெயர். 


இவ்வாறு நம்மிடம் மூன்று விஷயங்கள் உள்ளன. அனாடமிக் செவிவழி தொடுசிகிச்சை என்ற புத்தகம் முழுமையாக படித்தவர்களுக்கு மற்றும் DVD பார்த்தவர்களுக்கு இந்த மூன்றையும் பிரித்து பார்க்கும் பக்குவம் இருக்கும். அந்த புத்தகத்தை முழுமமையாக படிக்காதவர்கள் உடனே அதை வாங்கிப் படித்துவிட்டு இந்த டுவா தூக்கம் பற்றிய செய்தியைப் படித்தல் நன்றாக புரியும். 


உடலுக்கு நோய் என்றால் என்ன என்று தெரியாது. நமது உடல், உடலிலுள்ள அனைத்து செல்களும் 24 மணிநேரமும் நம் உடலிலுள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் வேலையை மட்டுமே சித்து கொண்டிருக்கின்றன.


நமது புத்தியில் தான் நோய் இருக்கிறது. இந்த புத்தி மனதை கெடுத்து மாசுப்பட்ட மனம் உடலுக்குள் சென்று நோய்களை ஏற்படுத்துகிறது. எனவே நாம் நம்மை ஒரு நோயாளி என்று எண்ணும் போது அந்த நோய் பெரிதாகிறது. இதுவே நம்மை ஒரு ஆரோக்கியமான நபர் என்று என்னும்போது ஆரோக்கியம் பெரிதாகிறது. நம்மை பற்றி நாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோமா அது உடலில் நடைபெறுகிறது.


உதாரணமாக ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு ஒருவர் தனித்தனியாகக் காரை ஓட்டிக்கொண்டு பயணம் செய்ய வேண்டும். அவர் காரை ஓட்டத் துவங்குவதற்கு முன்பே ‘500 கிலோ மீட்டர் 8 மணி நேரம் தொடர்ந்து காரை ஓட்டினால் நான் அந்த ஊருக்கு சென்ற உடன் களைப்படைந்து விடுவேன்’ என்றோ, நான் உடல் பலவீனப்பட்டு விடுவேன் என்றோ முதலிலேயே எண்ணினால் அப்படியே நடக்கும். அதாவது முதலிலேயே கற்பனை செய்து, முதலிலேயே முடிவெடுத்து தன் உடல் பலவீனமாகிவிடும் என்று புத்தியில் எண்ணுவதால் பிறகு அதன்படியே உடல் களைப்படைந்து விடுகிறது.
நான் எப்போதும் என் புத்தியை உடலில் வேலை செய்யவே விடமாட்டேன். நான் அவ்வாறு கார் ஓட்டும் பொழுது அப்படி நினைத்துக்கூட பார்க்க மாட்டேன். அதனால் இரவு முழுவதும் கார் ஓட்டி முடித்த பிறகும் களைப்படைவதில்லை. ஆரோக்கியமாக இருப்பதற்கு வாய்ப்பாக உள்ளது. இது நமக்கு தெரியாது. எப்பொழுது நம் புத்தியை நிறுத்துகிறோமோ அப்பொழுது நமது உடலிலுள்ள நோய்கள் குணமாகிவிடும்.
நான் கடந்த 7 வருடங்களாக தினமும் காலை 10 மணிமுதல் மாலி 6 மணிவரை ஒவ்வொரு ஊராக சென்று மைக்கில் பேசி வருகிறேன். அனால் பொதுவாக ஆசிரியர்கள், சொற்பொழிவாளர்கள், பேச்சாளர்கள், சில சாமியார்கள் 1 மணிநேரம் அல்லது 2 மணிநேரம் பேசிமுடித்த உடன் சோர்வு ஏற்ப்பட்டுவிடுகிறது. களைப்படைந்து விடுகிறார்கள். அவர்கள் நான் ஒரு மணிநேரம் பேசினேன் இரண்டு மணிநேரம் பேசினேன், மிகவும் களைப்படைந்துவிட்டேன் என்று கூறுகிறார்கள்.


அப்படி இருக்கும்போது என்னால் எப்படி தினமும் 7,8 மணிநேரம் தொடர்ந்து பேசமுடிகிறது என்றால் நான் புத்தியில் மணிநேரம் பேசினால் களைப்படைந்து விடுவேன் என்ற எண்ணத்தை வைத்துக்கொள்வது கிடையாது. 


ஆனால் அதற்காக நான் களைப்படைய மாட்டேன் என்று அர்த்தம் கிடையாது. ஒரு வேலை திடீரென்று களைப்படையலாம். உடல் களைப்படையும் பொழுது அது உடலின் வேலை, உடலாகவே களைப்படையும் பொது அது ஓய்வு எடுத்துக்கொள்ளும் என்று எண்ணுவேன். ஆனால் நானாகவே என் உடல் களைப்படைந்து விடும் என்று முன்னரே முடிவு செய்ய மாட்டேன். எனவே தயவுசெய்து ஒரு விஷயத்தைப் புரிந்தது கொள்ளுங்கள். ஒரு மனிதனின் புத்தியை நிறுத்தி வைத்துவிட்டால் அந்த வினாடி முதலே உடலிலுள்ள நோய்கள் குணமடைய தொடங்குகின்றன. இதுதான் உண்மை.
மறைமலை அடிகளார் இதை அரிதுயில் என்று கூறுகிறார். எப்பொழுது ஒரு மனிதன் அரிதுயில் அதாவது தன்னை மறந்து இந்த சிந்தனையும் இன்றி தூங்குகின்றானோ அவன் குணமடைய ஆரம்பிக்கிறான். நாம் தினமும் தூங்குகிறோம். ஆனால் நோய் இருக்கிறது. ஏன்னென்றால் உண்மையில் நாம் தூங்கவே இல்லை. இதை எப்படிக் கண்டுப்பிடிப்பது? 


தூங்கச்செல்லும்போது இரவு கடைசியாக எதைப்பற்றி யோசித்துத் கொண்டு தூங்கினோமோ அந்த விஷயத்தை காலை விழித்தவுடன் நாம் யோசித்த்தோம் என்றால் நமது புத்தி உடலில் வேலை செய்திருக்கிறது என்று அர்த்தம். 


சில நேரங்களில் காலை எழுந்திருக்கும் பொழுது நாம் யார்? எங்கிருக்கிறோம்? நம் பெயர் என்ன? என்ன வேலை செய்துக்கொண்டிருக்கிறோம்? என்று எல்லாம் மறந்த நிலையில் எழுந்திருப்போம். இந்த மாதிரி எப்பொழுது எழுந்த்திருக்கிறோமோ அதுதான் உண்மையான ஆழ்ந்த தூக்கம்.


சில குழந்தைகள் அந்த தூக்கத்தை தூங்குகின்றன. குழந்தைகள் எழுத்த உடன் அப்படியே அமர்ந்து இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அது சுறுசுறுப்படையும். அந்த மாதிரியான குழந்தைகள் ஆழ்நிலை தூக்கத்திற்கு சென்று வந்திருக்கின்றன என்று அர்த்தம். 


சில குழந்தைகள் எழுத்த உடன் வேகமாக செயல்படும். அந்த குழந்தைகள் ஆழ்நிலை தூகன் கொள்ளவில்லை என்று அர்த்தம். இது பெரியவர்களுக்கும் பொருந்தும்.
இந்த அரிதுயில் என்ற (டுவா தூக்கம்) ஆழ்நிலைத் தூக்கத்திற்கு பலவிதமான வழிமுறைகள் உள்ளன. ஆனால் இருப்பதிலேயே உலகத்தில் மிகவும் சுலபமான ஒரு வலி முறையை நாம் கற்றுக்கொள்ள போகிறோம். 


இந்த ஆழ்நிலைத் தூக்கத்திற்கு நாம் எப்படி எல்லா வேண்டும் என்றால் இதற்கு இருவர் தேவை. அதாவது ஒரே ஒருவர் மட்டுமே தனியாக இருக்கும் பொது அவரது புத்தி உடலுக்குள் வேலை செய்துக் கொண்டே இருக்கும். இரு உயிர்கள் எப்பொழுது ஒன்று சேர்கிறதோ அதாவது இரு உயிர்கள் என்பது இரண்டு நபர்களின் நுண்ணுடல் (சூட்சும உடம்பு) காந்த சக்தி (Aura) ஒன்று சேர்கிறதோ அப்பொழுது இருவரது புத்தியும் நிறுத்தப்படுகிறது. இது தான் இரகசியம். எனவே இந்த சிகிச்சைக்கு இருவர் தேவை.
டுவா தூக்கம் தூங்க எண்ணுபவர்கள் அமைதியான சூழ்நிலையில் தரையில் ஒரு விரிப்பின் மீது அல்லது கட்டிலில் மல்லாந்த நிலையில் படுத்துக்கொள்ள வேண்டும். கால்கள் நீட்டியிருக்க வேண்டும். பின்னக்கூடாது. இரண்டு கைகளையும் தனித்தனியே பின்னாமல் தளர்வாக வைக்க வேண்டும். கண்களை மூடிக்கொள்ள வேண்டும். அவர் அமைதியாக படுத்திருக்க வேண்டும். சிகிச்சை அளிப்பவர் அவர் தலைக்கு மேலே ஒரு அடி தள்ளி அமைதியாக அமர்ந்துக் கொள்ள வேண்டும். அவர் தரையில் படுத்திருந்தால் தலைக்கு அருகில் அமர்ந்துக்கொள்ளலாம். சிகிச்சை பெறுபவர் கட்டிலில் படுத்திருந்தால் சிகிச்சை அளிப்பவர் நாற்காலியில் அமர்ந்துக்கொள்ளலாம். 


சிகிச்சை அளிப்பவர் அமைதியாக அமர்ந்துக்கொண்டு இரண்டு கைகளிலும் உள்ள பாத்து விரல்களையும் அதன் நுனிப்பகுதியைக் கொண்டு சிகிச்சை பெறுபவரின் தலையில் அழுத்தம் கொடுக்க வேண்டும். அண்ணல் உலங்கை தலையில் படக்கூடாது. அதிகமாக அழுத்தக் கூடாது. அதற்காக பட்டும் படாமலும் வைக்கக் கூடாது. சிகிச்சை பெறுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பவரின் பத்து விரல்களும் தம் தலையில் அழுத்தம் கொடுக்கின்றன என்ற உணர்வு இருக்குமாறு அழுத்தம் தர வேண்டும். ஒரு தேங்காயை கையில் பிடிக்கும் பொது எப்படி பத்து இடங்களில் பத்து விரல்களும் படியுமோ அதைப்போல சிகிச்சை பெறுபவரின் தலையில் பத்து இடங்களில் தன்னுடைய பத்து விரல்களால் அழுத்தம் தர வேண்டும். சிகிச்சை கொடுப்பவர் இந்த முயற்சியையும் செய்ய வேண்டாம். அதாவது பிராண சக்தியை பிரபஞ்சத்திலிருந்து தன கைகளின் மூலமாக வாங்கி அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நினைத்து செயல்பட வேண்டியதில்லை. அவருக்கு பிராணக் ஹீலிங் தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. தியானம் செய்தால் நல்லது. பிராணக் ஹீலிங் தெரிந்தால் அதை செயல்படுத்தினால் நல்லது. அண்ணல் தேவையில்லை. சும்மா உட்காந்திருந்தால் போதுமானது.இந்த சிகிச்சையை கொடுப்பவர் சும்மா உட்காந்திருக்க வேண்டும். தேவைப்பட்டால் அவர் காத்து ஒலி வாங்கி (EAR PHONE) மூலம் பாடல் கேட்டுக் கொள்ளலாம். அது அவர் மனதிற்கு பிடித்த அமைதியான, மென்மையான பாடலாக இருக்க வேண்டும். அந்த அறையில் தொலைக்காட்சி இயங்கிக்கொண்டிருக்க கூடாது. அலைபேசி சப்தம் எழுப்பாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த ஒரு சப்தமும் கேட்காமல் இருந்தால் மிகவும் நல்லது. முடிந்தவரை அழைப்புமணி (CALLING BELL), ஒலிப்பான் (HORN) போன்ற சப்தங்கள் எதுவும் இல்லாமல் அந்த அரை அமைதியாக இருந்தால் இந்த சிகிச்சையின் பலன் அதிகமாக கிடைக்கும். ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை சிகிச்சை கொடுப்பவர் கைவிரல்களை சற்று நகர்த்தி வேறு இடத்தில் அழுத்தம் கொடுக்கலாம். தலைபகுதிக்குள் மட்டுமே அந்த மாற்றம் இருக்கவேண்டும். முன்தலை, உச்சந்தலை, பின்தலை காதுகளுக்கு அருகில் உள்ள பகுதி ஆகிய இடங்களில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை மாற்றி அழுத்தம் கொடுத்துவர வேண்டும். ஏனென்றால் நமது மூளையில் இந்த இடங்களில் தொடுகின்றோமோ அந்தந்த இடம் சம்பந்தப்பட்ட இடங்கள் தூங்க ஆரம்பிக்கின்றன. தலையில் உள்ள அனைத்து இடங்களையும், தொட்டுவிட்டால் உடலில்; உள்ள அனைத்து உறுப்புகளும் தூங்கி தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும். சிகிச்சை அளிப்பவர் கைகளில் வலி ஏற்பட்டால் ஒரு கையின் ஐந்து விரல்களை மட்டும் தலயில் வைத்துக்கொண்டு மற்றொரு கையின் ஐந்து விரல்களுக்கு ஓய்வு அளித்த்க்கொள்ளலாம்.இப்படி முதல் முறை சிகிச்சை கொடுக்கும் பொது குறைந்தது 4 மணிநேரம் தலையில் விரல்களால் அழுத்தம் தரவேண்டும்.
நீங்கள் யாருக்காவது இந்த சிகிச்சையை செய்து பாருங்கள் முதல் அரைமணி நேரத்திலேயே உங்களால் சிகிச்சை அளிக்கப்படும் நபர் இதுவரை இல்லாத அளவுக்கு அரை மணிநேரம் சென்றவுடன் வித்தியாசமான முறையில் அதிக அளவில் குறட்டை விட்டு தன்னை மறந்து தூங்கிவிடுவார். படுத்திருப்பவருக்கு நான் யார்? இந்த ஊர்? போன்ற எதுவுமே தெரியாது. ஒருவேளை 4 மணி நேரத்திற்குப் பிகு முக்கியமான வேலை இருக்கிறது அல்லது விமான நிலையம் செல்லவேண்டும் என்ற நிலை இருந்தால் கூட அனைத்தையும் மறந்து அவர் தூங்கிவிடுவார்.அவர் அவ்வாறு தூங்குவதை நாம் உணர முடியும் என்றாலும் நாம் விரல்களால் அழுத்தம் கொடுப்பதை தொடர்ந்து செய்ய வேண்டும். எவ்வளவு நேரம் அழுத்தம் கொடுக்கிறோமோ அவ்வளவு ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்வார். எனவே முதல்முறை இந்தப் பயிற்சி சியும் பொது தயவுசெய்து குறைந்தது 4 மணி நேரத்திற்கு கைகளால் அழுத்தம் தர வேண்டும். அதற்கு தகுந்தார்போல் சிகிச்சை பெற்றுக் கொள்பவர் தேவைக்கு தகுந்தார் போல் உணவருந்திவிட்டு, தாகம் இருப்பின் புதிய அளவு நீர் அருந்திவிட்டு, இயற்க்கை உபாதைகளை நிறைவு செய்து விட்டு இந்த சிகிச்சையில் பங்கேற்க வேண்டும். சிகிச்சை அளிப்பவரும் அப்படியே. உனக்கு, நீர் போன்றவற்றை போதுமான அளவு எடுத்துக்கொண்டு புற வேலைகளை நிறைவு செய்து விட்டு பின் 4 மணிநேரம் அவருக்கு சிகிச்சை அளிக்க தயாராக வேண்டும். ஏனென்றால் ஒரு மணிநேரம் கழித்து சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வோ, மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வோ, பசி உணர்வோ ஏற்படும் பொழுது ஆழ்ந்த தூக்கத்திலிருந்து வெளியே வர வேண்டியகதாகிவிடும். எனவே சிகிச்சை தருபவர் சிகிச்சை பெற்று கொள்பவர் இருவருமே இதை கவனத்தில் கொள்ள வேண்டும். மற்றொரு முக்கியமான விஷயம், சிகிச்சை அளிப்பவர் இரண்டு மூன்று மூன்று நாட்கள் தூக்கமின்றி இருக்கும் நிலையிலோ, உடல் நிலை பாதிக்கப் பட்ட நிலையிலோ சிகிச்சை அளிக்கக் கூடாது. பெண்கள் மாதவிடாய் சமயத்தில் சிகிச்சை அளிக்க கூடாது. ஆனால் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மிகவும் நோய்வாய்பட்டவர்கள் சிகிச்சை அளிக்க கூடாது. ஆனால் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். 


