இந்த வலையதளத்தில்உள்ள நல்ல செய்திகள் என்னைச் சார்ந்த பல நண்பர்களுக்குசென்றடைய வேண்டும்என்ற நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டது. இதுவரை நான்பதிவிட்டபதிவுகளும்,இனி பதிவிடப்போகும்பதிவுகளும்எனது சொந்தபடைப்புகள்அல்ல. பலபதிவர்கள்எழுதிய நல்லபதிவுகளைத்தான்இங்குதொகுத்துள்ளேன்.

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

111 வெறும் தரையில் படுத்து உறங்கக் கூடாது. ஏன்?



ஆன்மீகம் - பூதம் தூக்கிப் போய்விடும் (குழந்தைகளுக்காக).
அறிவியல் - புறச் சுழ்நிலைகளால் தரையின் வெப்ப நிலை அதிகமாக இருக்கும்.
நம் உடல் வெப்ப நிலையோடு ஒப்பிடும்போது இது மிக அதிகம்.
இதனால் இரத்த ஓட்டம் தடைபடும் மற்றும் குன்றிவிடும்.
(உ.ம் - சூடான தோசைக் கல்லில் நீர் தெளித்தல்).
இதனால் இரத்தம் மற்றும் வெப்பம் சம்மந்தமான வியாதிகள் வரும்.

புதன், 13 ஆகஸ்ட், 2014

110 அந்த பயில்வானும் இதைத்தானே செய்தாரு?




கறுப்புநிறக் குச்சிகள் கொண்ட பல்துலக்கும் பிரஷ்ஷை அறிமுகப்படுத்தியிருக்கிறது கோல்கேட் நிறுவனம். அதில் கரித்தூள் (charcoal) இருக்கும் என்றும் அதனால் வெள்ளைக்குச்சிகள் கொண்ட பிரஷ்ஷைவிட இது நன்றாக ஊடுருவி பற்களைத் துலக்கும் என்றும் விளம்பரம் செய்யப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட கோல்கேட் உப்பு (salt) பேஸ்ட்டும் சந்தையில் விற்பனையாகி வருகிறது.

இதே கோல்கேட் நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று 30 ஆண்டுகளுக்கு முன் திரையரங்குகளில் படம் போடுவதற்கு முன் திரையிடப்பட்டு வந்தது.

ஒரு பயில்வான் அதிக எடையைத் தூக்கி பலத்த கைதட்டலுடன் பரிசு வாங்குவார். அவ்வளவு எடையைத் தூக்கிய அந்த பயில்வான் ஒரு சாதாரண சோளக்கதிரைக் கடிக்கும்போது பல்வலியால் துடிப்பார். அதிலிருந்து மீள்வதற்கு, கரித்தூளும் உப்பும் கலந்த கலவையால் பல்துலக்கத் தயாராவார் பயில்வான். அப்போது ஒரு குரல் ஒலிக்கும்.

“உடம்புக்கு பாலும் பாதாமும். பல்விளக்க உப்பும் கரித்தூளுமா?” எனக் கேட்டு, கோல்கேட் டூத்பவுடரை பயன்படுத்தும்படி அந்தக் குரல் பரிந்துரைக்கும். உப்பும் கரித்தூளும் வேஸ்ட். கோல்கேட் டூத்பவுடரும் டூத்பேஸ்ட்டும் சிறந்தவை என்றும் நல்ல பலன்தரக்கூடியவை என்றும் விளம்பரம் செய்து, சந்தையை ஆக்கிரமித்து, வியாபாரத்தைப் பெருக்கிய அதே கோல்கேட் நிறுவனம்தான், உப்பு பேஸ்ட்டையும் கரித்தூள் பிரஷ்ஷையும் இப்போது வியாபார நோக்கத்துடன் விளம்பரம் செய்கிறது.

30 ஆண்டுகளுக்கு முன் உப்பையும் கரித்தூளையும் தவிர்க்கச் சொன்ன கோல்கேட், இப்போது அந்த இரண்டையும் வைத்து பல் துலக்கச் சொல்கிறது. இதைத்தானே அந்த பயில்வானும் செய்தார்?

பெருநிறுவனப் பயில்வான்களிடம் உண்மையான பயில்வான்களே ஏமாறும்போது விளம்பரங்களைப் பார்த்துப் பொருட்களை வாங்கும் சாதாரணமானவர்களான நாமெல்லாம் எம்மாத்திரம்?

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

109 உருமாலை ஏன்?


