இந்த வலையதளத்தில்உள்ள நல்ல செய்திகள் என்னைச் சார்ந்த பல நண்பர்களுக்குசென்றடைய வேண்டும்என்ற நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டது. இதுவரை நான்பதிவிட்டபதிவுகளும்,இனி பதிவிடப்போகும்பதிவுகளும்எனது சொந்தபடைப்புகள்அல்ல. பலபதிவர்கள்எழுதிய நல்லபதிவுகளைத்தான்இங்குதொகுத்துள்ளேன்.

வியாழன், 1 மார்ச், 2012

73 குளிர்பானங்களை அதிக அளவில் அருந்துபவர்களுக்கு ஆஸ்துமா இலவசம்!

பெப்சி, கோகோ-கோலா மற்றும் இதர குளிர்பானங்களை தினமும் அதிக அளவில் அருந்தி வருபவரா நீங்கள்? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்குத்தான். அதிக அளவில் இவற்றை அருந்துபவர்களுக்கு ஆஸ்துமாவும், நுரையீரல் நோயும் வர அதிக வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. 

ஆஸ்திரேலியாவிலுள்ள அடிலெய்ட் பல்கலைக் கழகத்திலுள்ள ஆராய்ச்சியாளர்கள் சூமின் சீ என்பவர் தலைமையில் ஒரு குழுவாக தீவிர ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டனர். அதாவது மார்ச் 2008 முதல் ஜூன் 2010 வரை இரண்டு வருடங்களில் அதிக அளவில் குளிர்பானங்களை அருந்தியவர்களை ஆராய்ச்சி செய்தனர். கிட்டத்தட்ட 16,907 நபர்களை இவ்வித ஆராய்ச்சிக்கு உட்படுத்திய போது முடிவுகள் திடுக்கிடச் செய்தன. 
இவ்வித குளிர்பானங்களில் கோக், பெப்சி லெமன் ஜூஸ், மினரல் வாட்டர் முதலியவையும் அடங்கும்.

தெற்கு ஆஸ்திரேலியா பகுதியில் உள்ள வயதுக்கு வந்த பையன்கள் மற்றும் பெண்களில் பத்தில் ஒருவர் தினமும் இவ்வித குளிர்பானங்களை அரை லிட்டருக்கும் அதிகமாக அருந்தி வந்தனர். இவ்வித நபர்களிடம் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய் (மூச்சுத்திணறல்) வரும் வாய்ப்பு மிக அதிகமாக இருந்தது. 

மொத்தத்தில் தினமும் அரை லிட்டருக்கும் அதிகமாக இவ்வித குளிர்பானங்களை அருந்தி வந்தவர்களில் 13.3 சதவீதம் மக்கள் ஆஸ்துமாவினாலும் 15.6 சதவீதம் மக்கள் மூச்சுக்கோளாறு பிரச்சினையினாலும் பாதிக்கப்பட்டிருந்தனர். சிகரெட் புகைப்பவர்களுக்கு பாதிப்பு அதை விட அதிகமாக இருந்ததாம். 

ஆகையால் நம்ம ஊரு இளநீர், மோர், தயிர் போன்ற பானங்களே மிகச்சிறந்தவை ஆகும். ஓ.கே.வா மக்களே?!

72 வாழை இலையில் சாப்பிடுவது உண்மையில் நல்லதா? 2




இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம். அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன? பார்ப்போம்.

முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும். அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். 

தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும். இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும். 

காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன்தான் தமிழன். எந்த வித நச்சும் முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எந்த இடத்திலும் வாழைமரத்தை பயிரிட்டு தயாராக வைத்திருந்தான். ஆகவேதான் திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான். 

இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு. 

நாம் சாப்பிடும் தட்டை எவ்வளவு சுத்தப்படுத்துகிறோம்? தண்ணீர் விட்டு அல்லது வெந்நீர் விட்டு நன்றாக அலசி காயவைத்து எவ்வளவு சுகாதாரமாக பயன்படுத்துகிறோம். ஆனால் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு நோய்கள் வருகின்றன. ஆனால் வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? 

நம்முடைய திருவிழாக்களிலும், திருமண வீடுகள், சடங்கு வீடுகள் மற்றும் எல்லா விழாக்களிலும் சாப்பிட வாழை இலை போடும்போது கவனித்திருக்கிறீர்களா? (இப்போ பெரும்பாலும் இந்த பழக்கம் மறைந்து பேப்பரில் சாப்பிடுகிற பழக்கம் வந்து விட்டது. என்னே பரிதாபம்?!) அவ்விடங்களில் எல்லாம் வாழை இலையை முற்றிலும் சுத்தப்படுத்தியா சாப்பிடுகிறோம். ஏதோ பெயருக்கு கொஞ்சம் தண்ணீர் தெளித்து விட்டு சாப்பிட ஆரம்பித்து விடுகிறோம். 

சிலருக்கு இலைகளில் தூசி, தும்புகள், அழுக்கு என்று என்னவெல்லாமோ இருக்கும். தெளிக்கும் தண்ணீர் கூடு எவ்வளவு அசுத்தமும் கிருமிகளும் நிறைந்ததாகக் கூட இருக்கும். ஆனால் பாருங்கள். அவ்விதமாய் சாப்பிடுபவர்களுக்கு ஏதாவது வியாதி வந்து அல்லது வயிற்றுக் கோளாறு வருகிறதா? இல்லையே. காரணம் என்ன தெரியுமா? வாழை இலையின் மகிமைதான். எவ்வித கிருமியையும் அழித்துவிடக் கூடிய அதன் மருத்துவத் தன்மைதான். 

ஆகவே மக்களே! இனியாவது தட்டுகளுக்கு பதில் கூடுமானவரை வாழை இலையைப் பயன்படுத்துங்கள். வியாதியின்றி வாழுங்கள்!

வாழ்க நலமுடன் !
Thanks
http://duraidaniel.blogspot.in