வீட்டில் மிகபெரிய சோகமான நிகழ்ச்சி. நெருங்கிய உறவுகள் யாரேனும் தவறியிருக்கலாம். அத்தகைய சோகமான சூழ்நிலையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். சிகிச்சை அளிக்கக்கூடாது. 


சிகிச்சை அளிப்பவர் இளநீர், தண்ணீர், பழச்சாரு போன்றவற்றை அருகில் வைத்துக் கொண்டு தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்ளலாம்.சிகிச்சை பெற்றுக்கொள்பவருக்கு இது தேவைப்படாது. ஏனெனில் ஆழ்நிலைத் தூக்கத்திற்கு சென்று விடுவதால் அவருக்கு இது தேவைப்படாது. 


வாசியோகம் தெரிந்தவர்கள், பிராணாயாமம் தெரிந்தவர்கள் சிகிச்சை அளிக்கும் போது வாசியோகம் அல்லது பிராணாயாமம் சிதுக்கொண்டே சிகிச்சை அளிக்கும் போது மெகா அற்புதமான பலன் கிடைக்கும். பிராண ஹீலின் தெரிந்தவர்கள் பிராண சக்தியை தன் உடல் மூலமாக பெற்று தை சிகிச்சை பெறுபவரின் உடலில் அனுப்பும் போது நல்ல பயன் கிடைக்கும். தெரியாதவர்கள் அதைப்பற்றி கவலை பட வேண்டாம். சும்மா அழுத்தம் கொடுத்தால் போதுமானது. இப்படி செய்தால் அரைமணி நேரத்திற்கு பிறகு சிகிச்சை பெறுபவர் தூங்கிவிடுவார். சிகிச்சை அளிப்பவர் அமைதியாக் அமர்ந்து 4 மணி நேரம் சிகிச்சை கொடுத்தபின் மெதுவாக கையை எடுத்துவிட்டு தாங்களும் உறங்க செல்லவோ அல்லது வேறு வேளைகளிலோ ஈடுபடலாம். தூங்கிக்கொண்டு இருப்பார் அதற்கு பின் பல மணிநேரம் கழித்துதான் எழுவார். இதுவே தொடர்ந்து 48 மணிநேரம் தொடர்ந்து சிகிச்சை அகிக்கும் பட்சத்தில் 48 மணிநேரம் தூக்கத்தில் தான் இருப்பார். ஆனால் அப்படி சியைக் கூடாது. ஏனென்றால் 8 மணிநேரம் அல்லது 10 மணிநேரத்திற்குப் பிறகு உடலுக்கு தாகம், உணவு தேவை ஆகியவை ஏற்படும். மலம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும். இந்த விஷவங்காலி சியாமல் அவருக்கு சிகிச்சை அளிக்க கூடாது. பலன் குறைந்து விடும். அதிகபட்சம் 10 மணிநேரம் முதல் 12 மணிநேரம் வரை சிகிச்சை அளித்தால் போதும். கைகளை எடுத்தவுடன் ஒருசிலர் அரைமணிநேரத்தில் எழுந்து விடுவார்கள், ஒருசிலர் 10 மணிநேரம் கூட தூங்குவார்கள். விட்டுவிடுங்கள். அது ஒவ்வொருவரின் உடலின் தேவையை பொறுத்தது. சிகிச்சையை குறைந்தபட்சம் 4 மணிநேரம் கொடுக்க வேண்டும். அடுத்தநாள் 4 மணிநேரம் சிகிச்சை அளித்தால் மிகவும் நல்லது. இல்லையென்றால் 1 மணிநேரம் சிகிச்சை அளிக்கலாம். குறைந்தது 1 மணிநேரம் சிகிச்சை அளிப்பதே பலன் அளிக்கும். யாராவது மிகபெரிய நோய் உள்ளவர்கள், உலக வைத்தியத்தால் குணப்படுத்த முடியாது என்று முடிவு செய்யப்பட வியாதிகள் அனைத்தும் இந்த முறையில் குணமடையலாம். 


தினசரி 4 மணிநேரம் இதற்காக ஒதுக்கினால் போதும். ஒருவரை வேலைக்கு அமர்த்திக்கொண்டு இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம். தினசரி மற்ற நேரங்களில் TV, ஏதேனும் ஒன்றை பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்த வண்ணம் இருப்பதை போல் ஒருவரை வேலைக்கு சேர்த்துக்கொள்ளலாம்.
குணப்படுத்த முடியாத வியாதி என்று கூறி அதற்கு பல இலட்சம் அல்லது கோடி ரூபாய் செலவு செய்து மருத்துவம் பார்ப்பதை விட இந்த மாதிரி ஒருவரை சிகிச்சைக்கு மாத சம்பளத்திற்கு நியமித்துக் கொள்வது நல்ல பயன் அளிக்கும். ஒருவருக்கு வேலை கொடுத்த மதிரும் ஆயிற்று. நம் வியாதி குணமடைந்த மாதிரியும் ஆயிற்று.
வீட்டில் ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி இந்த சிகிச்சையை கொடுத்துக்கொள்ளலாம். ஒருவர் தலையில் இன்னொருவர் கைவைக்கும்போது இரண்டு பேருடைய ஆராக்களும் ஒன்று சேர்க்கிறது. இரண்டு உயிரும் கலக்கிறது. ஈருயிர் சேர்ந்து ஆழ்நிலைத் தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. இதற்குப் பெயர் டுவா தூக்கம். 


இந்த சிகிச்சையை மலேசியாவில் உள்ள முத்தம்மாள் என்கிற பெண்ணுக்கு அவரது தாத்தா கற்றுக்கொடுத்திருகிறார். அவர் ஒரு மலேசியா வாழ் தமிழர். இந்த சிகிச்சை அப்பொழுது யாருமே கண்டுக்கொள்ளவில்லை. இதுவரை யாருமே பயிற்சி செய்யவில்லை. ஆனால் இப்போது அவர் எனக்கு கற்றுக்கொடுத்தார். நான் எனக்கும் மற்றவர்க்கும் இதை செயல்படுத்தி பார்த்தேன். மிகவும் அற்புதமாக இருக்கிறது. அதனால் தற்போது இதைப்பற்றி எல்லா வகுப்புகளிலும் பேசிக்கொண்டு இருக்கிறேன். இந்த ஒரே ஒரு சிகிச்சை மட்டும் தெரிந்துக்கொண்டால் மனது உலகை ஆரோக்கியப்படுத்தி விடலாம். இதைதான் கட்டிப்பிடி வைத்தியம் என்று கூறினார்களோ என்னவோ? வசூல் ராஜா M.B.B.S திரைப்படத்தில் கட்டிப்பிடி வைத்தியம் என்று இருக்கிறது. 


இப்பொழுது யோசித்துப் பார்கிறேன், குழந்தைக்கு நோய் வந்தால் மடியில் படுக்க வைத்து அதன் தலையை தடவி கொடுக்கிறோம். இன்னொருவர் அருகில் இருந்தால் போதும். ஒருவருக்கு நோய் வந்தால் மற்றொருவர் அருகில் ஆதரவாக இருந்தாலே போதும் என்பது உண்மை. அனால் இப்பொழுது அனைவரும் அனாதைகளாக சுற்றிக் கொண்டிருக்கிறோம். இன்றைய நாகரீக வாழ்கையில் பெரும்பாலானோர் கூட்டு கும்பமாக இல்லை. ஏன் கணவன் மனைவிகூட வாரம் ஒரு நாள் மாதம் ஒரு நாள் சந்தித்துக் கொள்கிறார்கள். வேலை அல்லது தொழில்ரீதியான காரணங்களால் தனித்தனியே வாழ்கின்றனர். இதனால் இந்த தனிமையான வாழ்க்கை முறையே அவர்களுக்கு நோயைக் கொண்டுவருகிறது. எப்பொழுதும் இருவர் ஒன்று சேர்ந்து வாழும் போது நம் மனதுக்கும் பிடித்தவர்கள் உடன் இருக்கும்போது மனது நோய்கள் குணமடைகிறது. பல கணவன் மனைவிமார்கள் இருவரும் ஒன்று சேர்ந்து இருக்கும் போது அன்பாக அமைதியாக ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள். குழந்தைகள் பெற்றோர்களை கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்குவதைப் பார்த்திருக்கிறோம். அந்த குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் டுவா தூக்கம் அங்கே நடைபெறுகிறது. எனவே இனி தினமும் டுவா தூக்கம் கொள்வோம். நமது உடலிலுள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்தி ஆனந்தமாக ஆரோக்கியமாக வாழ்வோம். எனவே இதை யார் யாருக்கு வேண்டுமானாலும் செய்யலாம். எனவே இனிமேல் யாருடைய நோயையாவது குணப்படுத்த வேண்டும் என்று எண்ணினால் எதைபற்றியும் கவலைபடாமல் உங்களுக்கு எந்தவித வர்மா புள்ளியோ, பிராண ஹீலிங்க்கோ, முத்ரா, ரெய்க்கி, நியுரோ தெரபி போன்ற எதுவும் தெரிந்திரிக்க வேண்டிய அவசியம் இல்லை. யார் மீது உணகளுக்கு அக்கறை இருக்கிறதோ, அவர்களை படுக்க வைத்து அவர்கள் தலையில் 10 மணிநேரம் கையை வையுங்கள். அவர்கள் ஆரோக்கியம் அடைவார்கள். நான் இத சிகிச்சையை பலருக்கும் கொடுத்து வருகிறேன். மிகவும் அற்புதமாக இருக்கிறது. சில நபர்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் போது நாம் 5 மணிநேரம் முதல் 10 மணிநேரம் வரை தொடர்ந்து சிகிச்சை அளிக்கிறேன். நான் ஒருவனே அனைவருக்கும் சிகிச்சை அளிக்க முடியாது. எனவேதான் நான் இதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறேன். இந்த முறையை நான் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் தங்கள் கையைக் கொண்டு இந்த சிகிச்சையை அளிக்கலாம். இதற்க்கு நான் தேவை இல்லை. எனவே இதை புரிந்துக்கொண்டு மற்றவர்கல்லும் கற்றுக்கொடுங்கள். மற்றவர்களையும் தெளிவுப்படுத்துங்கள். 


ஒரு விஷயம் பாருங்கள்! இதை கற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு சொல்லிகொடுக்க ஒரு அரைமணி நேரம் ஆகுமா? உங்கள் உறவினர்கள் நண்பர்கள் என அனைவருக்கும் சொல்லிதாருங்கள். கேட்கிறார்களோ, இல்லையோ உங்களுக்கு தெரிந்த இந்த சிகிச்சையை மற்றவர்கல்லும் சொல்லி கொடுங்கள். ஒருவேளை இந்த சிகிச்சையை அவர்கள் பயன்படுத்தி நன்மை அடைந்தால் உங்களை தேடி வந்து உங்களை வாழ்த்திவிட்டு செல்வார்கள் பாருங்கள். அந்த சந்தோஷத்திற்கு ஈடு இணையே கிடையாது. 