நம் மரபுகளை நன்கு உணர்ந்து பின்பற்றி வரும் பலர் இருந்தாலும், மேற்குநாட்டு கலாச்சாரம் மற்றும் முற்போக்கு எண்ணங்கள் கொண்ட 'சிலர்' நம் நாட்டு மரபுகளையும் கலாச்சாரத்தையும் பிற்போக்கு என்று எண்ணிகொண்டிருக்கிறார்கள்.
அதில் ஒன்றான நம் முன்னோர்களின் கண்டுபிடிப்பான உருமாலை கட்டை பற்றி பார்ப்போம். கறுப்பு நிறம் என்பது சூரியனின் வெப்ப கதிரியக்கங்களை முழுமையாக இழுத்துக்கொள்ள கூடியது. அதனால் சீக்கிரமே தலை சூடாவது அனைவரும் அறிந்ததே.
நமது மூளை தலைக்குள் ஒரு திரவத்தின் உள்ளே மிதந்து கொண்டிருக்கிறது. அந்த திரவம் சூடேறினால் தலைவலி முதல் மூளை கோளாறு வரை அனைத்து வகை பாதிப்புக்களும் வெப்ப அயர்ச்சியால் மூளை சாவும் கூட ஏற்பட வாய்ப்புண்டு. அந்த திரவ படிமம் தலையின் முன்பாகம் (நெற்றி) துவங்கி பின்னால் வரை படர்ந்து உள்ளது.
உருமாலை கட்டு என்பது வெள்ளை பருத்தி நூலால் நெய்யப்பட்ட துண்டை கொண்டுதான் கட்டப்படும். உருமாலை கட்டு சரியாக அந்த திரவம் உள்ள பகுதிகளை முழுமையாக மூடிவிடும்.
அதுவுமன்றி வெள்ளை நிறம் என்பதால் தலையில் விழும் அனைத்து சூரிய வெப்ப கதிரையும் திருப்பி அனுப்பி விடும் ( வெள்ளை நிறம் வெப்ப ஒளிக்கற்றைகளை 100% Reflect பண்ணும் இயல்புடையது ).
அதுவுமன்றி ஈர்க்கப்படும் சிறு அளவு வெப்பமும் தலைக்குள் செல்லாதவாறு பல அடுக்கு பருத்தி துண்டு பார்த்துக்கொள்ளும். தலைக்கு காற்றோட்டம் நன்றாக கிடைக்கும் பருத்தியின் இயற்கையான குளிர்ச்சி, ஈரத்தை / வியர்வையை உறியும் தன்மை போன்றவற்றால் கிடைக்கும் சுகம் அதை கட்டுவோருக்கே தெரியும்
நம் முன்னோர்கள்.நமது தலையை சூரியனின் வெப்பத்தில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காகவே கண்டுபிடித்ததுதான் இந்த உருமாலை கட்டு இன்று கடைகளில் கிடைக்கும் தொப்பிகள் நம்மை அடிமையாக வைத்திருந்த வெள்ளைக்காரன் அறிமுக படுத்தியதுதான்
தொப்பிகள் தலையை கவ்வி நிற்கும் காற்றோட்டம் கிடையாது குளிர்சியற்ற தன்மை மற்றும் அதை அணிவதால் தலையில் ஏற்படும் வியர்வை போன்றவற்றை விட நமது உருமாலை எவ்வளவோ மேல். மேலும் தொப்பிகள் பெரும்பாலும் வெள்ளை நிறம் அல்லாது பிற வர்ணங்களிலேயே வருகிறது.
நமது நாடு வெப்ப பிரதேசம் கொண்டது பருத்தியால் நெய்யப்பட்ட ஆடைகளை அணிவது நமது உடல்நலனுக்கு மிகவும் ஏற்றது
தொப்பிகள் பருத்தியால் அதிகமாக நெய்யப்படுவதில்லை ( கதர் குல்லாய் இதற்கு விதி விலக்கு ) உருமாலை கட்டும்போது கிடைக்கும் பெருமித உணர்வுக்கென்றே கட்டலாம்
நன்றி

புதன், 6 ஆகஸ்ட், 2014

108 விசிறி பற்றி நீங்கள் அறியாத தகவல்....



பனை விசிறி:
சுவை இன்மையைப் போக்கும், வாத, பித்த, கப நோய்களைப் போக்கும்.

மயில் தோகை விசிறி:
அறிவை வளர்க்கும், தலை சுற்றலை போக்கும், விக்கல் மற்றும் வயிறு வலி நீங்கும்.

வெட்டிவேர் விசிறி:
தேக எரிச்சல், நீர் வேட்கை நீங்கும், மன ஊக்கத்தைக் கொடுக்கும்

நன்றி
Krishnamurthi ASவேளாண்மை [Agriculture]