சத்தியமாக நான் ஒன்று கூறுகிறேன். இப்போது நான் இறந்தாலும் மிகுந்த மகிழ்ச்சியாக சந்தோஷமாக நிம்மதியாக இறப்பேன். ஏனென்றால் என் மூலமாக இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்கள் ஆரோக்கியமடையும் கலையை கற்றுக்கொண்டனர் என்று எண்ணும் போது உயிருக்கு மேலும் மெருகேறுகிறது. நாம் வாழ்ந்த இந்த வாழ்விற்கு அர்த்தம் கிடைக்கிறது. நாம் பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம், என்று இல்லாமல் எல்லோருக்கும் நன்மை அளிக்கும் விதமாக ஏதாவது செயல் புரிய வேண்டும். இப்பொழுது முதல் ஒரு சங்கல்ப்பம் எடுத்துக் கொள்ளுங்கள் இந்த சிகிச்சையை எனது நண்பர்கள், உறவினர்கள், எனக்கு தெறிந்த மற்ற எல்லோருக்கும் கற்றுக்கொடுப்பேன். பேருந்து பயணம் அல்லது வழிப்பயணம் செய்யும் போதோ எதுவாக இருந்தாலும் நான் சந்திக்கும் நபர்களுக்கு ஒரு அரைமணிநேரம் இதைப்பற்றி சொல்லிக்கொடுப்பேன். இதன் மூலமாக எனக்கு புண்ணியம் கிடைகிறது என்று எண்ணி கொள்வேன். இந்த டுவா தூக்கம் மூலமாக, அரிதுயில் மூலமாகா ஆழ்நிலைத் தூக்கம் மூலமாக நம் உடலில் உள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.

119 அம்மா தன் குழந்தையுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது.

எப்பொழுது ஒரு அம்மா தன் குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு உணவு ஒழுங்காக ஜீரணமாவது கிடையாது. என் குழந்தையுடன் நான் அமர்ந்து சாப்பிட்டால் எனக்கு எப்படி ஜீரணம் ஆகாது என்று தாய்மார்கள் கேட்பீர்கள். ஒரு அம்மா தன் குழந்தையுடன் அமர்ந்து சாப்பிடும் பொழுது அவர் தன் உணவில், கவனம் செலுத்துவதை விட்டு விட்டு குழந்தையை மட்டுமே கவனித்துக் கொண்டிருப்பார். குழந்தையை அதட்டுவார். சாப்பிடும் போது பேசாதை. கறிவேப்பிலையைச் சாப்பிடு. ஒழுங்காக உட்கார்ந்து சாப்பிடு. சட்னி தொட்டுக் கொள். கீழே கொட்டாதே இப்படி அந்தத் குழந்தையைக் கவனித்துக் கொண்டு அல்லது குழந்தைக்கு ஊட்டிக் கொண்டு ஒரு தாய் தானும் சாப்பிட்டால் குழந்தை நன்றாக இருக்கும், ஆனால் தாயின் உணவு ஒழுங்காக ஜீரணம் ஆகாது. எனவே தாய்மார்கள் முதலில் உங்கள் குழந்தைக்கு மற்றும் உங்கள் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்கும் பரிமாறிவிட்டு அவர்கள் திருப்தியாக சாப்பிடுகிறார்களா என்று கவனித்து விட்டு சந்தோஷமாக நீங்கள் தனியாக உட்கார்ந்து சாப்பிடுங்கள். எனவே ஒரு தாய் தன் குழந்தைகளுடன் உட்கார்ந்து சாப்பிடக் கூடாது. மேலும் மற்றவர்களுக்குப் பரிமாறிக் கொண்டே சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிடும் பொழுது கவனம் தன் உணவை விட்டு விலகி மற்றவர்கள் ஒழுங்காகச் சாப்பிடுகிறார்களா என்பதிலேயே இருப்பதால் நம் உணவு ஒழுங்காக ஜீரணம் ஆவதில்லை. கைக்குழந்தையை வைத்துக் கொண்டிருக்கும் தாய்மார்கள் அந்த குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டே இவர்களும் சாப்பிடுவார்கள். அப்படிச் சாப்பிடக் கூடாது. சில குழந்தைகள் நாம் சாப்பிடும் போது பக்கத்தில் வந்து தொந்தரவு செய்து கொண்டேயிருக்கும். அப்பொழுது அந்தக் குழந்தையுடன் கொஞ்சிக் கொண்டோ அல்லது விரட்டிக் கொண்டோ, மிரட்டிக் கொண்டோ, அதட்டிக் கொண்டோ நீங்கள் சாப்பிடும் போது உங்கள் உணவு ஜீரணம் சரியாக நடப்பதில்லை. எனவே கைக்குழந்தையை வைத்துக் கொண்டிருக்கும் அம்மாக்கள் அந்தக் குழந்தையை மாமியாரிடமோ அல்லது யாரிடமாவது கொடுத்து விட்டுச் சாப்பிடும் அந்த ஐந்து நிமிடங்கள் தயவு செய்து உங்கள் சாப்பாட்டை மட்டுமே கவனித்துச் சாப்பிடுங்கள். வாழ்வோம் ஆரோக்கியமாக!

118 பிடித்ததைப் பிடி பாகம் - 2

இன்றைய நவநாகரிக உலகில், எதிலும் வேகம், அவசரம் என்று சென்று கொண்டிருக்கும், இன்றைய தலிமுரையினரிடம் உணவை பற்றிய அக்கறை, விழிப்புணர்வு குறைவாக உள்ளது. அதிலும் இன்று பெரும்பாலும் வீடுகளில் சமையல் செய்வதை விட உணவகங்களில் தயாரிக்கும் உணவுகளையே விருப்ப உணவாக கொண்டுள்ளனர். அதையும் மீறி வீட்டில் சமைக்கலாம் எனில் நொடியில் தயாராகும் மசாலா உணவுகளைப் பற்றி விளம்பரங்களின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு அதை கொண்டு தயாரிக்கும் உணவுகள் நம் உடலை பதம் பார்க்கின்றன. அவசர கதியால் காலை வேளையில் அலுவலகம் அல்லது எதாவது ஒரு பணிக்கு எட்டு மணிக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய சூழ்நிலையில் ஏதாவது ஒரு உணவை காலை சிற்றுண்டி செய்து சாப்பிட்டு விட்டு ஓடுகிறோம்.

வீட்டில் உள்ள பெண்கள் தனக்கு என்ன உணவு பிடிக்குமோ அந்த உணவை சமைத்துவிடுகிறார்கள். அல்லது கணவன் குழந்தைகளுக்கு என்ன உணவு பிடிக்கிறதோ அதை சமைத்துவிடுகிறார்கள். ஆனால் அது உண்மையில் வீட்டில் உள்ளவர்களுக்கு பிடிக்கிறதா, இல்லையா என்று யோசிப்பதே கிடையாது. உதாரணத்திற்கு ஒரு வீட்டில் சப்பாத்தியும், குருமாவும் செய்து வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். குடும்பத்தினர் அந்த சாபாதியை எடுத்து சாப்பிட ஆரம்பிக்கின்றனர். குடும்பத்தில் உள்ள ஐந்து நபர்களில் இருவருக்கு மட்டுமே அந்த உணவு பிடிக்கிறது. மற்ற மூவருக்கும் பிடிக்கவில்லை. அந்தமூன்று பெரும் வேற வழியில்லாமல் அந்த உணவை சாப்பிடுகின்றனர். ஏனேன்றால் சாப்பதியை தவிர வேற உணவு உணவு சமைக்காமல் அதையே சாப்பிட்டு அலுவலகத்திற்கோ, பள்ளிக்கோ செல்கின்றனர்.

பிடிக்காத உணவை உட்கொள்வதால் உடல் கஷ்டபடுகிறது. எனவே பிடிக்காத உணவை சாப்பிட்டு சென்ற மூவரும் அலுவலகத்திலோ பள்ளியிலோ தங்கள் வேலையை சரிவர செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர். உணவின் மூலம் சக்தி கிடைப்பதற்கு பதிலாக அது கஷ்டத்தையே தருகிறது. இனிமேல் வீடுகளில் உணவு தயார் செய்யும் பொழுது இரண்டு மூன்று வகை உணவுகளை, சாப்பிடும் உணவு மேஜையில் தயாராக வைத்துக்கொள்ளவேண்டும். உதாரணத்திற்கு தேன், நெல்லிக்காய் வற்றல், பன், ரொட்டி, ஊறுகாய் போன்றவை. இவை எளிதில் கெட்டுப்போகாது. அதனால் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

இப்படி குறைந்தது இந்து அல்லது ஆறு வகை ரெடிமேட் உணவுகளை மேஜையில் வைத்துக்கொள்ளும் பொழுது,ஒருவேளை சமைத்த உணவு பிடிக்கவில்லை எனில் மேற்கொண்ட ரெடிமேட் உணவுகளில் புகுந்துவிடலாம்.

ஆனால் இதைக் கேட்க்கும் போது முதலில் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். "ஏங்க காலையில் இட்லியோ, தோசையோ சமைப்பது பெரிய விஷயம். இதில் ஐந்து ஆறு வகை உணவு சமைப்பது என்ன சுலபமான வேலையா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. யோசித்துப்பாருங்கள். நாம் எதற்காக வாழ்கிறோம். மகிழ்ச்சியாக நிம்மதியாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக பணம் மட்டும் நிறைய சேர்த்து பொன் நகைகள், நிலம், ஆடம்பர பங்களா, வங்கி சேமிப்பில் போடுவது என்று நிறைய செய்கிறார்கள்.

எனக்கு புரியவில்லை, எதற்காக நிறைய பணம் சேர்க்கிறார்கள் என்று. பல மனிதர்கள் பணம் சேர்த்து வைத்து விட்டு இறந்து விடுகிறார்கள். எதற்கு இந்த மானம் கெட்ட பிழைப்பு ? பணம் சம்பாதிப்பது செலவளிப்பதற்குதானே ? தனக்கு பிடித்த உணவுகளை சாப்பிடுவதற்கு கூட செலவு செய்யவில்லை என்றால் வேறு எந்த செலவு செய்ய போகிறார்கள்.

எனவே பண வசதி படைத்த மனிதர்கள் சமையலுக்காக தாராளமாக செலவு செய்யுங்கள். சமைப்பதற்காக ஆட்களை நியமிக்கலாம். நிறைய உணவு வகைகளை சமையுங்கள். பிடித்தால் சாப்பிடுங்கள் இல்லை என்றால் மற்றவர்களுக்கு கொடுங்கள். இல்லாவிட்டால் அது குப்பைக்கு கூட போகட்டும், இதனால் ஒன்றும் பாதிப்பு இல்லை.

உணவை வீணடிக்கக் கூடாது என்று பலரும் கூறுகிறார்கள். நமக்கு வேண்டாதவற்றை உடல் வீனகிப்போகும் என்று அர்த்தம். எனவே குப்பையில் போடுவதை பற்றி கவலைப்படவேண்டாம். குப்பையில் வீசவேண்டிய உணவை வயிற்றுக்குள் கொட்டினால் உடல் வீணாகிவிடும். உணவை வீணாக குப்பைத்தொட்டியில் கொட்ட வேண்டாம் என்று கூறுகிறார்கள். அப்படி வீணான உணவை குப்பைத்தொட்டியில் கொட்டுவதில் எந்த தவறும் இல்லை. அந்த உணவை நாய்களோ அல்லது பூச்சிகளோ சாப்பிடத்தான் போகிறது. மீண்டும் அது இயற்கையோடு ஒன்றிவிடும். அதனால் எந்த ஒரு பாதிப்பும் கிடையாது என்பதை புரிந்துகொண்ட உணவை விரையமாக்குங்கள்.

புரிந்து கொள்ளுங்கள் ! நான் விரையமாக்குங்கள் என்று சொல்வதன் அர்த்தம் தேவையில்லாமல் விரையமாக்குங்கள் என்ற பொருள் அல்ல. உங்களுக்கு பிடிக்காத உணவை கீழே கொட்டுவதற்கு தயங்காதீர்கள் என்பது தான்.

எனவே உணவிப் பொறுத்த வரையில் நாக்குக்குப்பிடித்தால் மட்டும் போதும். சிலர் சில விசயங்களை ஆழ்மனதில் பதிவு செய்து விடுவார்கள். அதாவது எனக்கு இனிப்பு பிடிக்காது . காரம் பிடிக்காது. இது ஒரு மாயை இது ஆழ்மனதில் பதிவு செய்யப்பட்ட ஒரு பதிவு.

உதாரணமாக இனிப்பு பிடிக்காது ஏன் என்று தெரியவில்லை, காரம், உப்பு, புளிப்பு உள்ள உணவுகள் என்றால் சாப்பிட விரும்புகிறேன். ஆனால் ஏனோ இனிப்பு பிடிக்கவில்லை. ஏற்கனவே இனிப்பின் மூலம் கிடைக்கும் சத்துக்கள் ஏன் உடலில் அதிகம் இருக்கின்றன என நம்புகிறேன். இப்போது நிகழ்ச்சியில் உரையாற்றுவதால் ஒருவேளை எனக்கு இனிப்பு பிடிக்காமல் இருக்கலாம். இதுவே நான் வேற வேலை மாற்றிசெய்ய நேரிட்டால் பிடிக்கலாம். எனக்கு இனிப்பு பிடிக்காது என்ற பதிவை நான் அளித்து விட்டேன். எனவே இனிப்பு சாப்பிடமுயற்சி செய்து பார்ப்பேன். பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுவேன். தினமும் முயற்சி செய்து கொண்டு தான் இருப்பேன்.

உதாரணமாக உங்களிடம் பத்து பேரிச்சம்பழம் கொடுத்தால் நீங்கள் பத்தையும் சாப்பிடுவீர்கள். ஆனால் நான் ஒன்று தான் சாப்பிடுவேன். அதையும் நன்றாக சுவைத்து சாப்பிடுவேன் அதன் சுவை திகட்டுகிறது. அதற்குமேல் அதில் உள்ள சுவைக்காக இரண்டாவது சாப்பிடமுடியவில்லை. நாக்கு வேண்டாம் என்ற கூறுகிறது. உடனே எனக்கு இனிப்பு பிடிக்காது என்று ஒரு பதிவை ஏற்படுத்தவில்லை ஒரு வேளை மீண்டும் நாளை பிடிக்கலாம். ஒரு சமயம் ஒரு வீட்டிற்கு சென்றிருந்த பொழுது அங்கு ஒரு இனிப்பு எனக்கு வழங்கப்பட்டது. அந்த இனிப்பு சுவை எனக்கு மிகவும் பிடித்திருந்தால் 5 முறை வாங்கி இனிப்பு சாப்பிட்டேன். ஏன் இனிப்பு மட்டுமே சாப்பிட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை, அந்த சமயம் எனக்கு இனிப்பு அவ்வளவு பிடித்தமானதாகவும் இருக்கிறது.

எனவே உணவைப் பொறுத்தவரையில் நீங்கலாக உன்கள் ஆழ்மனதில் ஏற்படுத்தி வைத்திருக்கும் பதிவுகளை அழித்துவிடுங்கள். நீங்கள் உங்களுக்கு அது பிடிக்கும் இது பிடிக்காது என்று ஒரு வரைமுறை வைத்துக்கொள்ளாதீர்கள். ஒவ்வொருமுறையும் சோதித்துப்பாருங்கள். இந்த உணவு பிடிக்கிறதா என்று, ஏனென்றால் நம் உடலில் உள்ள தன்மைகள் ஒவ்வொருமுறையும் மாறிக்கொண்டே இருக்கிறது. நமது வேலைகள் மாறுகிறது. வேறு வேறு வீடுகளில், மழைக்காலம்,வெயில்க்காலம், குளிர்க்காலம் என்று பஞ்சபூதங்களின் மாற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. எனவே நமக்கு என்ன பிடிக்கும் என்று நமக்கே தெரிவதில்லை. இந்த உண்மையை புரிந்து கொண்டு பிடித்த உணவை தாராளமாக சாப்பிடலாம்.

எனவே ஒரு விதிமுறை என்னவெனில் நமக்கு எந்த உணவு பிடிக்கிறதோ அது நமக்கு மருந்து. எந்த உணவு பிடிக்கவில்லையோ அது நமது உடல் நலத்திற்கு கேடு என்ற தத்துவத்தை மனதில் ஆழமாக பதிவு செய்து கொள்ளுங்கள்.

நல்லது கெட்டது என்பது வேறு, பிடித்தது, பிடிக்காதது என்பது வேறு. பலர் நல்லது என்பதற்காக பலப்பொருட்களை சாப்பிடுகிறார்கள். உதாரனதிர்க்காக பாகற்காய் நல்லது என்று படித்திருப்பார்கள். தினமும் பாகற்காய் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். இது கெடுதலான விஷயம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

உதாரனதிர்க்காக ஒரு 5 வகை இனிப்பு பண்டங்களை உங்களுக்கு தருகிறேன். நீங்கள் சாப்பிட்டுப்பாருங்கள். ஒரு குறிப்பிட்ட இனிப்பு வகை மட்டும் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். மீதம் உள்ள நான்கு இனிப்புகள் உங்களுக்கு பிடிக்காது. எனவே இனிப்பில் பலவகை உள்ளது.

காரத்தில் பலவகை உள்ளது, மிளகாய் காரம், மிளகு காரம், இஞ்சிக் காரம் என பலவகை காரம் உள்ளது. எனவே எந்த காரம் பிடிக்கிறதோ அந்த காரம் சாப்பிடுங்கள். ஒரு விருந்து வைக்கிறார்கள் முப்பது பேர் சாப்பிடுகிறார்கள். சாப்பாடு, குழம்பு, ரசம், மோர் என பலவகை உணவுகளை சமைத்து பரிமாறுகிறார்கள். அனைவரும் சாப்பிட்டு முடிக்கிறார்கள். அவர்களிடம் கேளுங்கள் உங்களுக்கு எந்த உணவு பிடித்திருக்கிறது என்று, அவர்களில் ஒருவர் கூட்டு என்பார் மற்றொருவர் சாம்பார் பிரமாதம் என்பார். பாயசம் சூப்பர் என்பார் மற்றொருவர். இப்படி ஒவ்வொருவரும் தனக்கு பிடித்தது என்று ஏதோ ஒன்றை குறிப்பிடுவார்கள். ஒவ்வொருவருக்கும் வேறுவேறு உணவு பிடிப்பதாக சொல்வார்கள். எனவே ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், ஒரு உணவை குறிப்பிட்டு இது நன்றாக இருந்தது. அது நன்றாக இருந்தது என்று சொன்னால கவலைபடாதீர்கள். தன்னுடைய நாக்குக் பிடிக்கவில்லை என்றால் நன்றாக இல்லை என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக நான் சாப்பிட்டு முடித்தவுடன் கேரட் பொரியல் நன்றாக இருந்தது, பீட்ரூட் பொரியல் நன்றாக இல்லை, பிடிக்கவில்லை என்று சொன்னால் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் எனது நாக்குக்கு பீட்ரூட் பொரியல் பிடிக்கவில்லை அவ்வளவுதான்.

எனவே எந்த ஒரு இடத்தில் சாப்பிட்டாலும் இது நன்றாக இருந்தது. இது நன்றாக இல்லை என்ற வார்த்தையை யாரும் பயன்படுத்தாதீர்கள். இது மிகவும் நன்றாக இருக்கிறது. ஆனால் எனக்குப் பிடிக்கவில்லை என்று கூறினால் அதில் அர்த்தம் உள்ளது.

உலகில் உள்ள அனைத்துமே அதனதன் நிதியப்படி ஒழுங்காகத்தான் இருக்கிறது. எல்லாமே நன்றாகத்தான் இருக்கிறது. அவரவர் பார்க்கும் பார்வையைப் பொறுத்து தான் அதிஸ் மாறுபாடு தெரிகிறது.

எனவே இனிமேல் ஒரு உணவை எனக்குப்பிடித்திருக்கிறது அல்லது பிடிக்கவில்லை என்ற அடிப்படையிலேயே பாருங்கள். இது நல்லது, கெட்டது என்ற பார்வையில் பார்க்காதீர்கள்.

எனவே நாம் பிடித்த உணவை மட்டுமே உண்ண வேண்டும். பிடிக்காத உணவுகளைப் பற்றி யோசிக்கவேண்டியதில்லை. அவற்ற்றை விட்டு விடலாம். இதப் பற்றி இன்னும் விரிவாக கூற எத்தனை உதாரணங்கள் வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டே போகலாம். இருப்பினும் இதுவே நமக்கு நன்றாக புரிந்திருக்கும் என்பதால், இனிமேல் நிம்மதியாக சாப்பிடுங்கள், சாப்பிடவே நாம் பிறந்த்திருக்கிறோம். எனவே உணவைப் பார்த்து நாம் பயப்பட வேண்டியதில்லை. முட்டாள்களைப் பார்த்து பயப்படுங்கள்.

பலர் தனக்கும் தெரியாமல், தானே தவரானவற்றைத் தெரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் தவறாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இது அவர்களின் தவறல்ல, நாம் நல்லது என்று நினைத்து தான் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம். ஆனால் நாம் கட்ட்ருகொண்டதே நல்லவை அல்ல என்பதே பலருக்குத் தெரிவதில்லை.

எனவே அவர்களை நாம் மன்னிப்போம். நாம் அனைவரும் புரியாமல் இருக்கிறோம். எந்தாலவுக்கு, எவ்வளவு விசயங்களைப் புரிந்துகொள்கிறோமோ அந்த அளவிற்கு நிம்மதியாக அமைதியாக, மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக வாழ முடியும்.

117 பிடித்ததைப் பிடி பாகம் - 1


நமது நாக்கிற்கு எந்த உணவு பிடிக்கிறதோ, அது நமக்கு நல்லது. அதே சமயம் எந்த உணவு பிடிக்கவில்லையோ அந்த உணவு நமக்குக் கெட்டது. அது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

உதாரணமாக ஒருவர் தனக்கு ஆப்பிள் பிடிக்கிறது என்று கூறுவார். அவருக்கு நீங்கள் 15 ஆப்பிள் பழங்களைக் கொடுத்து சாப்பிடச் சொல்கிறீர்கள். காலை, மாலை, இரவு என்று மூன்று வேளையும் 3 நாட்களுக்கு வேறு எந்த உணவும் கொடுக்காமல் ஆப்பிள் பழத்தையே அவருக்கு பசி ஏற்படும் பொழுதெல்லாம் கொடுத்து கொண்டு இருங்கள்.

இரண்டாவது நாள் அல்லது மூன்றாவது நாள் அவருக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை ஆப்பிள் என்றாகிவிடும்.

இன்று பிடித்த ஆப்பிள் பழம் மூன்று நாட்களுக்கு பிறகு அவருக்கு ஏன் பிடிக்காமல் போய்விட்டது என்பதை யோசித்துப்பாருங்கள்.

அதாவது எப்பொழுது நமது நாக்கு ஒரு உணவு, காய்கறி, பழங்கள் பிடிக்கிறதோ அந்த உணவில் உள்ள தாதுக்கள், உயர்ச்சதுக்கள், பிராணசக்தி போன்றவை நமது உடலில் குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.

முதல நாளில் ஆப்பிள் ஏன் பிடித்தமானதாக இருந்தது என்றால் ஆப்பிளில் உள்ள தாதுக்கள், உயர்ச்சதுக்கள், பிராணசக்தி போன்றவை நமது உடலில் குறைபாடக இருந்திருக்கின்றன. இரத்தில் சில தாதுக்கள் குறைவாக இருந்திருக்கிறது. அந்தப் பொருட்கள் அந்த ஆப்பிள் பழத்தில் இருந்திருக்கிறது. எனவே ஆப்பிள் நமக்கு பிடித்திருக்கிறது.

மீண்டும் மீண்டும் ஒரே பொருளை சாப்பிடும்பொழுது அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப்போல நமது உடலில் அந்த தத்துவம் வேலை செய்துகொண்டே இருக்கிறது. ரத்தத்தில் மற்றும் உடலில் தேவைப்படும் சத்துக்கள் போதுமான அளவுக்கு சேர்ந்துவிட்ட நிலையில் திருப்தி அடைந்து விட்ட நிலையில் நமக்கு அந்த ஆப்பிள் தேவைப்படுவதில்லை. எனவே ஆப்பிள் நமக்குப் பிடிக்காமல் போய்விடுகிறது.

கால்சியம், அயன், சோடியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்றவை நம் உடலுக்குத் தேவைப்படும் தாதுக்கள் என்றாலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் செல்லும்பொழுது நமது உடல் இதை வேண்டாம் என்று முடிவெடுத்து நிராகரித்துவிடுகிறது. உடலை விட்டு வெளியேற்றுகிறது.

எனவே எப்பொழுது ஒரு உணவு படிக்கிறதோ அதை ஆசையாக தாராளமாக சாப்பிடுங்கள். அதற்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் எப்பொழுது ஒரு உணவு பிடிக்கவில்லையோ, அது இலவசமாய் கிடைத்தாலும் தயவுசெய்து அதை தவிர்த்து விடுங்கள், மற்றவர்கள் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தவேண்டாம். ஏனேன்றால் மனதுக்குப்பிடிக்காமல் சாப்பிடும் ஒவ்வொரு கவளம் உணவும் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது.

அது எப்பிடி தீங்கு விளைவிக்கிறது என்றால், மூன்றாவது நாள் ஆப்பிள்யை நாம் பிடிக்காமல் சாப்பிடும் பொழுது அதை ஜீரணிக்க வேண்டிய சக்திகள் அனைத்தும் நமக்கு விரயமாகிறது மேலும் சிறுநீரகம் கணையம், கல்லீரல் போன்ற உறுப்புகள் அந்த சத்துப்பொருட்களை கழிவுகளாக மாற்றி அதை சிறுநீரகம் வழியாகவோ அல்லது மலம் வழியாகவோ வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே நமது உடலில் உறுப்புகளுக்கு தேவையில்லாத வேலைபளு அதிகமாகிறது. எனவே பசித்தால் மட்டுமே உண்ண வேண்டும்.

பொதுவாக இப்பொழுது உள்ள மருத்துவத் துறையினரால் சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாபிடக்கூடாது என்று அறிவுறுதபடுகிரார்கள். உப்பு சாப்பிடாதீர்கள் BP அதிகரிக்கும் என்று எச்சரிகிரார்கள். கசப்பு, துவர்ப்பு, நாமே சாபிடுவதில்லை.; காரம் சாப்பிட்டால் தோல் நோய் வரும் என்று பயமுறுத்துகிறார்கள். புளி சேர்த்துக்கொள்ளவேண்டாம் முழங்கால், மூட்டுகளில் வலி வேதனை ஏற்படும் என்கிறார்கள்.

பூமிக்கு கீழ் விளையும் பொருட்களை உணவாக கொள்ளவேண்டாம் வாயுத்தொல்லை ஏற்ப்படும் என்கிறார்கள். தக்காளியை சேர்த்துக்கொண்டாலோ சிறுநீரகத்தில் கல்வரும் என்று பயமுறுத்துகிறார்கள். உருளைக்கிழங்கு சேர்த்துக்கொண்டால் வாயுத்தொல்லை ஏற்படும் என்று புத்திசாலிகள் அறிவுரை சொல்ல்கிறார்கள் கத்தரிக்காய் வேண்டாம், தோலில் நோய் வருமென்று உளறுகிறார்கள்.

நன்றாக யோசித்துப்பாருங்கள். இப்படி ஒவ்வொரு உணவிற்கும் ஏதாவது காரணம் கூறி சாப்பிட வேண்டாம் என்று தடை போடுகிறார்கள்.

இப்பொழுது உள்ள மருத்துவத் துறையினரால் சாப்பிடக்கூடாது என்று அவர்கள் குறிப்பிடும் உணவுகளை எல்லாம் எடுத்து ஓரமாக வைத்துவிட்டால் உங்கள் உணவுத்தட்டில் சாப்பிட ஒன்றுமே இருக்காது. கடைசியில் மருந்து மாத்திரைகள் மட்டுமே தவறாமல் சாப்பிட சொல்லி அறிவுறுதபடுகிரார்கள். மருந்து மாத்திரைகளையே ஜீரணம் செய்யும் இந்த உடலுக்கு பழங்களை ஜீரணம் செய்யத் தெரியாதா? தக்காளியை ஜீரணம் செய்யத் தெரியாதா? நமது உடலுக்குத் தேவையான அத்தியாவசியமான பொருட்கள் - இனிப்பு, உப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு ஆகிய ஆறு சுவைகளில் மட்டுமே இருக்கிறது.

எனவே தயவு செய்து எந்த ஒரு சுவையையும் எந்த ஒரு உணவுப்பொருட்களையும் ஏதாவது காரணம் கூறி ஒதுக்கிவிடாதீர்கள் அனைத்துமே உடலுக்கு நல்லதுதான்.

எப்பொழுது ஒரு உணவை, இயற்கையாய் படைக்கப்பட்ட உணவை சாப்பிடக்கூடாது என்று கூறுகிறார்களோ அவர்கள், அவை எல்லாவற்றையும் படைத்தது அவற்றிற்கான உணவையும் படைத்த இறைவனை முட்டாள் என்று கூறுகிறார்கள் என்று அர்த்தம்.

சப்போட்டா பழம் மனிதனுக்கு உடல் நலத்தில் தீங்கு விளைவிக்கும் என்று யாராவதுகூறினால் எனக்கு சிரிப்பு மட்டுமே வரும். பழங்கள் சாப்பிடாதீர்கள், குழந்தைகளுக்கு சளிபிடிக்கும் என்று யாராவதுகூறினால் நான் விழுந்து விழுந்து சிரிப்பேன். இவர்கள் அனைவரும் துரோகிகள். கடவுளுக்கு எதிராக பிரசாரம் செய்கிறார்கள்.

இறைவன் படைத்தது உணவாக அளித்த ஒன்றை சாப்பிடக்கூடாது என்று கூறுவது எவ்வளவு முட்டாள் தனமான பேச்சு. எனவே தயவு செய்து இனிமேல் எந்த உணவையும் மறுக்காதீர்கள். நிம்மதியாக சாப்பிடுங்கள். யாரோ நம்மை ஏமாற்றி வருகிறார்கள். அதைப் புரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக நான் எப்படி உணவை சாப்பிடுவேன் என்பதை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். இந்த முறையை நீங்களும் பின்பற்றினால் உணவை மருந்தாக மாற்றுவது மிகவும் சுலபம்.

நான் என் உணவை வீட்டிலோ அல்லது ஓட்டலிலோ எடுத்துக்கொள்வது வழக்கம் தயரிக்கபட்டிருக்கும் உணவு வகைகள் எல்லவற்றையும் நாம் சாப்பிடும் இலையிலோ அல்லது தட்டிலோ சிறிதளவு அனைத்து வகைகளிலும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஒருவேளை வீட்டில் தயாரிக்கப்படும் உணவில் இட்லி, சப்பாத்தி, பொங்கல், பூரி, என நான்கு வகைகள் இருந்தால் நாம் எப்படி சாப்பிடுகிறோம்.

முதலில் நான்கு இட்லிகளை சாப்பிட்டுவிடுகிறோம். பிடிக்கிறதா? பிடிக்கவில்லையா? என்பதைப் பற்றி கவனிப்பது கிடையாது. பிறகு?

வேறு வழி இல்லாமல் சப்பாத்தி, பூரி, பொங்கல் என அவற்றையும் அடுக்கிக்கொள்கிறோம். இப்படி சாப்பிடக்கூடாது.

முதலில் ஒரு இட்லி, ஒரு சப்பாத்தி, கொஞ்சம் பொங்கல், ஒரு பூரி என தட்டில் எத்டுத்து வைத்துக் கொள்ளவேண்டும். இப்பொழுது நமது வீட்டில் சமைக்கப்பட்டிருக்கும் உணவில் அனைத்திலும் கொஞ்சம் நம் தட்டில் இருக்கிறது. பிறகு நான்கு வகைகள் கொண்ட உணவிற்கு தேவையான சட்னி, சாம்பார் போன்றவற்றை எடுத்துக்கொள்ளவும். முதலில் இட்லியை எடுத்து வாயில் இட்டு மென்று சுவைத்து விழுங்கவேண்டும். அடுத்து இப்படியே ஒவ்வொரு வகையிலும் உள்ள உணவை சசிறிதளவு எடுத்து மென்று சுவைத்துப் பார்க்கவேண்டும்.

உதாரணத்திற்கு உங்களுக்கு முதலில் சப்பாத்தி சாப்பிடதோன்றுகிறது. சப்பாத்தி சாப்பிடுகிறீர்கள் சிறிது சாப்பிட்டவுடன் பிடிக்கவில்லை என்றால் சப்பாத்தி சாப்பிடவேண்டாம். பிறகு இட்லி சாப்பிடுகிறீர்கள். இட்லி பிடிக்கிறது. இட்லியில் உள்ள தாது பொருட்கள் உடலுக்கு தேவையாக இருக்கிறது. அதை சாப்பிடலாம். சப்பாத்தியில் உள்ள தாது பொருள் உடலுக்கு தேவையில்லை. எனவே அதை ஒதுக்கிவிடலாம். அதே போல் மீதமுள்ள உணவு வகைகளையும் இப்படியே சுவைத்து பார்த்து பிடிக்கிறது எனில் சாப்பிடலாம். பிடிக்காததை ஒதுக்கிவிடலாம். இதனால் எந்த ஒரு தவறும் இல்லை. பிடிக்காத உணவயும் தட்டில் வைத்து விட்டார்களே என்ற காரணதிற்க்காகவே நிறையப்பேர் பிடிக்காத உணவை சாப்பிட்டு விடுவதை வழக்கமாகவே செய்து வருகின்றனர்.

பஃபே சிஸ்டம் என்று புதிதாய் ஆரம்பிக்கப்பட்டுள்ள ( சுயசேவை முறை என்றும் சொல்லலாம் ) முறையில் எல்லாவகை உணவுகளையும் கொண்டுவந்து டேபிளில் வைத்துவிடுவார்கள். அவரவர்க்கு எது விருப்பமோ அதே உணவை விரும்பிய அளவு சாப்பிடலாம் என்ற முறையில் தற்பொழுது பரவலாக இம்முறை வழக்கத்தில் உள்ளது. நிறைய உணவகத்திலும் இம்முறை கையாளப்படுகிறது. பெரும்பாலும் விழாக்களில் இதை காண முடிகிறது. இது ஒரு நல்ல வரவேற்க்கதக்க உணவு முறை. ஏனெனில் நமக்கு எது பிடிக்கிறதோ அந்த உணவை விரும்பி உண்பதற்கான சிறந்த முறை இது.

எனக்கு இந்த முறையில் உணவு வளங்கப்படுவதாயின் மிகவும் சந்தோசமாக சாப்பிடுவேன்.

உதாரணமாக நான் பல ஊர்களுக்கும், பல நாடுகளுக்கும் நிகழ்சிகள் நடத்துவதற்காக சென்று வரும் பொழுது, அங்கிருக்கும் ஓட்டல்களில் உணவு உண்ணும் பொழுது இந்த மாதிரி பஃப சிஸ்டத்தில் உணவு உண்ண வாய்ப்பு கிடைக்கிறது. அப்பொழுதுதான் நான் என்ன செய்வேன் என்றால் இரண்டு மூன்று தட்டுகளில் அங்கு தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் எல்லாவற்றிலும் இருந்து கொஞ்சம் எடுத்து தட்டுகளில் போட்டுக்கொள்வேன். அதே போல எல்லா வகை பழங்கள், நெய், தேன், ரொட்டி, பொரியல் வகைகள் என அனைத்து வகைகளில் இருந்தும் கொஞ்சம் எடுத்துக்கொள்வேன்.

நீங்கள் இம்மாரியான உணவு வகைகள் சாப்பிடும் பொழுது எல்லாவற்றிலும் சிறிது சிறிது எடுத்து கொண்டு வந்து சாப்பிட அமருங்கள். சில உணவுப் பொருட்கள் ஒருவாய் சாப்பிடும்பொழுதே பிடிக்காது என்று தெரிந்து விடும். சில உணவு பொருட்கள் பார்க்கும் பொழுது நன்றாக இருக்கும். ஆனால் சாப்பிட நன்றாக இருக்காது. சில பொருட்கள் பார்க்கும் பொழுது பிடிக்காது ஆனால் சாப்பிடும் போது நமக்கு பிடிக்கும். இந்த உண்மையை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.

எனவே உணவை பார்த்தவுடன் பிடித்தது, பிடிக்காதது என்று ஒதுக்காமல் எல்லவற்றையும் சிறிதளவு எடுத்துக்கொண்டு வரவேண்டும். பிறகு வாயில் வைத்து சுவைக்க வேண்டும். எது பிடிக்கவில்லையோ அதை ஒதுக்கிவிட்டு பிடித்த உணவை சாப்பிடவேண்டும். அதே சமயம் பிடித்த உணவையே பிடித்தது என்பதற்காக அதன் சுவை திகட்டி விட்ட பின்பும் தொடர்ந்து சாப்பிடக்கூடாது. உதாரணத்திற்கு கிச்சடி நமக்கு பிடித்த உணவு என்பதற்கு அதில் ஒரு மூன்று நான்கு கரண்டிகள் எடுத்து வந்து சாப்பிட ஆரம்பிக்கிறோம். கொஞ்சம் சாப்பிட்டவுடன் அதன் சுவை நமக்கு திருப்தி ஏற்பட்டு இனி போதும் வேறு ஏதாவது வகை உணவு சாப்பிடலாம் என்று தோன்றினால் மேற்கொண்டு மீதம் இருக்கும் கிச்சடியை சாப்பிடாமல் வைத்துவிடலாம்.

வேறு உணவை சுவைத்துப் பார்த்து அது பிடித்திருந்தால் அதை சாப்பிடலாம். இதில் நாம் கவனிக்க வேண்டிய, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம் என்னவெனில் நமது நாக்குக்கு எந்த சுவை பிடிக்கிறதோ அதை சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும். எது பிடிக்கவில்லையோ அந்த உணவை சாப்பிடுவது உடலுக்கு கெடுதல் விளைவிக்கும். நமக்கு பிடித்த உணவை சாப்பிடுவது மருந்தாக செயல் படும். எனவே பிடிக்காத உணவை சாப்பிடவேண்டாம்.

116 தூக்கம் வரவில்லை

இரவில் நன்றாக தூக்கம் வரவில்லை. என்ற கவலை உள்ளவர்கள். இரவு சாப்பிட்ட பின் குறைந்தது ½ மணிநேரம் கழித்து பற்களை துலக்கிவிட்டு படுத்தால் நன்றாக தூக்கம் வரும்.

ஆனால் இரவு பல் துலக்கிய பிறகு பால், உணவு பண்டங்கள் என எதையும் சாப்பிட கூடாது. தண்ணீர் மட்டும் குடித்துக் கொள்ளலாம். ஒருவேளை ஏதாவது உணவு மீண்டும் சாப்பிட்டால், மீண்டும் பல் துலக்க வேண்டும்.

எனவே தூக்கத்தை பொறுத்தவரை எப்பொழுது தூக்கம் வருகிறதோ அப்பொழுது படுக்கவேண்டும். படுத்தவுடன் தூக்கம் வரவேண்டும் என்று நினைக்க வேண்டாம். உடலே தானாக தூங்கும் உடலே தானாக எழுந்தரிக்கும். இப்படி இயல்பாக நம் உடல் எவ்வளவு மணிநேரம் தூங்க வேண்டும் என்று ஆசைப்ப்டுகிறதோ அவ்வளவு மணிநேரம் நாம் தூக்கத்தைக் கொடுத்தல் உடலில் ஆகாயம் சம்பந்தப்பட்ட அனைத்து சக்திகளும் சரியாக பெற்று அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிறது. வாழ்வோம். ஆரோக்கியமாக. 


மேலும் விபரங்களுக்கு......
அனாடமிக் தெரபி பவுண்டேஷன்

115 நீர் பிராணன் பகுதி - 2

உடலுக்கு மட்டும் குளித்தால் நல்லதா ? தலையோடு சேர்த்து குளித்தால் நல்லதா ? 
குளித்தால் தலையோடு சேர்த்துதான் குளிக்கவேண்டும். முழு உடலிலும் நீர் படவேண்டும். இல்லையென்றால் குளிக்கவேக்கூடாது. உடலுக்கு மட்டும் குளிப்பதால், ஆரோக்கியத்திற்கு உடலுக்கு கேடு வரும். அது எப்படி ? நாம் உடலுக்கு மட்டும் குளிக்கும்போது உடலின் வெப்பநிலை மாறுகிறது. அதை சமாளிப்பதற்கு தலையிலுள்ள அனைத்து செல்களும் வேலை செய்ய ஆரம்பித்துவிடும். ஏனென்றால் கழுத்துக்குமேலே தொண்டை,தாடை,மூளைப்பகுதி ஆகிய அனைத்தும் உடலிலுள்ள அனைத்து செல்களின் வெப்பநிலையை சமன் செய்ய அதிக வேலை செய்யவேண்டும். எனவே தலைப்பகுதி கடுமையான வெப்பத்திற்கு மாறுகிறது. எனவேதான் முடிகொட்டுதல், டென்சன், கோபம், மனோரீதியான நோய்கள், தூக்கமின்மை, மைக்ரேன், தலைவலி, சைனஸ் போன்ற பல பிரச்சனைகள் மனிதனுக்கு வருகிறது. பொடுகு போன்ற பிரச்னையும் வருகிறது. எனவே குளித்தால் தலையோடு குளிக்கவேண்டும். இல்லையென்றால் குளிக்கக்கூடாது.
இது ஆண்களுக்கு ஒத்துவரும். பெண்களுக்கு கூந்தல் நீளமாக இருப்பதால் தினமும் தலையோடு சேர்த்து எப்படி குளிக்கமுடியும் ? என்று ஒரு கேள்வி வரலாம். பெண்கள் உடலுக்கு மட்டும் குளித்துக் கொள்ளலாம். ஆனால் அதில் சில முறைகளை கையாளவேண்டும். ஈரத்துணியை தலையில் கட்டிக்கொண்டு குளியல் அறைக்குச் செல்ல வேண்டும். பின் உடலில் நீரை ஊற்றிக் குளிக்க வேண்டும். தலையில் ஈரத்துணி இருப்பதால் தலைப்பகுதி வெப்பமடைய வாய்ப்பு இல்லை. குளித்து முடித்து வெளியே வந்து துடைத்து துணியை மாற்றும்வரை தலையில் தலையில் ஈரத்துணி இருந்துகொண்டே இருக்கவேண்டும். பிறகு அதை சுழற்றினால் மேலே சொல்லப்பட்ட எந்த ஒரு வியாதியும் அவர்களுக்கு வராது. இது ஆரோக்கியமான குளியல். எனவே பெண்கள் உடலுக்கு மட்டும் குளிக்கும்போது ஈரத்துணியைத் தலையில் கட்டிக்கொள்ளுங்கள்.


விலாவிய வெந்நீரில் குளிக்கும்போது முதலில் கால்களில் ஊற்றவேண்டும். பின்பு மூட்டு,பிறகு இடுப்பு, தோள், கடைசியில் தலையில் ஊற்றவேண்டும். அதேபோல் சாதாரண குளிர்ந்த நீரில் குளிக்கும்போது முதலில் தலையில் ஊற்றவேண்டும். பிறகு உடலில் ஊற்றவேண்டும். இதை மாற்றி செய்தால் உடல் ஆரோக்கியம் கெடுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவேதான் ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் குளிக்கச்செல்லும்போது நாம் அதை கடவுளாக நினைத்து முதலில் கால் வைக்கக்கூடாது, கையில் எடுத்து தலையில் தெளித்துக்கொள்ளவேண்டும் என்ற பழக்கத்தை நம் முன்னோர்கள் கற்றுக் கொடுக்கிறார்கள். முதலில் தண்ணீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டு பிறகு கையில் எடுத்து வாயில் குடிக்கவேண்டும். இந்த இரண்டு காரியத்தையும் செய்துவிட்டு குளித்தால் அந்த தண்ணீர் நமக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும். 


இன்ஸ்டன்ட் வாட்டர் ஹீட்டர் என்ற கருவிமூலம் தண்ணீரை கொதிக்கவைத்து பிராணன் இல்லாத தண்ணீரை நேரடியாக ஷவர் மூலம் குளிக்கிறோம். இதில் முதல் தவறு தண்ணீரை சூடு செய்து பிரனனையை எடுப்பது, இரண்டாவது தவறு சுடுதண்ணீரை தரையில் ஊற்றுவது. இதனால்தான் இப்போதுள்ள மக்கள் கோபம், டென்சன், பயத்தோடு சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் ஏன் மனசாட்சி இல்லாத நாய்போல் கத்துகிறார்கள் என்றல் அதற்க்கு காரணம் குளிக்கும் முறைதான். எனவே இனிமேல் பச்சைத்தண்ணீரில் குளிக்கும்போது தலையிலிருந்தும், வெந்நீரில் குளிக்கும்போது காலிலிருந்தும் ஆரம்பிக்கும்போது நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு வழி பிறக்கும்.
எவ்வகை தண்ணீரில் பிராணன் மிகுதியாக உள்ளது ? 


இயற்கையான தண்ணீரில் பிராணன் மிகுதியாக உள்ளது. தண்ணீரை கொதிக்க வைக்கும்போது அதில் உள்ள பிராணன் வெளியேறுகிறது. பிராணன் அதில் இருக்காது.
வடிகட்டிய தண்ணீரில் (பில்டர் வாட்டர்) பிராணன் இருக்குமா ?
ஆம். தண்ணீரை வடிகட்டும்போது (பில்டர் செய்யும்போது) பிராணன் வெளியேறுவதில்லை. எனவே பில்டர் செய்த தண்ணீரில் பிராணன் இருக்கும்.
கடைகளில் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் (பாட்டில் வாட்டரில்) பிராணன் உள்ளதா ? 


கண்டிப்பாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் (பாட்டில் வாட்டரில்) பிராணன் உள்ளது. ஆனால் இயற்கையாக உள்ள தண்ணீரில் உள்ள சத்துப்பொருள்கள் அதில் கிடையாது என்பது வேறு ஒரு உண்மை.


போர்வெல் தண்ணீரில் பிராணன் உள்ளதா ?
எல்லா போர்வெல் தண்ணீரிலும் பிராணன் இருப்பதற்கு வாய்ப்பில்லை. சில போர்வெல் தண்ணீரில் பிராணன் இருக்கும் அல்லது இருக்காது. ஏனென்றால் பூமிக்கடியில் சில இடங்களில் விஷ வாயுக்களும், பிராணன் இல்லாத நிலையில் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே போர்வெல் தண்ணீரை உடனடியாக குடிக்கக்கூடாது. சில நேரங்களில் அவை உயிருக்கு ஆபத்தைக்கூட ஏற்படுத்தும். எனவேதான் நமது முன்னோர்கள் போர்வெல் தண்ணீரை எடுத்தவுடன் முதன்முதலில் அதில் மீன்களை போட்டு சோதிப்பார்கள். 24 மணிநேரம் மீன்கள் உயிரோடு இருந்தால் அந்தத் தண்ணீரில் பிராணன் உள்ளது என்று அந்தத் தண்ணீரை நாம் பயன்படுத்தலாம். போர்வெல் தண்ணீரில் விட்ட மீன் இறந்துவிட்டால் அந்தத் தண்ணீரை பயன்படுத்தக்கூடாது என்று அறிந்துகொள்ளலாம்.
ஆற்றுநீரில் பிராணன் எவ்வளவு இருக்கும் ?


ஆற்றுநீரில்தான் அளவுக்கு அதிகமான பிராணன் இருக்கும். ஏனென்றால் ஆற்றுநீர் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆற்றுநீர் வேகமாக ஓடிக்கொண்டிருப்பதால் பூமியிலும், பூமிக்கடியிலும் உள்ள பிராணனை எடுக்கிறது. காற்றில் உள்ள பிராணனையும் எடுக்கிறது. எனவே ஆற்று தண்ணீர்தான் குளியலுக்கு மிகச்சிறந்த தண்ணீர்.
சனி நீரோடு என்று தமிழில் இருக்கிறது. சனி என்றால் சனிக்கிழமை என்று அர்த்தம் இல்லை. சனி என்றால் ஓடுகின்ற, குளிர்ந்த என்ற பொருளும் உண்டு என்று நம் முன்னோர்கள் சொல்லி
இருக்கிறார்கள். எனவே ஆற்றுநீரில் குளிப்பது உடலுக்கு மிக மிக நல்லது. நாம் ஒருமாதமாக தினமும் ஒருமணிநேரம் யோகா செய்து கிடைக்கும் பிராணனை ஆற்றுத்தண்ணீரீல் ஒரு முறை குளித்தாலே எடுத்துவிடலாம். 


கடல் தண்ணீரில் பிராணன் உள்ளதா?
கடல் தண்ணீரில் பிராணன் உள்ளது. அளவுக்கு அதிகமாக உள்ளது. ஆனால் அளவுக்கதிகமான உப்பும் இருப்பதால் அது நமது உடலில் சேர்வதற்கு காலதாமதம் ஆகிறது, எனவே கடல் நீரைவிட ஆற்றுநீர் மிகமிக சிறந்தது. ஆனால் கடல்நீரில் குளிக்கும்போது இன்னொரு நன்மை கிடைக்கிறது. எப்போது உப்புத்தண்ணீரில் குளிக்கிறோமோ உப்பின் மூலமாக மின்சக்தி உடலுக்கு கிடைக்கிறது. நமது உடலில் உள்ள எதிர்மறை சக்தி, நேர்மறை சக்தியாக மாற்றப்படுகிறது. எனவேதான் நமது முன்னோர்கள் கிராமங்களில் சாவுக்கு சென்றுவந்தால் முதலில் கல் உப்பை தண்ணீரில் போட்டு குளித்துவிட்டுத்தான் வீட்டிற்குள் நுழைவார்கள். இதை நாம் மறந்துவிட்டோம். கெட்ட எண்ணங்களுடன், தவறான ENNANKALUTAN இருப்பவர்கள், தங்களுக்குத் தாங்களே தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள், உப்பை THANNEERIL சேர்த்து குளித்துவிட்டு பின் சாதாரண தண்ணீரில் குளித்தால்.எண்ணங்கள் நேர்மறை ENNANKALAAKA மட்டுமே இருக்கும். கடல் நீரில் குளிப்பதால் நமது எண்ணங்கள் நேர்மறையாக மாறுகிறது. 


கிணற்று தண்ணீர் நல்லதா? கெட்டதா?
கிணற்று தண்ணீர் ரொம்பவும் நல்லது. கிணற்று தண்ணீரை இரவு 12 மணிக்குத் தொட்டால் குளிர்ச்சியாக இருக்கும். ஒரு மனிதனின் ஆரோக்கியமான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். கிணற்று நீர் மட்டும்தான் ஒருமனிதனுக்கு எந்த வெப்பநிலையில் குளித்தால் சரியாக இருக்கும் என்று கொடுக்கககூடிய திறன் உடையது. எனவே நாமும் இதே முறையை பின்பற்றுவோம். இரவில் சூடாக குளித்தால் நல்லது. பகலில் குளிர்ச்சியாக குளித்தால் நல்லது. எனவே கிணற்றுத் தண்ணீரை விட சற்று பிராணன் குறைவாக உள்ளது. ஏனென்றால், கிணற்று தண்ணீர் ஓடுவதில்லை. ஆனால் கெடுதல் கிடையாது. ஆற்றுத்தண்ணீரை ஒப்பிடும்போது கிணற்றுநீர் சற்று குறைவானது. ஆனால் கிணற்றுநீரில் குளிப்பது மிகவும் நல்லது. 


தண்ணீரை எப்படி சேமித்துவைப்பது?
நாம் கீழ்நிலைத்தொட்டி, மேல்நிலைத்தொட்டி என்று தண்ணீரை நான் சேமித்து வைக்கிறோம். இந்த தொட்டியில் உள்ள தண்ணீரில் பிராணன் கிடையாது. ஏனென்றால் அனைத்துத் தொட்டிகளையும் நன்றாக மூடி விடுகிறோம். இப்படி கான்கிரிட்டால் செய்யப்பட்ட தொட்டிகளில் தண்ணீரை மூடி வைப்பதால் அதில் பிராணன் குறைகிறது. தண்ணீருக்கும் காற்றுக்கும் உள்ள இணைப்பை நான் துண்டிக்கிறோம். அல்லது தடுக்கிறோம். எனவே பிராணன் குறைகிறது. எனவே கீழ்நிலைத்தொட்டி, மேல்நிலைத்தொட்டியை நான்கொஞ்சமாவது திறந்துவைத்து, இந்த பிரபஞ்காற்றுடன் எப்போதுமே ஒரு தொடர்பு இருந்துகொண்டே இருக்கும்மாறு செய்யவேண்டும். நாம் குப்பை விழுகிறது, பறவைகள் எச்சம் இடுகிறது என்று மூடிவைக்கிறோம். குப்பை விழுந்தாலும் பரவாயில்லை, எச்சம் விழுந்தாலும் பரவாயில்லை, பிராணன் கிடைப்பது மிகவும் நல்லது. எனவே கீழ்நிலைத்தொட்டி மற்றும் மேல்நிலைத்தொட்டிகளை கொஞ்சமாவது திறந்துவைப்போம். குப்பை விழாமல் இருப்பதற்கும், பறவைகள் எச்சம் விழாமல் இருப்பதற்கும் ஒரு சிம்னி(சல்லடை )போன்ற அமைப்பை உருவாக்கி, குப்பை செல்லாமலும், எச்சம் விழாமலும் காற்று மட்டும் உள்ளே செல்லுமாறு ஏற்பாடு செய்திருக்க வேண்டும், அந்த தண்ணீரில் குளிக்கும் போது, சமைக்கும்போது நமக்கு பிராணன் கிடைக்கிறது. Syntex, Plastic போன்ற தொட்டிகளில் தண்ணீர் வைப்பதைவிட சிமெண்ட் அல்லது கான்கிரீட் தொட்டிகளில் தண்ணீர் வைப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. 


நீர் பிராணனை நாம் எப்படி பயன்படுத்துவது?
எனவே இனிமேல் நாம் பயன்படுத்தும் பயன்படுத்தும் ஒவ்வொரு நீரிலும் பிராணன் உள்ளதா என்று உறுதி செய்துகொள்ளவேண்டும். இனிமேல் நாம் குடிக்கும் ஒவ்வொரு தண்ணீரிலும் பிராணன் இருக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். குளிக்கும்போது அதில் பிராணன் உள்ளதா என்பதை உறுதி செய்யவேண்டும். நாம் கண்களை கழுவும்போது கண்களில் உள்ள அழுக்கு வெளியே செல்வதற்காக கழுவுவது கிடையாது.கண், கல்லீரல், பித்தப்பை சம்பந்தப்பட்ட எந்தநோயாக இருந்தாலும் பச்சைத்தண்ணீரில் 5 முறை கண்களைக் கழுவினால் தண்ணீரில் உள்ள பிராணன் கண்வழியாக சென்று கண்ணில் உள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிறது. அதேபோல் வைகொப்பளிக்கும்போது வாயிலுள்ள அழுக்கு வெளியே வருவது ஒருபக்கம் இருந்தாலும் தண்ணீரில் உள்ள பிராணன் உடலுக்கு சென்று நம்மை ஆரோக்கியப்படுத்தும். மேலும் கை, கால், முகம் கழுவுவதால் நன் உடலில் உள்ள அழுக்குகள் வெளியேறுகிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது ஒருபுறம் இருந்தாலும் கை, கால் தான் பிராணனை நமது உடல் உறிஞ்சிக்கொண்டு நம்மை உற்சாகப்படுத்துகிறது. எனவே சமைக்கும் போதும் பிராணன் உள்ள தண்ணீரில் தான் சமைக்க வேண்டும். பிராணன் என்றால் என்ன? பஞ்சபூதம் என்றால் என்ன ? என்று எந்த அளவுக்கு புரிந்து கொள்கிறோமோ இந்த உலகிலுள்ள அனைத்து விஷயங்களையும் புரிந்துகொண்டு அன்பான அமைதியாக ஆரோக்கியமாக வாழ்வதற்கு நாம் தகுதியானவர்களாக ஆகிறோம். நான் சிலசமயங்களில் அதிக நேரம் நிகழ்ச்சிகளில் பேசிவிட்டு திரும்பும்போது பிராணன் பற்றாக்குறையாக இருக்கும் அப்பொழுது குளியலறைக்குச் சென்று. தண்ணீர் குழாயை திறந்துவிட்டுஉள்ளங்கையும் உள்ளங்காலையும் நனைத்துவிட்டு, உள்ளங்கையில் தண்ணீரைவிட்டு அந்தத் தண்ணீரில் உள்ள பிராணசக்தி என் உடலுக்கு வருகிறது என்று நினைப்பதன் மூலமாக அந்த நீரில் உள்ள பிராணன் உடலுக்கு வருகிறது. 


மழை நீர் பிராணன்
அர்த்தம், ஒருவேளை சளிபிடித்து, காய்ச்சல் வந்தால், அவன் ஆரோக்கியமாக இல்லை, எனவே அவை ஆரோக்கியத்தை ஏற்ப்படுத்துகிறது என்று சுத்தமான மழை தண்ணீரில் அளவுக்கு அதிகமாக பிராணன் இருக்கிறது. மழைநீரில் நனையும்போது பலருக்கும் சளி பிடிக்கிறது. தும்மல் வருகிறது,காய்ச்சல் வருகிறது. இது ஏன் வருகிறது அதாவது மழைநீரில் அளவுக்கு அதிகமான பிராணன் இருப்பதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் அந்த பிராணனை உறிய ஆரம்பிக்கிறது. உடலில் பல நாட்களாக, பல வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கழிவுகளைத் தும்மல் வழியாகவும், சளியாகவும் , மூக்கு ஒழுகுதல் வழியாகவும் வெளியேற்றுகிறது. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்கிறானா, இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால், மலையில் நனைந்தால் அவனுக்கு சலிபிடிக்காமல், காய்ச்சல் வராமல் இருந்தால் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று பொருள். எனவே, மழையில் நனைந்து காய்ச்சல் வந்தால் அதைப்பாரத்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை. தைரியமாக இருங்கள். நமது உடல் நன்மை செய்கிறது. அது ஒரு மருத்துவம். எனவே யாருக்கு எந்த நோய் இருந்தாலும் மழையில் நனைவதன் மூலம் உடலை குணப்படுத்த மூடியும். மழைநீரை குடிப்பதின் மூலமாகவும் நமது உடலில் பிராண சக்தியை அதிகப்படுத்த மூடியும். மழை வரும்போது முதலில் ஒரு ஐந்து நிமிடம் அந்த நீரை குடிக்கக்கூடாது. ஏனென்றால் காற்றில் தூசுகளும், குப்பைகளும், வாகனங்களிலிருந்து வரும் கழிவுப்பொருள்களும் வானத்தில் இருக்கும். முதல் 5 நிமிடத்தில் மழைநீர் அந்த தூசுகள், குப்பைகளை எடித்துக்கொண்டு பூமியை நோக்கி வரும் எனவே முதல் 5 நிமிடத்தில் வரும் மழைநீரை நாம் குடிக்கக்கூடாது, 5 நிமிடத்திற்கு பின் வரும் மழைநீரை நேரடியாக பாத்திரத்தில் மூலமாகவோ, ஒரு கலனை பயன்படுத்தி அந்த நீரை பிடிக்கவேண்டும். ஒருவேளை நமது வீட்டின் கூரை சுத்தமாக இருந்தால் கூரையிலிருந்து வரும் மழைநீரையும் பிடிக்கலாம். இந்த நீர் உலகிலேயே மிகவும் சுத்தமான தூய்மையான நீர். இதில் பிராணன் அதிகமாக இருக்கும். இந்த தண்ணீரை ஒரு பாத்திரத்திலோ, ஒரு பாட்டிலிலோ காற்று புகாமல் அடைத்து சூரிய வெளிச்சம் படாமல் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டால் அந்தத் தண்ணீர் ஆறு வருடங்களுக்கு கெட்டுபோகாமல் இருக்கும். ஆனால் அந்த தண்ணீரில் சூரிய வெளிச்சம் பட்டுவிட்டால், 24 மணிநேரத்தில் அதில் புழு, புச்சிகள் வந்து அந்த நீர் கெட்டுவிடும். எனவே மழைநீரை சூரிய வெளிச்சம் படாமல் பாதுகாத்து அதை நாம் குடிக்கும்போது. நமது உடலுக்கு தேவையான அனைத்து பிராணனும் கிடைத்து, நமது உடலிலுள்ள அனைத்து நோய்களும் குணமாகி, நமது உடல் ஆரோக்கியம் அடைகிறது. எனவே, மழைநீர் பிராணனை நாம் பயன்படுத்துவோம். குழந்தைகள் மலையில் நனைவதை நாம் குற்றம் என்று கூறி விரட்டி அடிக்கவேண்டாம். மழையில் நனைவது மிகவும் அற்புதமான, அருமையான, சந்தோஷமான மனதிற்கு பிடித்தமான, பெரு நிகழ்ச்சி. மேலும் ஆரோக்கியமானதும்கூட. எனவே இனிமேல் மழைவரும்போது நம்மை ஒரு சினிமா நடிகைபோல் நினைத்துக்கொண்டு, அதில் ஆட்டம் போடலாம். நல்லது. மழைநீரை குடிக்கலாம் நல்லது. மலைநீர்பிராணன் ஒரு அற்புதமான மருந்து. 


எனவே இனி நம் வாழ்வில் நீர் பிராணனை சேர்த்துக் கொள்வோம். நீர் என்பது சாதாரணம் கிடையாது. உயிர்சக்தி, நீர் பிராணன், நீரில் உள்ள பிராணனை நாம் சரியான முறையில் பயன்படுத்தி ஆரோக்கியமாக, அமைதியாக நிம்மதியாக வாழ்வோம்.
வாழ்வோம் ஆரோக்கியமாக.

மேலும் விவரங்களுக்கு: +91 8883805456
www.amaidhiyumaarokiyamum.com

114 நீர் பிராணன் - பகுதி - 1

பிராணன் என்றல் என்ன ?
பிராணன் என்பது ஒரு சக்தி. ஆற்றல், இந்த சக்தியின் மூலமாக இந்த பிரபஞ்சம் இயங்கி வருகிறது. இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும், அனைத்து விதமான பொருட்களுக்கும் இயக்க சக்தி இந்த பிராணன் ஆகும். பிராணன் என்பதை வீட்டிலுள்ள நாம் அன்றடா பயன்படுத்தும் மின்சாரத்தை போன்றது. நமது வீட்டில் மின்சாரம் உள்ளது. அது மின் கம்பியின் மூலமாக வீட்டில் அனைத்து இடங்களுக்கும் செல்கிறது. இந்த மின்சாரம் மின்விசிறியில் நுழையும்போது அது சுற்றுகிறது. அதே மின்சாரம் ஒரு ரேடியோ பெட்டிக்குள் செல்லும்போது அது பாடுகிறது. அதுவே மாவு அரைக்கும் இயந்திரத்திற்குள் செல்லும்போது சுற்றுகிறது. இஸ்திரிப்பெட்டிக்குள் செல்லும்போது சூடாகிறது. 

ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு உயிரும், பிராணனை தனது இயக்க சக்திக்காக, தான் செய்யவேண்டிய செயலுக்காக எரிபொருளாக பயன்பபடுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு உயிரும் பிராண சக்தியை உற்பத்தி விதமும் அதற்கு தேவையான மூலப்பொருளும் வேறுவேறு. உதாரணமாக மனிதன் ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு அதன்மூலமாக பிராணனை உற்பத்தி செய்ய பயன்பட்ட ஆக்ஸிஜன் கார்பன்-டை-ஆக்ஸைடாக அதாவது கரியமில வாயுவாக மாறுகிறது. இந்த கார்பன்-டை-ஆக்ஸைடு தாவரத்திற்குள் செல்லும்போது பிராணசக்தியாக மாறுகிறது. 


ஒரு பொருளின், ஒரு உயிரின் கழிவு இன்னொரு பொருளுக்கு, உயிருக்கு மூலப்பொருளாக, சாப்பிடும் உணவாக இருக்கிறது. இதுதான் உலக நியதி. இதை புரிந்துகொண்டால் பல விஷியங்களைப் புரிந்துகொள்ளலாம்.


உதாரணமாக நாம் மலம் கழிக்கிறோம். அந்த மலத்தை ஒரு நாய் சாப்பிடுகிறது. நமது கழிவுப்பொருள் ஒரு நாய்க்கு உணவாக இருக்கிறது. நாம் அசிங்கமாக அருவெறுப்பாக நினைக்கும் நமது மலம் அந்த நாய்க்கு அமிர்தமாக இருக்கிறது. இதேபோல் ஒரு மரத்தில் ஒரு மாங்காய் இருக்கிறது. அது நாள்பட நாள்பட கனிந்து மரத்திலிருந்து கீழே விழுகிறது. அந்த மரம் எப்பொழுது அந்த மாம்பழம் அழுகிப்போகிறதோ அது வேண்டாம் என்று கீழே வீசுகிறது. நாம் கீழே கிடக்கும் மாம்பழத்தை ஆசையாக எடுத்து முக்கனிகளில் ஒன்றாக கருதி அதை ஆசையாக வாயில் வைத்து சுவைத்து சாப்பிடுகிறோம். ஒருவேளை அந்த மரம் நினைக்கலாம், நம் மலத்தை இந்த மனிதன் ஓடிவந்து சாப்பிடுகிறானோ என்று, எப்படி இவனால் சாப்பிட முடிகிறது என்று அந்த மரம் யோசிக்க வாய்ப்பு உள்ளது. மரத்தின் மலம் மனிதனின் உணவு, மனிதனின் மலம் நாய்க்கு உணவு. இதுதான் உலக நியதி. இது ஒரு சுழற்சி(வட்டம்). இந்த சுழற்சியின் மூலமாகத்தான் இந்த உலகம் இயங்கி வருகிறது. அதனால் பிராணன் என்பது ஒருவிதமான சக்தி. இந்த பிராணன் மூலம்தான் அனைத்தும் இயங்குகிறது. 


ஒவொரு மனிதனுடைய உடலிலும் பிராணனமயகோசம் என்று கண்ணுக்கு புலலப்படாத சக்தி (அ) ஆற்றல் உள்ளது. நமது உடலிலுள்ள அனைத்து செல்களும் உறுப்புகளும் பிராண சக்தியின் மூலமாகத்தான் இயங்கி கொண்டிருக்கிறது. எப்பொழுதெல்லாம் நமக்கு அதிக சக்தி கிடைக்கிறதோ அதை நமது உடல் பிராணனாக மாற்றி சேமித்து வைத்து கொள்ளும். நாம் மின்சாரத்தை சேமித்து வைத்துக்கொள்ள சப்ஸ்டேசன் என்று மின்சாரத்தை சேமித்து வைக்கும் ஒரு அமைப்பை பயன்படுத்துவதுப்போல நமது உடல் பிராண சக்தியை சேமித்து வைத்துக்கொள்கிறது. ஒருசில மனிதர்கள் ஒரு மணிநேரம் பேசியவுடன் களைப்படைந்து விடுகிறார்கள். ஒருசிலர் எவ்வளவு நேரம் பேசினாலும் களைப்படைவதே இல்லை.அவர்கள் பிராண சக்தியை சேமித்து வைத்து பயன்படுத்துவார்கள். மனிதனின் உயிர் அவன் சேர்த்து வைத்துதிருக்கும் பிராண சக்தியைப் பொறுத்து வீரியமாக இருக்கும். மொத்த பிராணன் இழந்தவுடன் நமது உயிர் நம்மை விட்டுப்பிரிகிறது. எனவே ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொள்ளவேண்டிய அத்தியாவசியமான விஷயம் பிராணன்.
பிராணன் எப்படி பரிமாற்றப்படுகிறது ?


உதாரணமாக இரண்டு பாத்திரத்தில் நீர் இருக்கிறது. ஒரு பாத்திரத்தில் 1௦௦ டிகிரி கொதிக்கும் தண்ணீரையும், இன்னொரு பாத்திரத்தில் 2௦ டிகிரி கொதிநிலை உள்ள தண்ணீரையும் ஒன்று சேர்த்தால் என்ன ஆகும். இப்பொழுது மொத்த தண்ணீரும் 4௦ அல்லது 50 டிகிரிக்கும் வந்துவிடும். அதிக சூடும் அதிக குளிர்ச்சியும் ஒன்று சேரும்போது தண்ணீர் இயல்பான நிலைக்கு வந்துவிடுகிறது. ஒரு பொருள் 1000 மதிப்பிற்கு பிராணன் இருக்கும்பொழுது, இன்னொரு பொருளில் 500 மதிப்பிற்கு பிராணன் இருந்தால், இரண்டும் சேர்த்து 1500 மதிப்புள்ள பிராணனாக மாறி, இரண்டு பொருளும் பிராணனை 750, 750 என்று சரிபாதியாக பிரித்துக்கொள்கிறது. இதுதான் பிராணன் பரிமாற்றப்படும் உண்மை. 


உதாரணமாக சில சாமியார்களை தொடக்கூடாது என்று கூறுவார்கள். ஏனென்றால் அவர்கள் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு பலவிதமான பயிற்சிகள் செய்து பிராணசக்தியை சேமித்து வைத்திருப்பார்கள். சாதாரண மனிதர்களும், நோயாளிகளும், உடலில் பிராணன் பற்றாக்குறையுள்ள மனிதர்களும் அவரைத் தொடும்பொழுது பிராணன் நோயாளியின் உடலுக்கு பாய ஆரம்பிக்கிறது. எனவேதான் பலர் தங்களைத் தொடக்கூடாது, தூரமாக நின்று பேசவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.


அக்குபஞ்சர், அக்குபிரசர், டச் ஹீலிங் சிகிச்சை,பிராண சிகிச்சை இதுதெல்லாம் இது சம்பந்தப்பட்டதுதான். நோயாளியை டச் தெரபி (அ) தொடு சிகிச்சை என்ற முறையில் ஒரு சிகிச்சையாளர் தொடும்பொழுது நோயாளியின் உடலில் பிராணனை அனுப்பி நோயையை குணப்படுத்த செய்கிறார்கள். மனத உடலில் வரும் அனைத்து நோய்களுக்கும் ஒரே மருந்து பிராணன். உங்களுக்கு என்ன நோய் உள்ளது என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சிகிச்சையாளர் தன் உடலில் உள்ள பிராணனை நோயாளிக்கு செலுத்துவதன் மூலமாக இந்தப் பிராணன் நோயாளியின் உடலில் சென்று, எந்த இடத்தில், எந்த உறுப்பில், எந்த மூலையில் நோய் இருக்கிறதோ அதை குணப்படுத்தும்.


எனவே தண்ணீர் எப்படி பள்ளத்தை நோக்கி ஓட்டுகிறதோ, பிராணன் பற்றாக்குறை உள்ள இடத்தை நோக்கி ஓட ஆரம்பிக்கும்.


சில நேரங்களில் நமது வீடுகளில் இரண்டு குழந்தை இருக்கும்போது ஒரு குழந்தைக்கு காய்ச்சல் வந்து படுத்திருக்கும். மற்றொரு குழந்தை ஆரோக்கியமாக விளையாடிக்கொண்டிருக்கும். இந்த ஆரோக்கியமான குழந்தை காய்ச்சல் வந்த குழந்தை பக்கத்தில் போய் தொட்டு விளையாடும்போது, ஆரோக்கியமான குழந்தையின் பிராண சக்தி, காய்ச்சல் வந்த குழந்தையின் உடலில் பாய்ந்து காய்ச்சல் குணமாகிவிடும். இப்பொழுது காய்ச்சல் வந்த குழந்தை குணமாகி பள்ளிக்கு சென்றுவிடும். ஆனால் ஆரோக்கியமான குழந்தை காய்ச்சல் வந்து வீட்டில் படுத்துவிடும். அதனால்தான், பலரும் சகுனம் பார்க்கிறார்கள். உதாரமாக விதவைகள், நோயாளிகள் குறுக்கே சென்றால் நாம் போகிற காரியம் விளங்காது என்று. அது அப்படி கிடையாது. அவர்கள் மனதால் வருத்தத்துடன் இருக்கும் போது பிராணன் குறைவாக இருக்கும். இப்படி நோயாளிகள், மனதால் வருந்தி அவஸ்தை படுபவர்கள் பிராணன் குறைவாக இருக்கும்போது அவர்களை தாண்டிச்செல்லும்பொழுதோ, அவர்களை தொடும்பொழுதோ, அவர்கள் அருகில் இருக்கும் பொழுதோ நமது பிராணன் உறியப்படுகிறது. இதனால் நாம் சக்தி இழக்கிறோம். எனவே தான் இதைப்போன்ற சகுனங்களை நம் முன்னோர்கள் பார்த்துகொண்டிருக்கிறார்கள். அனால் வேடிக்கை என்னவென்றால், அந்த விதவைப்பேன் மனதில் சந்தோசமாக யோகா செய்துகொண்டு, ஒழுங்காக சாப்பிட்டுக்கொண்டு பிராணன் அதிகமாக சேமித்து வைத்துக்கொண்டிருந்தால் நாம் செல்லும்போது அவர்களை தொடும்பொழுது நமக்கு பிராணன் கிடைக்கும் என்பதுதான் உண்மை. இதில் யார் என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. யாரிடம் பிராணன் இருக்கிறது என்று மட்டுமே பார்க்க வேண்டும். இப்பொழுதெல்லாம் குடும்பத்தில் உள்ளவர்கள்தான் பிராணன் இன்றி தவிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. 


ஒருவர் நோயாளியாக படுத்திருக்கும்போது ஏன் சொந்தக்காரர்கள் அவரைப் பார்க்க வருகிறார்கள் என்றால், ஆரோக்கியமாக உள்ள அனைத்து நண்பர்கள், உறவினர்கள் அவரைப் பார்த்து அருகில் அமர்ந்து, கவலைப்படாதே நான் இருக்கிறேன், தைரியமாக இரு என்று சொல்லும்போது பிராணன் பரிமாற்றப்படுகிறது. அப்பொழுது நோயாளிகள் குனமாவதற்கு மருந்து கிடைக்கிறது. எனவே நமது உறவினர் யாராவது உடல்நிலை சரியில்லாதபோது எல்லோரும் கிளம்பிப்போய் பார்க்கிறோம். அப்படி பார்க்கக்கூடாது. யார் ஆரோக்கியமாக இருக்கிறார்களோ நீங்கள் மட்டும்தான் போய்ப்பார்க்க வேண்டும். ஏற்கனவே நோயாளியாக இருக்கும் நபர்கள், பிராண சக்தி இல்லாத நபர்கள் பல நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்கள், மனதில் குழம்பிப்போய் இருக்கும் நபர்கள் நிம்மதியாக தூக்கம் இல்லாத நபர்கள் நோயாளியை பார்க்கச் செல்லக்கூடாது. அப்படி செல்லும்போது மேலும் அவரை நோயாளியாக ஆக்குகிறோம் என்பதுதான் உண்மை.
நானும் தொடுசிகிச்சை, அக்குபஞ்சர்,அக்குபிரஷர்,பிராண சிகிச்சை கற்றுக்கொண்டு, சில ஆண்டுகள் சிகிச்சை அளித்து வந்தேன். நான் தூக்கம் இல்லாதபோதோ, அல்லது மனதில் குழப்பம் இருக்கும்போதோ நான் யாருக்கும் சிகிச்சை அளிக்கமாட்டேன். எனவே நானே ஆரோக்கியம் இல்லாமல் இருக்கும்போது நோயாளியின் பிராணன் எனக்கு வர வாய்ப்பு உள்ளது. எனவே நாம் இந்த பிரபஞ்சத்தில் இருந்து பலவழிகளில் பிராணனை சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம்.


பிராணன் எந்தெந்த வழிகளில் நமக்கு கிடைக்கும் ?
1. உண்ணும் உணவின் மூலம் பிராணன் கிடைக்கிறது.
2. குடிக்கும் தண்ணீர் மூலம் பிராணன் கிடைக்கிறது.
3. மூச்சுக்காற்றின் வழியாக பிராணன் கிடைக்கிறது.
4. தூங்கும்போது பிராணன் கிடைக்கிறது.
5. குளிக்கும்போது அந்த நீர் மூலமாக உடலுக்கு பிராணன் போகிறது.
6. நமது எண்ணங்கள் அமைதியாக, நிம்மதியாக இருக்கும்போது சக்கரங்கள் மூலமாக நமது உடலுக்கு பிராணன் செல்கிறது. 


இப்படி பல வழிகளில் நாம் பிராணனை சம்பாதித்து கொண்டிருக்கிறோம். பல வழிகளில் பிராணனை செலவு செய்துகொண்டும் இருக்கிறோம். கண் பார்ப்பதற்கு பிராணன் தேவைப்படுகிறது. படிப்பதற்கு, நடப்பதற்கு பிராணன் தேவைப்படுகிறது. உடல், மனம், புத்திக்குள் வேலை கொடுக்கும்பொழுது நமது பிராணன் செலவாகிறது.

எவ்வகை தண்ணீரில் குளிக்கலாம் ?
கொதிக்க வைத்த தண்ணீரில் குளிக்கக்கூடாது. ஏனென்றல் தண்ணீரை கொதிக்க வைக்கும்பொழுது தண்ணீரில் உள்ள பிராணன், ஆற்றல்(சக்தி) தண்ணீரைவிட்டு வெளியே சென்றுவிடுகிறது. தண்ணீரில் உள்ள உயிர்சத்துப்பொருட்கள், ஆர்கானிக் பொருட்கள் கொதிநிலையில் அனைத்தும் ஆவியாகிவிடும். இந்த கொதிக்கவைத்த தண்ணீரில் நாம் குளிக்கும்போது நாம் ஏற்கனவே பார்த்ததுபோல பிராணன் இல்லாத பொருளுக்கு, பிராணன் உள்ள பொருளிலிருந்து பிராணன் பரிமாற்றப்படும் என்ற நியதிப்படி கொதிக்கவைத்த தண்ணீரில் குளிக்கும்போது அந்த பிராணன் இல்லாத தண்ணீர் நமது உடல் வழியாக கடக்கும்பொழுது, உடலில் உள்ள அனைத்து பிராணனையும் எடுத்துவிட்டு பாத்ரூம் வழியாக வெளியேறிச் செல்கிறது. 


கொதிக்கவைத்த தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ஆபத்து. எனவே இனி வாழ்நாளில் கொதிக்கவைத்த தண்ணீரில் குளிக்க வேண்டாம்.
குளிர்ச்சியான நீரில் குளிக்கலாமா ? 


குளிர்ச்சியான நீரிலும் குளிக்கக்கூடாது. நமது உடலின் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் இருந்தால் அதுதான் ஆரோக்கியம். குளிர்ந்த நீரில் குளிக்கும்போது நமது தோளில் உள்ள அனைத்து செல்களும் அந்த குளிர்ந்த நீரை 37 டிகிரி செல்சியஸ் ஆக மாற்றுவதற்கு அதிக வேலை செய்யவேண்டியிருக்கிறது. அதனால் இந்த மாற்றத்திற்கு அதிக சக்தி(ஆற்றல்) செலவாகிறது. எனவே குளிர்ந்த நீரிலும் குளிக்கக்கூடாது.

எந்த தண்ணீரில் குளிக்கலாம் எவ்வளவு சூடாக குளிக்கலாம் ?
தண்ணீரை கொதிக்கவைத்து குளிக்கக்கூடாது. குளிர்ந்த நீரிலும் குளிக்கக்கூடாது. ஆனால் நீரை விலாவி குளிக்கலாம். அது என்ன விலாவி குளிக்கலாம்? கிராமங்களில் வழக்கமாக நாம் கேள்விப்படும் வார்த்தை, “தண்ணீர் விலாவி வைத்திருக்கிறேன், போய் குளிங்க” என்பது. அதாவது நாம் ஒரு வாளி தண்ணீரில் குளிக்கிறோம் என்றால், பாதி வாளி தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்து சூடுசெய்து, பாதி வாளி தண்ணீரை கொதிக்க வைக்காமல் பிராணன் இருக்கும் தண்ணீரை கொதிக்கவைத்த பிராணன் இல்லாத தண்ணீருடன் சேர்த்து குளிக்கும்போது அந்த தண்ணீரில் சூடும் இருக்கும், பிராணனும் கிடைக்கும். இது உடலுக்கு ஆரோக்கியமான குளியல். எனவே இனி நம் வாழ்நாளில் முழுவதும் கொதிக்கவைத்த தண்ணீரில் குளிக்கவேண்டாம். 


குளிர் பிரதேசங்களில் நாம் வெந்நீரில் தான் குளிக்கவேண்டும். அதிக உஷ்ணம் உள்ள நாடுகளில் குளிர்ந்த நீரில் தான் குளிக்கவேண்டும். குளிரும் இல்லாத, உஷ்ணமும் இல்லாத மிதவெப்ப நாடுகளில் சாதாரண(Room temperature) வெப்பநிலையில் உள்ள தண்ணீரில் குளிக்கலாம். எனவே நாம் குளிக்கும் தண்ணீரின் வெப்பநிலை நாட்டுக்கு நாடு மாறுபடும். ஒவ்வொரு தட்பவெப்ப நிலைக்கும் மாறும். ஆனால் நமது உடலின் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்குமாறு குளிக்கவேண்டும். அதற்கு பாதகம் வருமாறு நாம் குளிக்கக்கூடாது.


பாஸ்கர்